“ராகுல் காந்தி முதலில் இந்திய வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்” – அமித் ஷா

ஜெய்பூர்: காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ராகுல் முதலில் நாட்டின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக பூத் அளவிலான நிர்வாகிகளிடம் பாஜகவின் முதன்மைத் தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், “பாரத் ஜோடோ யாத்திரைச் செல்லும் ராகுல் காந்தி வெளிநாட்டு பிராண்ட் டி-ஷர்ட் அணிந்து கொண்டு யாத்திரை செல்கிறார். … Read more

வருமான வரிச் சலுகை, ஹவாலா பணத்தை பதுக்க தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகள் ரூ1,000 கோடி முறைகேடு: தேர்தல் ஆணைய பரிந்துரையால் சுற்றிவளைக்கும் வருமானவரித்துறை

புதுடெல்லி: வருமான வரிச் சலுகை, ஹவாலா பணத்தை பதுக்க தொடங்கப்பட்ட ‘டுபாக்கூர்’ அரசியல் கட்சிகளை வருமான வரித்துறை சுற்றிவளைத்து ரெய்டு நடத்தி வருகிறது. மேற்கண்ட கட்சிகளுக்கு கிடைத்த ரூ. 1,000 கோடி நிதி ஆதாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்தமட்டில், எந்தவொரு குடிமகனும் சொந்தமாக அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம் அல்லது அவரது கட்சியிலிருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம். அவ்வாறு அறிவிக்கப்படும் கட்சிகளை … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் சொத்துகள் இதுவரை ரூ23,000 கோடி வங்கிகளிடம் ஒப்படைப்பு: அமலாக்கத்துறை தகவல்

மும்பை: விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் ரூ.23,000 கோடி சொத்துகளை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் ஒப்படைத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் பல வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. … Read more

தேசியக் கல்விக் கொள்கை: டெல்லியில் அமல்படுத்த முடியாது – மணீஷ் சிசோடியா!

இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கைக்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் கமிட்டி ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இந்த கமிட்டியானது தேசிய கல்விக் கொள்கை 2020க்கான வரைவு அறிக்கையை கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் சமர்ப்பித்தது. இந்த வரைவு திட்டத்தின் மீதான கருத்துக்கேட்பு ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆனால், ஏராளமான கல்வியாளர்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருந்த அம்சங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கைக்கான … Read more

மோடியை புகழ்ந்து நேருவை தாக்கிய யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில்  ‘Modi@20’ என பெயரிடப்பட்ட புத்தக்கத்தின் வெளியீட்டு விழா இன்று  (செப். 10) நடைபெற்றது. இதில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” நாட்டின் பாரமரியத்தின் மீது பெருமிதம் கொள்பவர் மட்டுமல்ல, ‘ஒரே இந்தியா… சிறந்த இந்தியா’ என்ற சிந்தனை உடையவர் தற்போது இந்தியாவிற்கு பிரதமராக கிடைத்துள்ளார்” என பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார்.  தொடர்ந்து பேசிய அவர்,”முன்பு ஒரு பிரதமர் … Read more

தெலுங்கு திரைப்பட நடிகர் குருசாமி என்பவர் உடல்நலக் குறைவால் காலமானார்

கர்னூல்: தெலுங்கு திரைப்பட நடிகர் குருசாமி என்பவர் உடல்நலக் குறைவால் காலமானார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வேல்துருத்தியைச் சேர்ந்த தெலுங்கு பட நடிகர் குருசாமி, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று  குருசாமி காலமானார். ஒன்றிய அரசுப்பணியை விட்டுவிட்டு நாடகத் துறையில் நுழைந்த குருசாமி, ‘ஆயுஷ்மான் பவா’ என்ற குறும்படத்தில் நடித்து பிரபலமானார். ெதாடர்ந்து மகரிஷி, மகேஷ் பாபு போன்ற படங்களில் நடித்தார். குருசாமியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் … Read more

கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: “உலகலாவிய கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய – மாநில அறிவியல் மாநாடு குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை டெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் உரையாற்றினார். அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு முதல் முறையாக இத்தகைய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த … Read more

விஞ்ஞானிகளின் சாதனைகளை கொண்டாட வேண்டும்: பிரதமர் மோடி

விஞ்ஞானிகள் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை நாம் கொண்டாடும் போது அறிவியல் நமது வாழ்க்கையின் அங்கமாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலத்தில், மத்திய, மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார். கூடியிருந்தவரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த மாநாட்டின் ஏற்பாடு என்பது அனைவரின் முயற்சி என்பதற்குத் தெளிவான உதாரணம் என்பதை எடுத்துரைத்தார். “21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு எரிசக்தி போல அறிவியல் உள்ளது; … Read more

FIFA U-17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான லோகோவை அறிமுகப்படுத்தினார் முதல்வர் நவீன் பட்னாயக்

இந்தியாவில் நடைபெற இருக்கும் FIFA U-17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான ஒடிசா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஹோஸ்ட் சிட்டி லோகோவை முதல்வர் நவீன் பட்னாயக் அறிமுகப்படுத்தினார். FIFA மகளிர் கால்பந்து போட்டி முதல்முறையாக அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஒடிசா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெறுகிறது.   Source link

சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்; ‘ஸ்டைல் போஸ்’ கொடுத்த 2 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்: உத்தரபிரதேச காவல்துறை எச்சரிக்கை

லக்னோ: சமூக வலைதளம் மூலம் ஸ்டைல் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட 2 பெண் காவலர்களை உத்தரபிரதேச போலீசார் சஸ்பெண்ட் செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த பெண் காவலர்கள் இருவர், சீருடை அணிந்தவாறு ஸ்டைலாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். சுமார் 15 வினாடிகள் ஓடக்கூடக் கூடிய அந்த வீடியோக்களை மாநில காவல் துறை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து போலீஸ் ஏடிஜி ராஜ்குமார், மேற்கண்ட இரண்டு பெண் … Read more