கட்சித் தலைவர் தேர்தல்: காங்கிரஸில் தொடரும் குழப்பம்; ரேஸில் யாரெல்லாம் தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், காந்தி குடும்பத்தைச் சேராத தலைவர்கள் களத்தில் இறங்குவார்களா என்பது குறித்து கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவுகிறது. ஒருவேளை ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டால், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் அல்லது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரில் ஒருவரை களம் இறக்க வேண்டும் என சோனியா காந்திக்கு நெருக்கமான தலைவர்கள் கருதுகிறார்கள். அடுத்த தலைவர் … Read more

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதும், தன் பாலின உறவுகளால் குடும்ப அமைப்பு பல வடிவங்கள் பெற வாய்ப்பு – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது மற்றும் தன் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் குடும்ப உறவின் வடிவங்கள் மாற்றம் பெற வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஒரு வழக்கில் குடும்ப உறவுகள் என்றால் என்ன? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான மற்றும் முக்கியமான கருத்துகளை தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு ஆகஸ்ட் 28-ல் தான் … Read more

ஜார்க்கண்ட் அரசியல் நெருக்கடி: ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கருக்கு இடம் பெயர்வு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இடம் பெயர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணி அரசுக்கு, 49 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு, 30 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு, … Read more

நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை விரட்டி பிடித்து திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்

பீகாரில் நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை அவரது குடும்பத்தினர் விரட்டி பிடித்து திருமணம் செய்து வைத்துள்ளனர். நவாடா மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்த பெற்றோர், வரதட்சணையாக இருசக்கர வாகனத்துடன் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளனர். ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்ய இளைஞர் மறுத்ததால், அவரது பெற்றோர் மணமகள் வீட்டாரிடம் பேசி திருமண தேதியை ஒத்திவைத்து வந்தனர். இந்நிலையில், மக்கள் கூடும் சந்தைக்கு வந்த … Read more

அரசு மருத்துவமனை ஆம்புலன்சின் கதவைத் திறக்க முடியாமல் ஏற்பட்ட தாமதத்தால் நோயாளி உயிரிழப்பு; கேரளாவில் சோகம்

திருவனந்தபுரம்; ஆம்புலன்சின் கதவு  கதவைத் திறக்க முடியாமல்  ஏற்பட்ட தாமதத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு 66 வயதான கோயமோன் உணவகத்தில் இருந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சாலையைக் கடக்கும்போது, ​​இருசக்கர வாகனம் மோதியது. அவர் உடனடியாக அருகிலுள்ள கடற்கரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து  சிகிச்சைக்காக அருகே … Read more

குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்

2002 குஜராத் கலவரம் தொடர்பான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்குகள் சில இன்றும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்த மனு, குஜராத் காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் … Read more

ஆந்திரா: ஆலையில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

காக்கிநாடா: ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், வாகலபூடி பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றிக்கொண்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.பின்னர் தகவல் அறிந்து போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைத்தனர். இதே தொழிற் சாலையில் கடந்த 19-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டதில் … Read more

தன்னை எப்படியாவது சிறையில் வைத்து பார்க்க பிரதமர் நரேந்திர மோடி ஆவல்': டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா பகிரங்க குற்றச்சாட்டு..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னை எப்படியாவது சில மாதங்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்று சிபிஐக்கு அழுத்தம் அளித்து வருவதாக டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் திருத்தி அமைக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்ட மாநில கலால் வரி கொள்கை மூலம் சிசோடியா ஆதாயம் அடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சிபிஐ, தீவிர விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் டெல்லி என்.சி.ஆர். அருகே காசியாபாத்தில் உள்ள வங்கியில், மணீஷ் சிசோடியாவின் மனைவி பெயரில் உள்ள பெட்டகத்தை சிபிஐ … Read more

வங்கி லாக்கர்களிலும் சிபிஐ சோதனை! “எதுவும் கிடைக்காது” என மணீஷ் சிசோடியா கிண்டல்!

டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் ஆட்சி செய்து வரும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி டெல்லியின் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த … Read more

நடிகர் நட்டி நட்ராஜின் வீட்டில் சோகம்…!! ட்விட்டரில் வேதனைப் பதிவு..!!

ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் நன்கு அறியப்படும் நடராஜ் தற்போது நடிகராகவும் முன்னேறி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’, ‘போங்கு’ உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.  மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படத்திலும் நட்டி மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார். தற்போது மோகன்ஜி இயக்கத்தில் பகாசுரன் படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.  நட்டி அவ்வப்போது சமூகக் கருத்துக்களையும் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, … Read more