அரசு பணத்தை சிக்கனமாக செலவிடுங்கள் – அரசு ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுரை

புதுடெல்லி; அரசு ஊழியர்கள் அரசு பணத்தை சொந்தப் பணம்போல சிக்கனமாகவும், கவனமாகவும் செலவழிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைக்கான திட்டம் தயாரிப்பது தொடர்பான 2 நாள் மாநில அமைச்சர்கள் மாநாட்டை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் டெல்லியில் நேற்று நடத்தியது. இதில் மாநிலங்களின் பொதுப் பணித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் … Read more

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி; பெட்ரோல் – டீசல் விலை குறையுமா..!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில்  சரிவு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இன்று  கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $92 ஆக உள்ளது. ஆனால் இன்றும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. கடந்த மே 21ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 என்ற அளவிலும், டீசல் … Read more

ராஜஸ்தானில் 100 நாள் நகர்புற வேலை திட்டம்: முதல்வர் கெலாட் தொடங்கி வைத்தார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 100 நாள் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை முதல்வர் அசோக் கெலாட் நேற்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் ஒன்றிய அரசின் நிதி மூலமாக கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதேபோல், நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு இல்லாத மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் நகர்ப்புற வேலைவாய்ப்பு என்ற திட்டத்தை ராஜஸ்தான் அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘இந்திரா காந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்,’ என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை … Read more

கொனார்க் சூரிய கோயிலில் 100 ஆண்டுக்கு பிறகு மணல் குவியலை அகற்றும் பணி தொடக்கம்

புவனேஸ்வர்: ஒடிசாவின் புரி மாவட்டம், கொனார்க் பகுதியில் கடந்த 13-ம் நூற்றாண்டில் சூரிய பகவானுக்காக கோயில் கட்டப்பட்டது. கிழக்கு கங்கா வம்சத்தை சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் மன்னரால் கட்டப்பட்ட இந்த கோயில் அறிவியல் பெட்டகமாக போற்றப்படுகிறது. கோயிலின் கருவறையை சுற்றி கல்லில் செதுக்கப்பட்ட 24 தேர் சக்கரங்கள் உள்ளன. இது 24 மணி நேரத்தை குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் சூரிய ஒளி நேரடியாக கருவறையின் மேல் விழும்படி கோயில் கட்டப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் … Read more

உபி.யில் கைதான பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசில் பழங்குடி பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தி சேகரிக்க கடந்தாண்டு அக்டோபர் மாதம் சென்ற இணையதள செய்தி நிறுவன பத்திரிகையாளர் சித்திக் கப்பானை, வன்முறையை தூண்டுவதற்கு வந்ததாக கூறி தேசத் துரோக சட்டத்தின் கீழ் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர். இவரது ஜாமீன் … Read more

ஹைதராபாத் பாலாப்பூர் – விநாயகர் லட்டு பிரசாதம் ரூ. 24.60 லட்சத்துக்கு ஏலம்

ஹைதராபாத்: ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹைதராபாத் பாலாப்பூர் விநாயகரின் கையில் லட்டு பிரசாதம் வைக்கப்படும். 10 நாட்கள் பூஜைகள் நடந்த பின்னர், விஜர்சனம் செய்யப்படும் நாளன்று அந்த லட்டு பிரசாதம் ஏலம் விடப்படும். இதற்கு கடும் போட்டி நிலவும் அதன்படி நேற்று ஹைதராபாத் நகரில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஹுசேன் சாகர் ஏரி உட்பட பல நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் பாலாப்பூர் விநாயகர் சிலை ஊர்வலமும் நேற்று நடந்தது. … Read more

காக்ரா – ஹாட் ஸ்பிரிங்கில் இருந்து இந்திய, சீன படைகள் 12ம் தேதிக்குள் வாபஸ்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் காக்ரா – ஹாட் ஸ்பிரிங்கில் இருந்து 12ம் தேதிக்குள் இந்திய, சீன ராணுவம் திருப்பப் பெறப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவின் ராணுவம் ஊடுருவியதால் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றத்தை  தணிப்பதற்காக, இருநாட்டு ராணுவமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கடந்த ஜூலையில் நடந்த 16ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, காக்ரா-ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து … Read more

12-க்குள் லடாக் எல்லையில் இந்திய – சீன படைகள் வாபஸ் – சீனாவின் திடீர் மாற்றம் ஏன்?

புதுடெல்லி: லடாக் எல்லையில் இருந்து செப்டம்பர் 12-ம் தேதிக்குள் இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 40 வீரர்களும் உயிரிழந்தனர். இதன்காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது. பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு லடாக்கின் பல்வேறு முனைகளில் படைகள் வாபஸ் பெறப்பட்டன. … Read more

தொலைதூர கல்வி பட்டமும் கல்லூரி பட்டமும் இனி சமம்: யுஜிசி அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: படிப்பை பாதியில் நிறுத்தி விட்டவர்கள், வேலை செய்து கொண்டே படிக்க நினைப்பவர்களுக்கு திறந்தவெளி, தொலைதுார கல்வி முறைகள், ஆன்லைன் கல்விகள் உதவியாக இருக்கின்றன. ஆனால், இவற்றால் வழங்கப்படும் பட்டங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை. வேலை வாய்ப்பில் இந்த பட்டங்களுக்கு மதிப்பு அளிக்கப்படுவது இல்லை. இனிமேல், இந்த குறை ஏற்படாத நிலை உருவாகி இருக்கிறது. பல்கலைக் கழக மானிய குழு (யுஜிசி) செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் நேற்று கூறுகையில், ‘‘திறந்த வெளி மற்றும் தொலைதுார கல்வி … Read more

நேதாஜி சிலை வடிக்க பல்வேறு சவால்களை சந்தித்த பிறகு தெலங்கானாவிலிருந்து டெல்லி வந்த 280 டன் கிரானைட்

புதுடெல்லி: டெல்லியின் சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் கடமை பாதையில் (கர்தவ்யா) நேற்று முன்தினம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்தச் சிலை உருவானதன் பின்னணியில் உள்ள பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலை அமைக்கும் பணி ‘கிரானைட் ஸ்டுடியோ இந்தியா’ என்ற தனியார் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. அவர்கள் சிலை அமைத்த தகவல் குறித்து மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சகத்திடம் விரிவாக கூறியுள்ளனர். நேதாஜியின் சிலை அமைக்க … Read more