இறந்துபோன சகோதரிக்கு சிலை வைத்து ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய உடன் பிறப்புகள்

காக்கிநாடா: சாலை விபத்தில் இறந்துபோன சகோதரிக்கு சிலை வைத்து ஆந்திராவில் ரக்ஷா பந்தன் பண்டிகையை சகோதர, சகோதரிகள் கொண்டாடினர். ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், சங்காவரம் மண்டலம், கத்திபூடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் மணி (29). இவருக்கு கணவர் மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் மணி உயிரிழந்தார். இவரது மரணம் கணவர், பிள்ளைகள் மட்டுமின்றி மூத்த சகோதரி வரலட்சுமி, அண்ணன் சிவா மற்றும் தம்பி ராஜு ஆகியோரையும் மிகவும் … Read more

மருத்துவம், என்ஜினியரிங் படிப்புக்கு ஒரே நுழைவு தேர்வு: ஒன்றிய அரசு பரிசீலனை

புதுடெல்லி: நமது நாட்டில் தற்போது மருத்துவ படிப்புகளில் ‘நீட்’ என்னும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒன்றிய  அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிற என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி.களிலும், குறிப்பிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பப்படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு உள்ளது. இந்த நிலையில் நீட், ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வுகளையும் தற்போதுள்ள ‘கியூட்’ என்று அழைக்கப்படுகிற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுடன் (இளநிலை) இணைப்பதற்கான … Read more

இந்தியா சீனா இடையே நல்ல உறவு இல்லை : வெளியுறவுத்துறை அமைச்சர்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா சீனா இடையேயான உறவு எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், சீனா தொடர்ந்து இந்திய எல்லையில் அமைதியை சீர்குலைத்து வருவதாக தெரிவித்தார். சீனாவின் இந்த நடவடிக்கைகளால் இந்தியா சீனாவிற்கு இடையான உறவு எப்போதும் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்பு இருக்காது என்றும் தெரிவித்தார். மேலும் இந்திய – சீன எல்லையில் தற்பாது இந்திய ராணுவம் முகாமிட்டுள்ளதாகவும் … Read more

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தினர் 10 பேரை திருப்பி அனுப்பிய போலீஸார்

சில்ஷர்: உரிய அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைந்த இரண்டு சிறுவர்கள் உள்பட வங்கதேசத்தினர் 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இருநாட்டுக்கு இடையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அசாம் மாநில காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 4 பேர் கோலகாட் மாவட்ட ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள். எஞ்சிய அனைவரும் கரீம் கஞ்ச் மாவட்டத்தில் … Read more

வீடு, அலுவலகம் உள்ளிட்ட அணைத்து இடங்களில் தேசிய கோடி: பிரதமர் மோடி கோரிக்கை

டெல்லி: 75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அணைத்து வீடு, அலுவலகம், உள்ளிட்ட அணைத்து இடங்களிலும் தேசிய கோடி ஏற்றுமாறு பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடுமுழுவதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கூடாது : பிசிசிஐ

பல ஐபிஎல் உரிமையாளர்கள் வெளிநாடு டி20 லீக்குகளில் அணிகளை வாங்குவதால், எந்த ஒரு இந்திய வீரரும் அவர்களின் அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த ஒரு வெளிநாட்டு டி20 லீக்குகளிலும் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. மேலும் அவர்கள் பங்கேற்க விரும்பினால் “அவர்கள் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகள் மற்றும் காண்ட்ராக்ட்டுகளை முறித்து கொள்ள வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் … Read more

ரூ.20 லட்சம் கல்வி கடனுக்கு ரூ.19 கோடியில் விளம்பரம் – ஆம் ஆத்மி மீது பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது: டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் எப்படி தலைவர் ஆனார்? ஆம் ஆத்மி எப்படி ஆட்சிக்கு வந்தது? இவை எல்லாமே குறுகிய கால பலன் அளிக்கும் இலவச அறிவிப்புகள் மூலம்தான். தூண்டில் புழு போல, அவர்கள் இலவசங்களை அறிவிக்கிறார்கள். உலகத்தின் மீது அக்கறை இருப்பது போல் கேஜ்ரிவால் நடிக்கிறார். பிரதமர் மோடியின் அணுகுமுறை எல்லாம் இலக்குகளுடன் கூடிய நலத்திட்டங்கள். ரூ.20 லட்சம் கல்வி கடன் விளம்பரத்துக்காக ரூ.19 … Read more

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி இன்று தனது இல்லத்தில் விருந்தளிக்க உள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி உட்பட 61 பதக்ககங்கள் வென்று பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

”லேட் நைட்டுல வெளிய போகாதீங்க?” -பாலியல் தொல்லை பற்றிய பெண்ணின் பதிவுக்கு சர்ச்சை கருத்து!

இந்தியாவில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகி கிடக்கிறது. பாலியல் தொல்லைகள், வல்லுறவுகள், குடும்ப வன்முறைகள் என பல பரிமானங்களில் பெண்களும், பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருவதோடு, இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள்தான் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கும் ஆளாகுகிறார்கள். அந்த வகையில், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பெண் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்த பதிவுக்கு பயனர் ஒருவர் “இரவு நேரத்தில் வெளியே செல்லாமல் வீட்டில் இருங்கள்” என … Read more

காசோலை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ஜீவிதா

திருப்பதி: காசோலை மோசடி வழக்கில் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆந்திர மாநிலம், நகரி நீதிமன்றத்தில் ஆஜரானார். ‘கருட வேகா’ எனும் தெலுங்கு படத்தில் நடிகர் ராஜசேகர் கதாநாயகனாகவும், ஸ்ரத்தா தாஸ் ஜோடியாகவும் நடித்திருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை, ஆந்திர மாநிலம், நகரி அருகே உள்ள மகாராஜபுரம் சாய் சக்தி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் கோட்டீஸ்வர ராஜு வின் மனைவி வேமு ராஜு தயாரித்திருந்தார். இவருக்கு நடிகை ஜீவிதா ராஜசேகர் ரூ.26 கோடிக்கு 2 காசோலைகளை … Read more