இடிபாடுகளை கிளறும்போது கிடைத்த தங்க புதையல்.. 8 தொழிலாளிகளும் என்ன செய்தார்கள் தெரியுமா?

வீட்டை இடிக்கும் போது கிடைத்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழமை வாய்ந்த தங்க நாணயங்களை தங்களுக்குள்ளேயே தொழிலாளர்கள் பங்கிட்டுக் கொண்டது மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. தொல்லியல் தன்மைபெற்ற அந்த 86 தங்க நாணயங்களை போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் பங்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர பதிடர் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 19 மற்றும் 21ம் தேதி சுமார் 2600 சதுர அடி பரப்பளவு கொண்ட பழைய இடிந்த வீட்டின் … Read more

இந்தியாவில் 2021ல் நடந்த சாலை விபத்துகளில் 1.73 லட்சம் பேர் பலி: உயிரிழப்பில் தமிழகம் 2வது இடம்

புதுடெல்லி: நாட்டிலேயே அதிகமான சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) 2021 அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டில் 2021ல் நடந்த 4.22 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 24,711 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில் 16,685 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2020ல் 3,68,828 ஆக இருந்த சாலை … Read more

நொய்டா இரட்டை கோபுரம் தரைமட்டம் உயரமான கட்டிடங்கள் இடிப்பு பட்டியலில் இணைந்தது இந்தியா

நொய்டா: நொய்டாவின் இரட்டை கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கியதன் மூலமாக 100 மீட்டர் உயர கட்டிடங்கள் இடிப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் எமரால்டு கோர்ட் வளாகத்தில் சூப்பர் டெக் நிறுவனம் 40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்பை கட்டியிருந்தது. இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறியதாக கட்டப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து 3,700 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி நேற்று முன்தினம் இந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மும்பையை சேர்ந்த … Read more

ஒருதலை காதலால் +2 மாணவி எரித்து கொலை – சாம்பலாகிப் போன போலீஸ் கனவு

குடும்ப வறுமையை உடைத்து போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவில் வாழ்ந்துகொண்டிருந்த அங்கிதாவுக்கு நேர்ந்துள்ள இந்த முடிவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி அங்கிதா சிங் (19). இவரை, ஷாரூக் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து உள்ளார். அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாரூக், கடந்த 22ஆம் தேதி இரவு 8 மணியளவில் அங்கிதாவை தொடர்புகொண்டு அவருக்கு கொலை … Read more

பிரதமர் நரேந்திர மோடி மனிதநேயமிக்கவர் – குலாம் நபி ஆசாத் கருத்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடினமான மனிதர் என்று கருதினேன். ஆனால் அவர் மனிதநேயமிக்கவர் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஆசாத் கடந்த 26-ம் தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார். டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்தபோது குஜராத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வந்தனர். அவர்களது பேருந்தில் வெடிகுண்டு வெடித்துச் சிதறி பலர் உயிரிழந்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி … Read more

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

டெல்லி: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தகவலில்ன் படி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லியை அடுத்து மும்பையும், பெங்களூருவும் இடம் பெற்றுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் 40 சதவிகிதம் அதிகரித்து 13,890 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் அனைத்து பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியின் பங்கு மட்டும் 32.2 சதவிகிதம் … Read more

சீன செல்போன்களின் விற்பனைக்கு தடையா? – மத்திய அமைச்சர் விளக்கம்

ரூ.12 ஆயிரத்துக்கு கீழ் விலையுள்ள சீன செல்போன்கள் விற்பனையை தடை செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தியுள்ளார். உலகம் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில் செல்போன் விற்பனையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் 80 சதவீத செல்போன்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்திய செல்போன் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 12 … Read more

கிணற்றில் குதித்து இறப்பேனே தவிர காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது: நிதின் கட்கரிநான் பாஜகவில் மாணவரணி தலைவராக இருந்தபோது காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீகாந்த் என்னிடம் காங்கிரஸ் கட்சியில் சேரும்படி சொன்னார். நான் நல்லவன் என்றும், தவறான கட்சியில் இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். அவர் என் நெருங்கிய நண்பர் ஆவார். ஆனால் நான் அவரிடம், கிணற்றில் விழுந்து இறந்தாலும் இறப்பேன். … Read more

பாஜ தலைவருடன் நடிகர் நிதின் சந்திப்பு

ஐதராபாத்: கடந்த 2002ல் தெலுங்கில் வெளியான ‘ஜெயம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், நிதின். தொடர்ந்து ‘தில்’, ‘ஆஞ்சநேயம்’, ‘சை’, ‘இஷ்க்’, ‘ஹார்ட் அட்டாக்’, ‘பீஷ்மா’, ‘ரங் தே’ உள்பட பல  படங்களில் நடித்தார். தற்போது ‘மச்சர்லா நியோஜகவர்கம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஐதராபாத்தில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த நிதின், அவருடன் 20 நிமிடங்கள் பேசினார். பிறகு ஜே.பி.நட்டாவுக்கு திருப்பதி வெங்கடாசலபதி சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார். இதுகுறித்து ஜே.பி.நட்டா தனது டிவிட்டரில், … Read more

கால்நடைகளை மேய்க்க செல்லும் இந்திய எல்லைப் பகுதி கிராமவாசிகளை தடுத்து நிறுத்தும் சீன ராணுவத்தினர்.!

இந்தியாவில் இருந்து வழக்கமாக மாடு மேய்க்க டெம்சாக் பகுதிக்கு செல்லும் இந்திய எல்லைப் பகுதி கிராமவாசிகளை சீன ராணுவம் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தது. இதையடுத்து இந்திய ராணுவ அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி பாரம்பரியமான இச்செயலை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் இருதரப்பிலும் மோதல் ஏதும் இல்லை என்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் பதற்றமான சூழலும் படைக்குவிப்பும் … Read more