கேரள அரசு, ஆளுநர் மோதல்; 11 சட்ட மசோதாக்களில் கையெழுத்திட மறுப்பு

திருவனந்தபுரம்: கேரள அரசின் 11 அவசர சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் ஆரிப் முகமது கான் மறுத்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரின் அதிகாரத்தை ரத்து செய்ய கேரள அரசு அவசர சட்டம் கொண்டுவர தீர்மானித்ததாக கூறப்படுகிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கை அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் 11 அவசர சட்டத்திருத்த மசோதாக்களின் காலாவதியை நீட்டிப்பதற்காக கவர்னரின் ஒப்புதலுக்காக … Read more

பிஹார் அரசியலில் திடீர் திருப்பம்: ஜேடியு – பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து; லாலுவுடன் கைகோக்கிறார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மாநில முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவுடன் கைகோக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 43 இடங்களில் … Read more

சிவசேனா எம்பிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்; மும்பை நீதிமன்றம் உத்தரவு

மும்பை:  பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்பியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்(60). இவருக்கு  பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் பணமோசடியில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஒன்றாம் தேதி ராவத்தை கைது செய்தனர். இவரது காவல் முடிவடைந்த நிலையில் நேற்று சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை … Read more

மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு பரிந்துரை

புதுடெல்லி: மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், 2 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கூடியது. இதில் மக்களவையில் 2022-ம் ஆண்டுக்கான மின்சார சட்டத் திருத்த மசோதாவை மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அறிமுகம் செய்தார். தகவல் தொடர்பு வரிசையில் மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை அனுமதிப்பது இந்த மசோதாவின் நோக்கமாகும். இந்த மசோதா இரு … Read more

கோதுமை மீதான இறக்குமதி வரியை 40 சதவீதம் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்

நாட்டில் கோதுமையின் விலையை கட்டுக்குள் வைக்க கோதுமை மீதான  40 சதவீதம் இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மொத்த விற்பனையாளர்களிடம் இருக்கும் கோதுமை இருப்புக்கும் வரம்புகளை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. உக்ரைன் போர் மற்றும் கடும் வெப்பம் காரணமாக கடந்த மேமாதம் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. உள்நாட்டில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் கோதுமையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது இறக்குமதி … Read more

ஷிண்டே அமைச்சரவை இன்று விரிவாக்கம்

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில்  எம்எல்ஏக்கள் சிலர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். இதனால், கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதை தொடர்ந்து  சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பாஜ கூட்டணி ஆட்சி அமைத்தது.  ஜூன் 30ம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். கிட்டத்தட்ட 40 நாட்களாகியும் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் … Read more

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் – சுவேந்து அதிகாரி

கிழக்கு மிட்னாபூர்: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி. இதனை திங்கள் அன்று கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில் அவர் தெரிவித்திருந்தார். மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பகவத் கீதை புத்தக பிரதி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பள்ளிகளில் பகவத் கீதையை பள்ளிகளில் போதிக்கும் திட்டத்தை குஜராத் மாநில அரசு அறிவித்திருந்தது. இது … Read more

மபி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 14 கார்கள் அடித்து செல்லப்பட்டன; 50 பேர் உயிர் தப்பினர்

கார்கோன்: மத்தியப்பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில், பால்வாடா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்கூட் காட்டுப்பகுதியில் சுக்தி ஆறு ஓடுகின்றது. நேற்று முன்தினம்  மாலை பொதுமக்கள் சிலர் தங்களது குடும்பத்துடன் அந்த பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தனர். மழை காரணமாக ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு ஆற்றங்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 14 கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பொதுமக்கள் அருகில் உள்ள காட்டில் உயரமான இடங்களுக்கு சென்று உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ … Read more

வெங்கையா நாயுடு பதவிக்காலத்தில் மாநிலங்களவை செயல்பாடு புதிய உச்சத்தை தொட்டது; பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: ‘துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி காலத்தில் மாநிலங்களவை செயல்பாடுகள் புதிய உச்சத்தை தொட்டது’என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளை முடிவுக்கு வருகிறது. இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  ஜெகதீப் தன்கர் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா  நேற்று நடந்தது. இதையொட்டி மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில்,‘‘நான் வெங்கையா நாயுடுவிடம் மிக நெருக்கமாகப் பழகியிருக்கிறேன்.  பல பொறுப்புகளையும் … Read more

இளம்பெண்ணை தாக்கிய விவகாரம், பாஜ நிர்வாகியின் வீடு இடிப்பு; உபியில் அதிரடி நடவடிக்கை

நொய்டா: குடியிருப்பு வளாகத்தில் நடந்த பிரச்னையில் இளம்பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜ நிர்வாகி வீட்டின் முன் கட்டியிருந்த ஆக்கிரமிப்புக்கள் நேற்று புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேசம், நொய்டா பகுதியை சேர்ந்தவர் பாஜ நிர்வாகி காந்த் தியாகி. கடந்த வெள்ளியன்று அதே குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண்ணுக்கும் இவருக்கும் செடிகள் வளர்ப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண்ணை காந்த் தள்ளிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் … Read more