மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்க மறுத்த முகுல் ரோத்தகி.!

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்க பிரபல வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி மீண்டும் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என மத்திய அரசு விரும்பியது. இது தொடர்பாக முகுல் ரோத்தகியை மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது அவர் அந்தப் பதவியை ஏற்க இசைவு தெரிவிக்கவில்லை. முகுல் ரோத்தகி அட்டர்னி ஜெனரல் பதவியை மறுத்த நிலையில், அந்த முக்கிய பதவிக்கு யாரை நியமிக்கலாம் என … Read more

கோவா பேரவை தேர்தலில் ரூ.47.54 கோடி செலவிட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி

புதுடெல்லி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.47.54 கோடி செலவிட்டுள்ளது. ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக ரூ.17.75 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது. கோவா சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. எனினும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் களமிறங்கின. இந்த இரு கட்சிகளின் வரவால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் … Read more

தில்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா – தமிழ்நாடு ஆளுநர் RN.ரவி. சந்திப்பு!

தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளித்தல், தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆட்களை மூளைச் சலவை செய்தல் ஆகியவற்றை பிஎப்ஐ அமைப்பும், அதன் நிர்வாகிகளும், எஸ்டிபிஐ கட்சியும் செய்துவருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், NIA அமைப்பும், அமலாக்கப்பிரிவும் இணைந்து 11 மாநிலங்களில் அதிரடியாக சோதனை நடத்தின. தேசிய புலானய்வு முகமை நடத்திய சோதனையில், இதுவரை 106 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 11 … Read more

பெண் நிருபரை ஆபாசமாக திட்டியதாக நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது போலீசார் வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: பெண் நிருபரை ஆபா சமாக திட்டியதாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஷி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘22 பீமேல் கோட்டயம்’, ‘உஸ்தாத்  ஓட்டல்’, ‘கும்பளங்கி  நைட்ஸ்’, ‘வைரஸ்’ உள்பட பல படங்களில்  நடித்தவர், ஸ்ரீநாத் பாஷி. அவர் நடித்துள்ள ‘சட்டம்பி’ என்ற படம் கடந்த 23ம் தேதி வெளியானது. இப்படம் தொடர்பாக  யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஸ்ரீநாத் பாஷி பேட்டி அளித்தார். அப்போது நேர்காணல் செய்த பெண் நிருபர், அவர் மனம் புண்படும்படியான கேள்வியைக் கேட்டதாக … Read more

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. டெல்லி பறக்கிறார் கவர்னர் ரவி..!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்கிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளை … Read more

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சோனியாவுடன் நிதிஷ், லாலு சந்திப்பு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார். அணி மாறிய பிறகு, … Read more

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்: காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி டிவிட்டரில் வாழ்த்து

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் தன்னடக்கம், அர்ப்பணிப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு எவருடனும் ஒப்பிட முடியாது என்றும் என்னை போன்ற பல இந்தியர்களுக்கு மன்மோகன்சிங் ஓரு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி புகழ்ந்துள்ளார். மன்மோகன்சிங் அவர்களின் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக இருந்த இறைவனை வேண்டுகிறேன் என ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார். 

நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கிய நவராத்திரி விழா.!

நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. நவராத்திரியின் முதல் நாளையொட்டி வடமாநிலங்களின் பல்வேறு கோயில்களிலும், பக்தர்கள் சிறப்பு பூஜைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர். இன்று தொடங்கியுள்ள நவராத்திரி பண்டிகை, அக்டோபர் 5 ஆம் தேதி வரையில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தேவலன் கோயிலில், அம்மன் சிலைக்கு மலர்கள் மற்றும் ஆபரணங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பே கவுரி ஆரத்தி எனும் சிறப்பு தீபாராதனையும் செய்யப்பட்டது. இதே போல மகாராஷ்டிரா … Read more

வீடு தேடி வந்து உதவி கேட்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ரூ.25 கோடி பரிசு விழுந்தும் தலைமறைவாக வாழ்கிறேன் – கேரளத்தில் ஓணம் பம்பர் வென்ற ஆட்டோ ஓட்டுநர் புலம்பல்

திருவனந்தபுரம்: கேரளத்தில் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.25 கோடி வென்ற ஆட்டோ ஓட்டுநர் அனூப் தனக்கு நிம்மதி இல்லை என புலம்பித் தீர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கேரள மாநிலத்தில் தினசரி லாட்டரி சீட்டை மாநில அரசு நடத்தி வருகிறது. இதன் அதிகபட்ச பரிசுத்தொகை ரூ.90 லட்சமாகும். இந்நிலையில் கேரளத்தில் மலையாளிகளின் முக்கியப் பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு பம்பர் பரிசுச் சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஓணம் … Read more

நமீபியா சிவிங்கி புலிகளால் ராஜஸ்தானிலும் அதிசயம் நடக்கும்

ஜெய்ப்பூர்: புதிய சிவிங்கி புலிகளால் ராஜஸ்தான் சுற்றுலாவிலும் பல்வேறு அதிசயங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி கடந்த 17ம் தேதி திறந்து விட்டார். இவற்றை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆர்வம், சுற்றுலா பயணிகளிடம் மேலோங்கி வருகிறது. ஆனால், இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள இந்த சிவிங்கி புலிகளுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், இப்போதைக்கு சுற்றுலா … Read more