திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எதிர்ப்பு சக்தி ஊடுருவலா?: தேவஸ்தான அர்ச்சகர்கள் விளக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு. இவர் தேவஸ்தானம் குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்து வெளியிடுவார். இதேபோன்று அண்மையில் ரமண தீட்சிதலு ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதில், ‘ஏழுமலையான் கோயிலுக்குள் பிராமண எதிர்ப்பு சக்திகள் ஊடுருவியிருப்பதாகவும், கோயில் கொள்கைகளுடன் அர்ச்சகர் முறையையும் அவர்கள் அழிப்பதற்குள் முதல்வர் ஜெகன்மோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஏழுமலையான் கோயிலின் தற்போதைய தலைமை அர்ச்சகர்களான வேணுகோபால தீட்சிதர், கோவிந்தராஜு தீட்சிதர், கிருஷ்ண … Read more

அசோக் கெலாட் விலகல்.. களத்தில் தொடரும் சசிதரூர் – காங். தலைவர் தேர்தலில் தொடரும் பரபரப்பு

ராஜஸ்தான் மாநில முதல்வராக சச்சின் பைலட்டை தேர்வு செய்தால், அசோக் கெலாட்டின் ஆதரவு 90 எம்.எல்.ஏகள் ராஜினமா செய்வோம் என அறிவித்தனர். இதனை தொடர்ந்து, காங்கிரஸுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கவே அசோக் கெலாட்டின் மீது சோனியா காந்தி அதிருப்தியிலிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அசோக் கெலாட்டின் தற்போது அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செப்.24 முதல் செப். 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும், … Read more

அசோக் கெலாட் அதிரடி முடிவு… காங்கிரசில் அடுத்தது என்ன?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற் உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கலும் நடைபெற்று வரும் நிலையில், நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியின் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக்கிவிடலாம் என்று சோனியா காந்தி முடிவெடுத்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு ராகுல், பிரியங்கா ஆகியோரும் ஆதரவு தெரிவிக்க, அசோக் கெலாட் தான் காங்கிரசின் … Read more

திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு: கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

டெல்லி: திருமணம் ஆகாதவர்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவரால் மனைவிக்கு நடந்தாலும்  பலாத்காரம் என்பது பலாத்காரமே என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பம் அடைந்த பிறகு திருமணம் பந்தம் ஏற்படாமல் போனது. திருமணம் ஆகாதவர் என்ற காரணத்தை சுட்டிகாட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்து விட்டனர். … Read more

திருமணம் ஆகாத பெண்ணும் கருக்கலைப்பு செய்யலாம்; கணவன் என்றாலும் பலவந்தம் குற்றமே: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் என வேறுபடுத்தாமல் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்புக்கு பாகுபாடு காட்டுவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கணவராக இருந்தாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்பட வேண்டும். இரு வயதுவந்த நபர்கள் ஒருமித்த கருத்துடன் உறவு கொண்டு எதிர்பாராமல், திட்டமிடாமல் கர்ப்பம் தரிக்க நேர்ந்தால், அந்தக் கரு 20 முதல் 24 வாரங்கள் வளர்ச்சியைத் … Read more

ஜம்முகாஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

காஷ்மீர்: ஜம்முகாஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏறுபடுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் வருகைதர இருக்கும் நிலையில் உதம்பூர் காவல் நிலைக்கு உட்பட டொமைன் சொயில் பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பேருந்தில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வெடிகுண்டு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டில் நடத்துனர் மற்றும் அவருடைய நண்பர் காயமடைந்தனர். பெட்ரோல் நிலையத்தில்  … Read more

காங். தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டி – சசிதரூரின் சர்ப்ரைஸ் பதிவு!

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் மட்டும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வது உறுதியாக உள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் அவருக்கு பதிலாக … Read more

துள்ளிக் குதித்த இளம்பெண்… ஆசுவாசப்படுத்திய ராகுல் காந்தி – ஒற்றுமை யாத்திரையில் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அவருடைய யாத்திரை 19-ஆம் நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், யாத்திரையின்போது அவரைப் பார்த்து துள்ளிக் குதித்து உணர்ச்சிவசப்பட்ட இளம் பெண்ணை அவர் ஆசுவாசப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆயிரம் மைல் நடக்கலாம்: தமிழ்நாட்டில் அவர் யாத்திரை மேற்கொண்டபோது நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சில பெண்கள் ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டு மணமகள் கொண்டு வருகிறோம் … Read more

காங். கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து விலகினார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்..!!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விலகினார். ராஜஸ்தானில் நடந்த உட்கட்சி பூசல்கள் தொடர்பாக சோனியா காந்தியிடம் அசோக் கெலாட் மன்னிப்பு கோரினார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின் போட்டியில் இருந்து விலகுவதாக அசோக் கெலாட் பேட்டியளித்தார். ராஜஸ்தான் முதலமைச்சராக நான் தொடர்வதா? இல்லையா? என்பதை சோனியா காந்தி முடிவு செய்வார் எனவும் கெலாட் கூறினார்.

ரூ.11 லட்சம் காருக்கு சர்வீஸ் சார்ஜ் 22 லட்சமா? -போலோ ஷோரூமின் ரசீதால் நொந்துப்போன கஸ்டமர்

பெங்களூருவில் நிகழ்ந்த பெரு வெள்ளத்தை கண்டு கர்நாடகா மட்டுமல்லாமல் நாடே பெரும் அதிர்ச்சிக்கு ஆளானது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொழிந்த மழையால் ஐ.டி. நகரம் நீரில் மூழ்கியது பெங்களூரு வாசிகளை பெருமளவில் பாதிக்கச் செய்தது. அதிலும் வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்களை மீட்டு அவற்றை சரிசெய்ய பெங்களூரு மக்கள் படாத பாடு படவேண்டியதாய் போனது. ஆகையால் ஆடி, லெக்ஸஸ் போன்ற ஃப்ரீமியம் கார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்திருந்தது. ஆனால் அதே பெங்களூருவைச் சேர்ந்த … Read more