யுஜிசி நெட் 2-ம் கட்ட தேர்வு ஒத்திவைப்பு

புதுடெல்லி: வரும் 12ம் தேதி முதல் நடக்கவிருந்த யுஜிசி நெட் 2ம் கட்ட தகுதி தேர்வு செப்.20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று யுஜிசி தலைவர் தெரிவித்தார். கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுவர். இந்த ஆண்டு 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய 2 வருட தேர்வுகளை ஒருங்கே நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அறிவித்திருந்தது. … Read more

இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்புச் சேவைகள் செப்டம்பர் இறுதியில் அறிமுகமாகும் எனத் தகவல்!

இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்புச் சேவைகள் செப்டம்பர் இறுதியில் அறிமுகமாகும் என்றும், முதற்கட்டமாகச் சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 5ஜி வலையமைப்பை நிறுவும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. செப்டம்பர் 29ஆம் நாள் இந்திய மொபைல் காங்கிரசைத் தொடக்கி வைக்கும் பிரதமர் மோடி, 5ஜி சேவைகளையும் முறைப்படி தொடக்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம் விடுதலையின் 75ஆண்டுக் கொண்டாட்டத்தையொட்டி ஜியோ ஆகஸ்டு 15ஆம் நாள் 5ஜி சேவைகளை … Read more

ராஜஸ்தான் கோயிலில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி

சிகார்: ராஜஸ்தானில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில்  காடு ஷியாம்ஜி கோயில் உள்ளது. சிராவண மாதத்தின் கடைசி திங்கட்கிழமையை வடமாநிலங்களில் மக்கள் புனித நாளாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஷியாம்ஜி கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை  4.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டபோது நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒருவரை ஒருவர் … Read more

விராட் கோலி உள்ளே.! பும்ராவுக்கு ஓய்வு.. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் என ஆசியாவின் ஐந்து நாடுகள் பங்குபெறும் டி20க்கான ஆசிய கோப்பை இந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பைகான இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியலை அறிவித்துள்ளது பிசிசிஐ. வாய்ப்பு வழங்கப்படாமல் ஓய்வில் வைக்கப்பட்டிருந்த விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மற்றும் இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த கேஎல் ராகுலும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் காயம் காரணமாக … Read more

ரயில்களில் தாய்ப்பால் ஊட்ட தனி இடம் தேவை: ரயில்வே அமைச்சரிடம் செந்தில்குமார் எம்.பி கோரிக்கை

புதுடெல்லி: ரயில்களில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட தனி இடம் தேவை என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை திமுக எம்.பி டி.என்.வி.செந்தில்குமார் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து செந்தில்குமார் அளித்த மனுவில், ‘நாடு முழுவதிலும் ஓடும் ரயில்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட தாய்மார்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதற்காக ரயில் பெட்டிகளில் தனியாக ஓர் இடம் ஒதுக்கினால் பாராட்டுக்குரியதாக இருக்கும். அதேபோல், குழந்தைகளுக்கானக் கழிவறை வசதியும் ரயில்களில் சிக்கலாக உள்ளது. … Read more

ஒன்றிய அரசின் சட்டதிருத்தமானது விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

டெல்லி: ஒன்றிய அரசின் சட்டதிருத்தமானது ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது தெரிந்தே ஒன்றிய அரசு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. மின்விநியோகத்துக்கான அரசின் கட்டமைப்புகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தில் சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது என கூறினார்.

மிரளவைத்த இந்திய வீரர்கள்.. உச்சத்தில் தமிழக வீரர்.. காமன்வெல்த் பதக்க வேட்டை முழுவிவரம்

நடப்பாண்டு காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் 3 தங்கம், ஒரு வெள்ளி வென்று அதிகப் பதக்கங்களை வென்ற வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 22-வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் கடந்த 28-ம் தேதி கோலகலமாக துவங்கியது. சுமார் 72 நாடுகளைச் சேர்ந்த 5,000 வீரர்கள், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, மல்யுத்தம், கிரிக்கெட், சைக்கிளிங், ஹாக்கி, ஜூடோ, டேபிள் டென்னிஸ், பளுத்தூக்குதல் உள்பட … Read more

பொது பல்கலை நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுக: மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

புதுடெல்லி: பொது பல்கலைகழக நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை மக்களவையில் வலியுறுத்தினார். இதுகுறித்து தென்சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் பேசியதாவது. 2022-2023-ம் கல்வியாண்டுக்கான மத்திய அரசின் அறிவிப்பில், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் பல்வேறு படிப்புகளுக்கு, தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் மூலமே மாணவர்களை சேர்க்க முடியும் என்று … Read more

பாஜக கூட்டணிக்கு டாட்டா? – நாளை அறிவிக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி அரசு அமைந்ததில் இருந்தே, முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பாஜகவுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. அக்னிபத் திட்டம், ஜாதிவாரி … Read more

புதிய மின்சார சட்ட திருத்த மசோதா விவசாயிகளை பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை: ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கம்

டெல்லி: புதிய மின்சார சட்ட திருத்த மசோதா விவசாயிகளை பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை என ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தாக்கல் செய்தார்.ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா என்பது, மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு அதிக அதிகாரம், … Read more