‘இலவச அறிவிப்பை வைத்தே ஆட்சியை பிடிக்க முயற்சி’- உச்சநீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம்

`அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஒரு முடிவு எடுக்கலாமே?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் இலவசம் தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையத்தையோ, குழுவையோ உச்சநீதிமன்றமே அமைக்கலாம் என்றும் அவ்வாறு அமைப்பதாக இருந்தால் உச்சநீதிமன்ற … Read more

2024-ல் டிடிபி 127 தொகுதிகளில் வெற்றி பெறும் – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி. கணிப்பு

ஹைதராபாத்: வரும் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஆந்திர பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 175 பேரவை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளும் தேர்தலை எதிர்கொள்கின்றன. இத்தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில், பாஜக, ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் இறங்க உள்ளன. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி. ரகுராம கிருஷ்ணம்ம ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஜூன், ஜூலை முதல் வாரத்தில் ஆந்திராவில் பரவலாக கருத்துக்கணிப்பு நடத்தினோம். இதன்படி … Read more

இலவசங்கள் தொடர்பான வழக்கு: அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு ஏன் கூட்டக்கூடாது? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

இலவசங்கள் தொடர்பான விவகாரத்தில், அனைத்து கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு ஏன் கூட்டக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதை முறைப்படுத்தக் கோரி, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நடந்து வருகிறது. இதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையின் போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியதாவது: … Read more

சுருக்குமடி வலை விவகாரத்தில் குழுவின் அறிக்கையை 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சுருக்குமடி வலை விவகாரத்தில் குழுவின் அறிக்கையை 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 நாட்டிக்கல் மைலுக்கு மேல் சுருக்குமடி வலையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. தடை விதித்த தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் குழு அமைப்பு அமைக்கப்பட்டது.

மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர், மனைவியை மாண்டோலி சிறைக்கு மாற்ற உத்தரவு

புதுடெல்லி: பல தொழில் அதிபர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் சுகேஷ் சந்திர சேகர். மோசடி பணத்தில் தனக்கு நெருக்கமான பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு குதிரை உட்பட ரூ.5 கோடிக்கு மேல் பரிசுப் பொருட்களை அளித்துள்ளார். இதனால் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான நிதி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸையும் குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்தது. சுகேஷ் சந்திர சேகர் டெல்லி ரோஹினி சிறையில் இருந்தபோது, சிறை அதிகாரிகள் மாதம் ரூ. 1.5 … Read more

சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டைப் படம்பிடிக்கும் தானியங்கி கேமராக்கள் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டைப் படம்பிடிக்கும் தானியங்கி கேமராக்கள் பொருத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தானியங்கி கேமராக்கள் நம்பர் பிளேட்டைப் படம்பிடித்த பின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகக் கட்டணம் பிடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் முறை இப்போது இல்லை என்றும், அதற்கான சட்ட விதிகளைக் கொண்டுவந்தபின் விரைவில் பாஸ்டேக் முறை முடிவுக்கு வரும் என்றும் அமைச்சர் … Read more

இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!: நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு யோசனை..!!

டெல்லி: இலவசங்கள் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு யோசனை தெரிவித்துள்ளது. தோ்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடா்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாய என்ற வழக்குரைஞா் பொதுநல வழக்கு தொடா்ந்துள்ளாா். அதில், நடைமுறைக்கு ஒத்துவராத இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அதன் பதிவை ரத்து செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென அவா் கூறியிருந்தாா். இந்த வழக்கில் திமுக தன்னையும் ஒரு தரப்பாக … Read more

”ஹே இது என்ன சப்போர்ட் இல்லாம நிக்குது” -ரயில்வே டிராக்கில் மின்கம்பம் வைத்த ஒப்பந்ததாரர்

ஒப்பந்தகாரர்களின் அலட்சியத்தால் பல குளறுபடிகள் நடைபெறுவது தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் கண்ணுக்கு தெரிய வருகிறது. அந்த வகையில் ரயில் செல்லும் தண்டவாளத்திற்கு நடுவில் மின்கம்பத்தை எழுப்பியிருப்பது பற்றி என்றாவது அறிந்திருக்கிறார்கள். அப்படியான சிறப்பான சம்பவம்தான் மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், “சாலையோரங்களில் மின் கம்பங்கள் இருப்பதை கண்டிருப்போம். ஆனால், முதல் முறையாக இப்போதான் … Read more

திருப்பதி உண்டியல் காணிக்கை 22 நாட்களில் ரூ.100 கோடி தாண்டியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 6-வது மாதமாக உண்டியல் வருமானம் ரூ.100 கோடியை தாண்டியது. இந்த மாதத்தில் 22-ம் தேதியே ரூ.100 கோடியை கடந்ததால், இம்மாத உண்டியல் வருவாய் ரூ.140 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததும் திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் பக்தர்களின் வருகை படிப்படியாக அதிகரித் தது. தற்போது தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதனால் உண்டியல் வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த … Read more

'கட்சியில் சேர்ந்தால் ரூ.20 கோடி' – பாஜக வலை வீசியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் 20 கோடி ரூபாய் தருவதாக அக்கட்சி மூத்தத் தலைவர் ஆசை வார்த்தை கூறியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில், அண்மையில், மதுபானக் கொள்கை விதிமீறல் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பதிவு … Read more