கடலில் தத்தளிக்கும் நபர்களை காப்பாற்ற ரோபோக்கள்… விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே கடற்கரையில் முன்னோட்டம்

ஆந்திராவில் கடலில் மூழ்கும் மக்களை காப்பாற்ற LIFEBOUY ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே கடற்கரையில் இதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. இந்த ரோபோக்கள் கடலில் தத்தளிப்பவர்களை காப்பற்ற உதவும் என்றும், தங்கள் கடற்கரையை பாதுகாப்பானதாக மாற்ற LIFEBOUY ரோபோக்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் லட்சுமிஷா தெரிவித்துள்ளார்.  Source link

காங்கிரஸுக்குள் ஒரு பூகம்பம்: ஐந்து எம்.பி.க்கள் கடிதம்

புதுடெல்லி: கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத் தனமையும், நேர்மையும் தேவை என்று வலியுறுத்தி சசி தரூர் உள்பட ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். செப்டம்பர் 6 தேதியிடப்பட்டு இந்த கூட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சசி தரூர், கார்த்தி சிதம்பரம், ப்ரத்யூதி போர்டோலோய், அப்துல் காலீக், மனீஷ் திவாரி ஆகியோர் தான் இக்கடிதத்தை எழுதியுள்ளனர். கடிதத்தின் விவரம் வருமாறு: நாங்கள் வாக்காளர் பட்டியலைக் … Read more

'காங். தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை' – சசி தரூர் உட்பட 4 எம்பிக்கள் கடிதம்!

“காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை நிலவ வேண்டும் எனவும், தகுதி உள்ள வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும் ” என காங்கிரஸ் தேர்தல் நடத்தும் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு, சசி தரூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட எம்.பி.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட … Read more

புஷ்பா 2வில் சாய் பல்லவியா?

ஐதராபாத்: புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. புஷ்பா முதல் பாகத்தில் பஹத் பாசில் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. அதன் பிறகு பாலிவுட் நடிகர் பாபி தியோலிடம் பேச்சு நடந்தது. … Read more

அரியானாவின் இருவேறு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அரியானாவில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மகேந்திரகார் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை நேற்றிரவு 20 பேர் கால்வாயில் கரைக்க சென்றனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் 4 பேரை உயிருடன் மீட்ட நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதே போல், சோனிபட் மாவட்டத்தில் கங்கா ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற 3 சிறுவர்கள் … Read more

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒன்றிய – மாநில அறிவியல் மாநாட்டைதொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒன்றிய – மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு வசதிகள் செய்து தருவது தொடர்பாக மாநாடு நடைபெறுகிறது.

நீதி கேட்டால் குற்றமா? உ.பி. அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நீதி கேட்டு குரல் எழுப்புவது எப்படி சட்டத்தின் பார்வையில் கிரிமினல் குற்றமாகும் என்று சித்திக் கப்பன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது நீதிமன்றத்தில் நடந்த வாதம் தேசிய கவனம் பெற்றுள்ளது. … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 5,554 பேருக்கு கொரோனா… 18 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 5,554 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,90,283 ஆக குறைந்தது. * புதிதாக 18 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: தங்க முலாம் பூசிய லட்டு ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம்

திருமலை: ஐதராபாத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தங்க முலாம் பூசப்பட்ட லட்டு ரூ.24.60 லட்சத்திற்கு ஏலம் போனது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் புகழ்பெற்ற பாலாப்பூர் விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது அதிக எடையிலான லட்டு படைக்கப்படுவது வழக்கம். தூய நெய், உலர்ந்த பழங்களால் செய்யப்பட்ட லட்டுவின் மீது தங்க முலாம் பூசப்பட்டு, விநாயகர் முன்பு வெள்ளி கிண்ணத்தில் வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் செய்யப்படும். 10வது நாள் விநாயகர் … Read more

அரசு பணத்தை சிக்கனமாக செலவிடுங்கள் – அரசு ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுரை

புதுடெல்லி; அரசு ஊழியர்கள் அரசு பணத்தை சொந்தப் பணம்போல சிக்கனமாகவும், கவனமாகவும் செலவழிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைக்கான திட்டம் தயாரிப்பது தொடர்பான 2 நாள் மாநில அமைச்சர்கள் மாநாட்டை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் டெல்லியில் நேற்று நடத்தியது. இதில் மாநிலங்களின் பொதுப் பணித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் … Read more