காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கெலாட்டை தேர்வு செய்வது பற்றி கருத்து கேட்பு: மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியுடன் சோனியாகாந்தி ஆலோசனை

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட்டை தேர்வு செய்வது குறித்து மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியுடன் சோனியாகாந்தி ஆலோசனை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது. காங்கிரஸ் தலைவர் பதவியேற்க ராகுல்காந்தி மறுத்ததை தொடர்ந்து அந்த பதவிக்கான தேர்தலில் களமிறங்க மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல் மந்திரியான அசோக் கெலாட்டை சோனியா கேட்டுக் கொண்டார். முதல்வர் … Read more

ராஜஸ்தான் சர்ச்சை எதிரொலி: காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் இணைகிறார் திக்விஜய் சிங்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் இந்தத் தேர்தலில் அக்கட்சியின் ஜி 23 தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இருவரும் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் … Read more

கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்றும், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை வேறுபடுத்துவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிக்க ஒரு பெண்ணின் திருமண நிலையை காரணம் காட்ட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. “தனியாக வாழும் அல்லது திருமணமாகாத பெண்களுக்கும் மருத்துவக் கருவுறுதல் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ் கருக்கலைப்பு செய்ய 24 வாரங்கள் வரை உரிமை … Read more

புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு: மின்துறை ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தால் புதுச்சேரியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் மின்வாரிய பொறியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஓர் இரவு சிறையில் தங்குவதற்கு உத்தராகண்ட்டில் ரூ.500 கட்டணம் – தோஷம் நீங்குவதற்கு பரிகாரம்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிறையில் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் தங்களுக்கு சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் போய்விடும் என்று அங்கு உள்ளவர்கள் நம்புகிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓர் இரவுக்கு ரூ.500 கொடுத்து விட்டு சிறையில் இருந்துவிட்டு வரலாம் என்ற திட்டம் இருக்கிறது. அதை போலவே தற்போது உத்தராகண்ட் மாநிலத்திலும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாதகத்தில் நேரம் சரி இல்லை என்று நம்புபவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி சிறைக்குள் செல்கின்றனர். சிறையில் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் … Read more

சட்டபூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கு உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் எப்போது செய்யலாம் என்பது குறித்த வழக்கனது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று விரிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான, சட்டபூர்வ கருக்கலைப்பு செய்வதற்காக முழு சுதந்திரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு என நீதிபதிகள் கூறியுள்ளனர். கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே … Read more

அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு ! – உச்சநீதிமன்றம்

மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யும் வழக்கில் ஒரு முக்கிய கருத்தை உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் அதை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு என்றுள்ளது உச்ச நீதிமன்றம். திபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், பெண் கருக்கலைப்பு பற்றி மேலும் கூறியது , ‘’ ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் அதை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்பு சட்டவிரோதமாகாது. இந்த உரிமையை … Read more

திருமலையில் ரூ.23 கோடியில் புதிய பரகாமணி கட்டிடம் – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா தற்போது திருமலையில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் நாளான்று, சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். பின்னர், இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை மீண்டும் சுவாமியை தரிசனம் செய்தார். நேற்று காலை, திருமலையில் ரூ.23 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பரகாமணி கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது உண்டியல் காணிக்கை கோயிலுக்குள் எண்ணப்பட்டு … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாள் பெரிய விசேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளான நேற்று காலை சின்னசேஷ வாகனத்திலும் இரவு அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்றாவது நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் … Read more

பிரபல தயாரிப்பாளரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட்!!

பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர், வலைத்தள தொடர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். சீசன் 2 என்ற பெயரில் வலைதள தொடர் ஒன்றின் தயாரிப்பில் அவர் ஈடுபட்டார். இதில், மதஉணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் மற்றும் தேசிய சின்னம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி இந்தூரில், ஏக்தா கபூர் மற்றும் பிறர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பீகாரின் பெகுசராய் நகரை … Read more