2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி : 2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அலங்கார ஊர்தி மாதிரிகளை செப்.30-க்குள் அனுப்ப தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி வழக்கமான நடைமுறைகளின்படி முப்படைகளின் அணிவகுப்பு, துணை ராணுவ படைகள், டெல்லி காவல்துறை ஆகியவற்றுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் அலங்கார அணிவகுப்பு இடம்பெறும். … Read more

இயற்கையின் மீது இத்தனை ஆர்வமா? கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு 3200 KM பயணித்த ம.பி. தம்பதி!

இயற்கையை காப்பாற்றுவதற்காக கார்ப்பரேட் வேலையை உதறித்தள்ளிவிட்டு 3200 கிலோ மீட்டர் தொலைவுக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவர் ட்ரெக்கிங் செய்திருக்கிறார்கள். புதுவிதமான சுற்றுலா அனுபவங்களை பெற ட்ரெக்கிங் உள்ளிட்ட சாகச பயணங்களை சிலர் மேற்கொள்வர். ஆனால் இப்படியான சாகச பயணங்களை மேற்கொண்டு பல சமூக பிரச்னைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிகில், பரிதி என்ற தம்பதி சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் … Read more

பி.எஃப்.ஐ., தடையை எதிர்த்து போராட்டம்? நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, பிரதமர் மோடி மீது தாக்குதல் … Read more

கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்..சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு 7 தலைகள் கொண்ட ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதி உலா வந்தார். 2வது நாளான இன்று காலையில் 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வளம் வந்து பக்தர்களுக்கு … Read more

`தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்கின்றீர்கள்'- தமிழக அரசுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம் ஆத் ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் `இத்தகைய மனுவை அரசு தாக்கல் … Read more

சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. 3 மாணவிகள் ஆற்றில் மூழ்கி பலி..!

ஆந்திராவில், பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் சிந்தூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது சகிலேறு ஆற்றில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14), சுவர்ண கமலா(14), கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகளைத் தேடத் தொடங்கினர். நீண்ட நேர … Read more

திருப்பதி-திருமலை இடையே 50 பேட்டரி பேருந்து சேவை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்

திருப்பதி: திருப்பதி – திருமலை இடையே போக்குவரத்து வசதி காலத்துக்கேற்ப பல மாற்றங்களை கண்டுள்ளநிலையில் நேற்று முதல் பேட்டரி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். சுயம்புவாக திருமலையில் குடிகொண்டுள்ள திருமாலை முடியாட்சி காலம் முதல் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசித்து வருகின்றனர். முதன்முதலில் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபாதை மட்டுமே இருந்துள்ளது. இந்தப் பாதைகள் வழியாக சிறுவர்கள் முதற்கொண்டு, பெரியவர்கள் வரை நடந்தே திருமலைக்கு சென்று, அங்கேயே இரண்டொரு நாட்கள் … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவானது எப்படி? ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் பல்வேறு ஊர்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் என் ஐ ஏ நடத்தும் மிகப் பெரிய சோதனை இதுதான் என்றும் கூறப்பட்டது. என் ஐ ஏ மட்டுமல்லாமல் அமலாக்கத்துறையும் சோதனைகளை முடுக்கிவிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட … Read more

சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் செல்ல டெல்லி ரோஸ்அவென்யூ நீதிமன்றம் அனுமதி

டெல்லி : ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல டெல்லி ரோஸ்அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ரயில்வே முறைகேடு வழக்கில் ஜாமீனிலுள்ள அவர் அக்.10-25 வரை சிங்கப்பூரில் சிகிச்சை பெற அனுமதி கோரியிருந்தார்.

பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, 15 மாநிலங்களில் உள்ள 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, … Read more