வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ் திருமணமாகாத பெண்ணுக்கும் உரிமை வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந்துள்ளார். அவர் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருமணமாகாதவர் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். கருவை கலைக்க உயர் நீதிமன்றமும் அனுமதி மறுத்துவிட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணமாகாத … Read more

சிறிய வகை ராக்கெட்: எஸ்எஸ்எல்வி என்றால் என்ன?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், இரு செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி வகையின் முதல் சிறிய ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்வி – SSLV என்றால் என்ன? தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. இதில் … Read more

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது: மாநில முதலமைச்சர்கள், துணை ஆளுநர்கள் உள்ளிட்டேர் பங்கேற்பு!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் கூட்டத்தில் தேசியக்கல்வி கொள்கை, நகராட்சி நிர்வாகம் பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

`செயற்கை கோள்களிலிருந்து சிக்னல் வரவில்லை’- இஸ்ரோவின் அடுத்த நடவடிக்கை என்ன? #SSLV

விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முதன்முறையாக எஸ்.எஸ்.எல்.வி எனப்படும் சிறிய செயற்கை கோள்களுக்கான ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள ஏவுதளத்திலிருந்து காலை 9:18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், செயற்கைக்கோள்களை பூமிக்கு அருகிலேயே சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. முதல் பயணத்தில் தனது இரண்டு செயற்கைக்கோள்களை தாங்கிச் சென்றது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட். SSLV-D1/EOS-02 Mission: the … Read more

ஆகஸ்ட் 21-ம் தேதி மும்பையில் ஏழுமலையான் கோயிலுக்கு அடிக்கல் – முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நேரில் அழைப்பு

திருப்பதி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையான் கோயில் கட்டுவது என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி மகாராஷ்டிர அரசு நவி மும்பை உல்வே பகுதியில் ரூ. 500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சமீபத்தில் வழங்கியது. இங்கு ஏழுமலையான் கோயிலை தன் சொந்த செலவில் கட்டித்தர பிரபல துணி நிறுவனமான ‘ரேமாண்ட்’ஸ்’ முன் வந்தது. இந்நிறுவனம் இதற்காக ரூ. 60 முதல் 70 கோடி செலவிட்டு ஏழுமலையான் … Read more

SSLV-D1: செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை – இஸ்ரோ தகவல்!

விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளித் துறையின் தேவையைக் கருத்தில் கொண்டு, 500 கிலோ வரையிலான எடையுடன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக, சிறிய ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. அந்த வகையில், 120 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, இரண்டு செயற்கைக்கோள்களுடன் காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 145 கிலோ … Read more

எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் சிக்னல் துண்டிப்பு

அமராவதி: எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட  2 செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. EOS-02, AzaadiSAT ஆகிய செயற்கைக் கோள்களை காலையில்  எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது. செயற்கைக் கோள்களில் இருந்து சிக்னல்களை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சுஷ்மா நினைவு நாள் – அமித் ஷா, ராஜ்நாத், ஜெய்சங்கர் மரியாதை

புதுடெல்லி: பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி முதல்வராகவும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த 2014 முதல் 2019 வரையில் மோடி தலைமையிலான அரசில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருடைய 3-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், “சுஷ்மா ஸ்வராஜ், … Read more

திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது: பினராயி விஜயன் புகழ்ச்சி

திருவனந்தபுரம்: திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என பினராயி விஜயன் புகழ்ந்துள்ளார். கலைஞரின் வாழ்வும், நினைவும் அரசியலமைப்பை பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் என பினராயி விஜயன் கூறியுள்ளார். கலைஞரின் நினைவு நாளையொட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில் அஞ்சலி செலுத்தினார்.