NEET 2022 – வெளியானது ஆன்சர் கீ…எப்படி சரிபார்ப்பது?

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET UG 2022 தேர்வு கடந்த ஜூலை மாதம் 17அம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகளானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 95 சதவீத மாணவ, மாணவிகள் எழுதிய நீட் தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 3,570 மையங்களில் நடைபெற்றது. இந்தச் சூழலில்,இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள்  நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  விடை குறிப்புகளுடன், OMR விடைத்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மாணவ, … Read more

பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்றிய உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்கின்றன. தடுப்பூசியால் இனி வரும் காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பதிப்பில் இருந்து பெண்கள் காக்கப்பட வாய்ப்புள்ளது.

கர்நாடகா: நிற்காமல் சென்ற கார்… விரட்டிப் பிடித்த போலீசார் – கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

கர்நாடக மாநிலத்தில் காரில் கடத்திவரப்பட்ட 85 லட்சம் ரூபாய் பணத்தை சினிமா பாணியில் உயிரை பணயம் வைத்து போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஆனகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர் ஆனால், போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் சினிமா பாணியில் உயிரை பணயம் வைத்து காரை துரத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து … Read more

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா ராஜினாமா.!

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா ராஜினாமா செய்துள்ளார் . கொரோனா தொற்று பரவலால் ஏற்கெனவே நட்டத்தை சந்தித்து வந்த ஸ்பைஸ் ஜெட், விமான எரிபொருளுக்கான விலையேற்றம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சம்பவங்களினாலும், பொருளாதார இழப்புகளினாலும் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சஞ்சீவ் தனேஜா பதவியை ராஜினாமா செய்தார். ஜூன் 30-ஆம் தேதியுடன் … Read more

புதிய மதுபான கொள்கையில் ஊழல் விசாரணையை தொடர்ந்து டெல்லியில் அரசு மது விற்பனை

டெல்லி: தமிழ்நாட்டை போலவே, டெல்லியிலும் மதுபான கடைகளை அரசே நடத்த உள்ளது. புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில், இன்று முதல் மாநில அரசே மது விற்பனை செய்ய உள்ளது.

ஜொமோட்டோவின் 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' திட்டம் – இனி இந்தியாவின் மற்ற நகர உணவுகளையும் ஆர்டர் செய்யலாம்

சென்னை: ஜொமோட்டோ, புதிதாக ‘இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்’ (Intercity legends) என்கிற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையானது நகரங்களுக்கு இடையேயான உணவு விநியோக சேவையை வழங்கவுள்ளது. அதாவது, கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையில் இருந்தே ஆர்டர் செய்து பெற முடியும். இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள பிரபலமான உணவகங்களில் இருந்து ஸ்பெஷல் உணவுகளை மற்ற நகரங்களில் இருந்து ஆர்டர் செய்ய முடியும். ஆனால், இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சமாக … Read more

கடத்தல் வழக்கில் சிக்கிய அமைச்சர் கார்த்திக் குமார் திடீர் ராஜினாமா.!

பீஹாரில் கடத்தல் வழக்கில் சிக்கிய சட்ட அமைச்சர் கார்த்திக் குமார் இலாகா மாற்றப்பட்ட சிலமணி நேரங்களில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சர் கார்த்திக் குமார் மீது, கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது, அவர் பதவியில் நீடிக்க பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தன. இதையடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அவரை சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து, கரும்புத் துறைக்கு மாற்றினார்.தனது இலாகா மாற்றிய சில மணி நேரங்களில் … Read more

இலங்கையில் திருப்பம் 12 ஆளும் கட்சி எம்பி.க்கள் எதிர்கட்சிக்கு திடீர் தாவல்

கொழும்பு: இலங்கையில் ஆளும் கட்சியை சேர்ந்த 12 எம்பி.க்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியில் சேர்ந்தனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அதிருப்தியடைந்த ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா மற்றும் நாலக கொடஹேவா உட்பட 12 எம்பிக்கள் தனியாக செயல்பட தொடங்கினர். மக்கள் போராட்டம் வலுத்ததால் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா … Read more

இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை..!

லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனா ராணுவ மேஜர் ஜெனரல்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 16 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், இருநாட்டு ராணுவ மேஜர் ஜெனரல்கள் தங்கள் படைத்தளபதிகளுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அசல் எல்லைக் கோடு பகுதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் அமைதியை கடைபிடிக்க இருதரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை கடைபிடிக்கவும் இதுபோன்ற முன்னறிவிக்கப்படாத ராணுவ பேச்சுவார்த்தைகள் … Read more

சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகைல் கார்பசேவ் மரணம்: பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபரும், அமெரிக்கா உடனான பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவருமான மிகைல் கார்பசேவ் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1917ம் ஆண்டில் நடந்த ரஷ்ய புரட்சியின் மூலம், உலகின் மாபெரும் சக்தியாக மிகப்பெரிய பிரதேசமாக சோவியத் யூனியன் உருவானது. இதில் 15 நாடுகள் உறுப்பினர்களாக ஒன்றுபட்டு இருந்தன. கம்யூனிஸ்ட் நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகித்த சோவியத் யூனியன், உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக திகழ்ந்தது. அதே சமயம், கடுமையான கட்டுப்பாடுகள் … Read more