3-வது முறையாக மின் கட்டணம் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!!

மின் உற்பத்திக்கான எரிபொருள் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளதால் அதை சரிசெய்வதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் யுனிட்டுக்கு சராசரியாக 35 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 25 முதல் 30 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது வருகிற மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கர்நாடக மின்சார ஒழுங்குமுறை … Read more

இளம்பெண் கொலை வழக்கில் மகன் கைதானதால் உத்தராகண்ட் பாஜக முன்னாள் அமைச்சர் நீக்கம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநில பாஜக மூத்த தலைவராக இருப்பவர் வினோத் ஆர்யா. இவர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இதில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரியை (19) கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார், அங்கிதாவை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் … Read more

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை ஆன்லைனில் பரப்பும் விவகாரம் நாடு முழுவதும் 59 இடங்களில் சிபிஐ சோதனை: ‘ஆபரேஷன் மேக் சக்ரா’ என்ற பெயரில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் அதிரடி

புதுடெல்லி: சிறுவர்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது, இணையதளங்களில் பகிர்வது தொடர்பாக நாடு முழுவதும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 59 இடங்களில் ‘ஆபரேஷன் மேக் சக்ரா’ என்ற பெயரில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இதில், 50க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வன்முறைகள் மற்றும்  இளம்பெண்களை கூட்டு பலாத்காரம் செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிறார்களுக்கு … Read more

சட்டப்பேரவை அலுவல் என்ன? இதுவரைக்கும் யாரும் இப்படி கேட்டதில்லை: ஆளுநர் மீது மான் பாய்ச்சல்

புதுடெல்லி: ‘சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக அதன் அலுவல்கள் என்ன என்பது குறித்து 75 ஆண்டுகளில் எந்த ஜனாதிபதியும், ஆளுநரும் கேட்டதில்லை,’  என்று பஞ்சாப் ஆளுநரை முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்க்க பாஜ முயல்வதாக, இக்கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம்சாட்டினார். இதனால், பஞ்சாப் சட்டப்பேரவையை கடந்த 22ம் தேதி கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இதற்காக, … Read more

பாப்புலர் பிரண்ட் போராட்டத்தில் வன்முறை கலவரக்காரர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூல் செய்யுங்கள்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினரின் முழு அடைப்பு போராட்டத்தில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட நஷ்டத்தை கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அலுவலகங்களில் நடந்த சோதனை, தலைவர்கள் கைதை கண்டித்து கேரளாவில் கடந்த 23ம் தேதி இந்த அமைப்பு முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. அப்போது நடந்த வன்முறையில் 75 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. தனியார் வாகனங்களும் சூறையாடப்பட்டன. ஆர்எஸ்எஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் … Read more

மியான்மரில் சிக்கி உள்ள இந்திய ஊழியர்களை அரசு மீட்பது கடினம்: வெளியுறவுத் துறை மறைமுக அறிக்கை

புதுடெல்லி: மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், ஆயுத கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்திய ஐடி பொறியாளர்கள் சிக்கி இருப்பதால், அவர்களை மீட்பது கடினம் என ஒன்றிய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வேலைவாய்ப்புக்காக  சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன், வேலை தருவதாக கூறியுள்ள வெளிநாட்டு முதலாளிகள், ஆட்சேர்ப்பு முகவர்களின் நற்சான்றிதழ்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். மியான்மரின் கயின் மாகாணத்தில் உள்ள மையவாடி பகுதி, முழுமையாக … Read more

உ.பி சட்டப்பேரவையில் செல்போனில் சீட்டு விளையாட்டு, குட்கா போடும் பாஜ எம்எல்ஏ.க்கள்

புதுடெல்லி: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்குள் பாஜ எம்எல்ஏ.க்கள் குட்காவை சாப்பிடுவதும்,  செல்போனில் சீட்டு விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் எம்எல்ஏ.க்களை யாரும் சோதனையிடுவது கிடையாது. எந்த பொருட்கள் வேண்டுமென்றாலும் அவர்கள் கொண்டு செல்லலாம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில், பாஜ எம்எல்ஏ ரவி சர்மா என்பவர் சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது குட்காவை எடுத்து சாப்பிடுகிறார். இவரின் இந்த செயலை சட்டப்பேரவைக்கு … Read more

ஆந்திர முதல்வர் அறிவிப்பு பாலாறு புல்லூர் தடுப்பணை ரூ.120 கோடியில் விரிவாக்கம்: தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் தொகுதியில் மகளிர் குழுவினருக்கான 3ம் கட்ட நிதியுதவி திட்ட தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: தமிழக-ஆந்திர எல்லையிலான திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புல்லூர் கனகநாச்சியம்மன் கோயில் அருகே பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை ரூ.120 கோடியில் விரிவாக்கம் செய்து அதிகளவில் தண்ணீர் சேமிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். ஏற்கனவே, முந்தைய ஆந்திர அரசுகள் புல்லூர் … Read more

கேரளாவில் மாஸ்க் அணிவது கட்டாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் முக கவசத்தை கட்டாயமாக்கும் அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து பொது இடங்களில் முக கவசம் அணிவது  கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் பெரும்பாலும் பொது இடங்களில் யாரும் முககவசம் அணிவதில்லை. இந்நிலையில் கேரளாவில் பொது இடங்களில் முக கவசத்தை கட்டாயமாக்கும் அவசர சட்டத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் … Read more

இந்தியாவில் கொரோனா நிலவரம்..! – மருத்துவ துறையினர் தெரிவிக்கும் மகிழ்ச்சியான செய்தி..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட சற்று குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உலக மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் இன்னும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிந்து விடாத நிலையில் மக்கள் இன்னும் அச்ச உணர்விலேயே இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக … Read more