இந்தியாவில் சுகாதாரமும் ஆன்மிகமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை: பிரதமர் மோடி பேச்சு

ஃபரிதாபாத்: ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதில் 2,600 படுக்கைகளைக் கொண்ட நவீனமான அம்ரிதா மருத்துவமனையினை பிரதமர் மோடி புதன்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாக்ரேயா, முதல்வர் மனோகர் லால், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, மத்திய அமைச்சர் கிர்ஷன் பால் குர்ஜார், மாதா அமிர்தானந்தமாயி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது: “நாடு அமிர்த காலத்தில் நுழையும் நிலையில், கூட்டான விருப்பங்களும், தீர்மானங்களும் நல்வடிவம் பெறுகின்றன. மாதா அமிர்தானந்தமயியின் ஆசிகளை நாடு … Read more

வீர சாவர்க்கர் பேனர் விவகாரம்…! – கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை..!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் வீர்சாவர்க்கர் பேனர் வைத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா நகரில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அந்நகரின் ஏ.ஏ.சதுக்கம் பகுதியில் சிலர் சாவர்க்கர் பேனர் வைத்த சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் பேனரை மற்றொரு தரப்பினர் அகற்ற இரு தரப்பினர் … Read more

2030-ம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு.. மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் தகவல்..!

2030-ம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடையும் வகையில் வர்த்தகத் துறை மாற்றியமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார். 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை இந்தியா அடைவதற்காக தனியார் ஆலோசனை முகமையிடம் இருந்து அறிக்கை ஒன்று பெறப்பட்டது. எதிர்காலம் தயார் என்ற தலைப்பிலான இந்த அறிக்கையை வர்த்தகம், தொழில், ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், … Read more

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் அகற்றம்; ‘பாஸ்டேக்’ வசூல் முறையை ரத்து செய்ய முடிவு? ‘நம்பர் பிளேட் ரீடர்’ திட்டம் வருகிறது

புதுடெல்லி: சுங்கச் சாவடிகளில் அமலில் உள்ள ஃபாஸ்டேக் வசூல் முறையை ரத்து செய்துவிட்டு புதியதாக நம்பர் பிளேட் ரீடர் திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக ெசல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால விரயம் – சில்லறைத் தட்டுப்பாடு – எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே, இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை … Read more

மிகச் சிறப்பான பணிகளுக்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது மிசோரம் போலீஸ்

ஐசால்: மிகச் சிறப்பான பணிக்காக பிரிட்டனை சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் மிசோரம் போலீஸ் இடம் பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், காவல் துறையினர் கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு கடத்தல் விலங்குகள் 468-ஐ பறிமுதல் செய்தனர். கடந்த ஜூன் மாதத்தில் 930 கிலோ 229 கிராம் போதைப் பொருட்களை கைப்பற்றி அழித்தனர். மிசோரம் காவல் துறையினரின் இந்த கடமை மற்றும் அர்ப்பணிப்பு பிரிட்டனில் இயங்கும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்காக மிகவும் … Read more

இந்தியாவில் சமூக, சகோதரத்துவத்தை அழிக்க பாஜக நினைக்கிறது…! – அசாதுதீன் ஓவைசி கண்டனம்..!

தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கியை விமர்சித்தும், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியும் பேசினார். இந்த வீடியோ ‘ஸ்ரீ ராம் சேனல் தெலுங்கானா’ என்ற யூ-டியூப் சேனல் ஒன்றில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எம்எல்ஏ ராஜா வை … Read more

ரயில்வே சார்பில் கடந்த ஆண்டு பயணிகளுக்கு ரூ.62ஆயிரம் கோடி மானியம்.. மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்..!

ரயில்வேத்துறை சார்பில் கடந்த ஆண்டு பயணிகளுக்கு 62ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், EMU ரயில்கள் கட்டுமானப் பணியில் இருப்பதாகவும், அவை மெட்ரோ லைனில் கட்டப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்த ரயிலில் எஞ்சின் கிடையாது என்றும் இரண்டு அல்லது 3வது பெட்டியில் இருந்து இயக்கப்பட உள்ளதாகவும் கூறினார். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் சார்பில் 5ஜி சேவை அக்டோபரில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். … Read more

பீகார் சட்டசபை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் குமார் சின்ஹா

பாட்னா: பீகார் சட்டசபை சபாநாயகர் பதவியை விஜய் குமார் சின்ஹா ராஜினாமா செய்தார். பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்துள்ளது. பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ்-க்கு … Read more

கேரளா: செப்டிக் டேங்கில் தலைக்குப்புற விழுந்த யானை உயிரிழப்பு

கேரள மாநிலம் திருச்சூரில் காட்டுயானை ஒன்று செப்டிக் டேங்கில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள வெள்ளிகுளங்கரை பகுதியில் வில்லுக்குன்று காப்பு வனப்பகுதியை ஓட்டியுள்ள விவசாய நிலத்தில் பயன்பாட்டில் இல்லாத செப்டிக் டேங்க் இருந்துள்ளது. அந்த பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை ஒன்று அதில் தவறி விழுந்துள்ளது. தலை மற்றும் முன்பகுதி செப்டிக் டேங்கில் மாட்டிக்கொண்டதால் மூச்சு விடமுடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்து இடத்தின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவம் … Read more

பிஹாரில் கெத்து காட்டிய நிதிஷ்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் நிதிஷ் குமார் தலைமையிலான மஹா கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பாஜக வெளிநடப்பு செய்தது. அண்மையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார் மீண்டும் பிஹாரின் முதல்வரானார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தக் … Read more