வீடு, அலுவலகம் உள்ளிட்ட அணைத்து இடங்களில் தேசிய கோடி: பிரதமர் மோடி கோரிக்கை

டெல்லி: 75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அணைத்து வீடு, அலுவலகம், உள்ளிட்ட அணைத்து இடங்களிலும் தேசிய கோடி ஏற்றுமாறு பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடுமுழுவதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கூடாது : பிசிசிஐ

பல ஐபிஎல் உரிமையாளர்கள் வெளிநாடு டி20 லீக்குகளில் அணிகளை வாங்குவதால், எந்த ஒரு இந்திய வீரரும் அவர்களின் அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த ஒரு வெளிநாட்டு டி20 லீக்குகளிலும் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. மேலும் அவர்கள் பங்கேற்க விரும்பினால் “அவர்கள் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகள் மற்றும் காண்ட்ராக்ட்டுகளை முறித்து கொள்ள வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் … Read more

ரூ.20 லட்சம் கல்வி கடனுக்கு ரூ.19 கோடியில் விளம்பரம் – ஆம் ஆத்மி மீது பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது: டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் எப்படி தலைவர் ஆனார்? ஆம் ஆத்மி எப்படி ஆட்சிக்கு வந்தது? இவை எல்லாமே குறுகிய கால பலன் அளிக்கும் இலவச அறிவிப்புகள் மூலம்தான். தூண்டில் புழு போல, அவர்கள் இலவசங்களை அறிவிக்கிறார்கள். உலகத்தின் மீது அக்கறை இருப்பது போல் கேஜ்ரிவால் நடிக்கிறார். பிரதமர் மோடியின் அணுகுமுறை எல்லாம் இலக்குகளுடன் கூடிய நலத்திட்டங்கள். ரூ.20 லட்சம் கல்வி கடன் விளம்பரத்துக்காக ரூ.19 … Read more

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி இன்று தனது இல்லத்தில் விருந்தளிக்க உள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி உட்பட 61 பதக்ககங்கள் வென்று பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

”லேட் நைட்டுல வெளிய போகாதீங்க?” -பாலியல் தொல்லை பற்றிய பெண்ணின் பதிவுக்கு சர்ச்சை கருத்து!

இந்தியாவில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகி கிடக்கிறது. பாலியல் தொல்லைகள், வல்லுறவுகள், குடும்ப வன்முறைகள் என பல பரிமானங்களில் பெண்களும், பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருவதோடு, இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள்தான் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கும் ஆளாகுகிறார்கள். அந்த வகையில், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பெண் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்த பதிவுக்கு பயனர் ஒருவர் “இரவு நேரத்தில் வெளியே செல்லாமல் வீட்டில் இருங்கள்” என … Read more

காசோலை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ஜீவிதா

திருப்பதி: காசோலை மோசடி வழக்கில் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆந்திர மாநிலம், நகரி நீதிமன்றத்தில் ஆஜரானார். ‘கருட வேகா’ எனும் தெலுங்கு படத்தில் நடிகர் ராஜசேகர் கதாநாயகனாகவும், ஸ்ரத்தா தாஸ் ஜோடியாகவும் நடித்திருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை, ஆந்திர மாநிலம், நகரி அருகே உள்ள மகாராஜபுரம் சாய் சக்தி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் கோட்டீஸ்வர ராஜு வின் மனைவி வேமு ராஜு தயாரித்திருந்தார். இவருக்கு நடிகை ஜீவிதா ராஜசேகர் ரூ.26 கோடிக்கு 2 காசோலைகளை … Read more

ஒரே நாடு; ஒரே நுழைவுத் தேர்வு கியூட் தேர்வுடன் நீட், ஜேஇஇ தகுதி தேர்வுகளும் இணைப்பு: யுஜிசி அதிரடி திட்டம்

புதுடெல்லி:  ஒரே நாடு; ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த  பல்கலைக் கழக மானியக்குழு திட்டமிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மருத்துவத்துக்கு நீட் தேர்வு, என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி  ஆகிய கல்வி நிலையங்களில் உள்ள படிப்புகளுக்கு ஜேஇஇ, ஜேஇஇ அட்வான்ஸ், ஒன்றிய பல்கலைக் கழகங்களின் இளங்கலை, … Read more

வழக்கு விசாரணையில் சிறப்பான பணி | 5 போலீஸாருக்கு மத்திய அரசின் பதக்கம் – சிபிஐ ஆய்வாளர்கள் 2 பேருக்கும் அறிவிப்பு

சென்னை: வழக்கு விசாரணைகளின்போது திறமையாகப் பணியாற்றி, புலனாய்வில் சிறப்பாக செயல்படும் மத்திய புலனாய்வு முகமைகள் மற்றும் மாநில போலீஸாருக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கும் திட்டத்தை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது புலனாய்வில் நுணுக்கமாகச் செயல்படுபவர்களின் புலனாய்வு நிபுணத்துவத்துக்கு அங்கீகாரம் அளிப்பதாகும். அந்த வகையில், புலனாய்வில் திறம்பட செயலாற்றிய 2022-ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கத்துக்கு சிபிஐ.யில் இருந்து 15 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் சிபிஐ.யில் ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் எம்.சசிரேகா, டி.ஸ்ரீதர் … Read more

மகாராஷ்டிராவில் 75% அமைச்சர்கள் தில்லாலங்கடிகள்: பல கோடிக்கு அதிபதி

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 20 அமைச்சர்களில் 15 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்த பின்னர், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜ.வை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் இருக்கின்றனர். இவர்கள் பதவியேற்று 41 நாட்களுக்கு பின் கடந்த 9ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. … Read more

நிதீஷ் வெளியேற பின்னரும் சரியாத பிரதமர் மோடியின் செல்வாக்கு – 2024 தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும் என கணிப்பு

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (என்டிஏ) நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சி வெளியேறிய பின்னரும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரியவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் ஏக்நாத் … Read more