மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 27ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்: நாளை விஸ்வசேனாதிபதி வீதி உலா
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை விஸ்வசேனாதிபதி வீதி உலா நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வெங்கடேஸ்வர பெருமாளின் சேனாதிபதி விஸ்வக்சேனர் மாடவீதி உலா நாளை நடக்கிறது. அன்று ஈசானிய மூலையில் உள்ள புற்றுமண் சேகரிக்கப்பட்டு விஸ்வசேனாதிபதி ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வந்து அங்குரார்ப்பண மண்டபத்தில் 9 பானைகளில் புற்று மண்ணை நிரப்பி நவதானியங்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து … Read more