₹7 லட்சம் வேணுமா? ஜெயிலுக்கு போறியா? மும்பைவாசிக்கு செக் வைத்த சைபர் போலீஸ்; ஏன் தெரியுமா?

ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் வங்கிக்கு சென்று செலான் பூர்த்தி செய்து அதனை பரிவர்த்தனைக்கு உட்படுத்தும் நிலை மாறி, இருந்த இடத்திலிருந்தே நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இதற்காக பல UPI தளங்களும் இயங்குகிறது. இருப்பினும், இவ்வாறு பரிவர்த்தனை செய்யும் போது அவ்வப்போது பல மோசடிகளும், குளறுபடிகளும் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறுதலாக யாரோ ஒருவரது வங்கி கணக்கில் 7 லட்சம் ரூபாயை அனுப்பி பரிகொடுத்த … Read more

எளிமையாக நடைபெற்ற பஞ்சாப் முதலமைச்சரின் 2-வது திருமணம்..!

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்கின் இரண்டாவது திருமணம், சண்டிகரில் எளிமையாக நடைபெற்றது. இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், மருத்துவர் குர்பீரித் கவுரை, பகவந்த் மான் சிங் 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். Source link

5 நிர்பயா குற்றவாளிகள் உள்பட 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைய உள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18ம் தேதி நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகத்ராய். இவர் ராம்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தை சேர்ந்த விஜயேந்திர மகோத்தா மனைவி மற்றும் 5 குழந்தைகளை வீட்டுக்கு தீ வைத்து உயிரோடு எரித்து கொன்றார். … Read more

மளிகை கடை வியாபாரி டூ உலகம் சுற்றும் கேரளத்து பெண்.. யார் இந்த மோலி ஜாய்?

பிறந்து வளர்ந்த ஊரிலேயே இருப்பவர்களுக்கு வெளியூருக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சென்று சுற்றி பார்த்து வருவது எப்போதும் பிடித்தமான ஒன்றாகத்தான் இருக்கும். பெருகி வரும் பணிச்சுமையால் எல்லாராலும் எல்லா சமயங்களில் அப்படி ட்ரிப் சென்று வந்துவிட முடியாது. நேரம் கிடைத்தாலும் செலவழிக்க பணம் கிடைக்காமல் போகும். இப்படியாக பல இடையூறுகள் வந்துச் செல்லும். ஆனால், கேரளாவைச் சேர்ந்த 61 வயது பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 11 வெளி நாடுகளையும், பல உள்ளூர் பகுதிகளையும் சுற்றிப் … Read more

“மாணவர்கள் வராததால் சம்பளம் வேண்டாம்” – ரூ.23 லட்சத்தை திருப்பிக் கொடுத்த பிஹார் கல்லூரி பேராசிரியர்

பாட்னா: “மாணவர்கள் வகுப்புக்கு வரவில்லை. பாடம் நடத்தாமல் சம்பளம் பெற மனசாட்சி உறுத்துகிறது” எனக் கூறி ரூ.23 லட்சம் சம்பளப் பணத்தை கல்லூரியின் பேரில் காசோலை எழுதிக் கொடுத்துள்ளார் பேராசிரியர் ஒருவர். பிஆர் அம்பேத்கர் பிஹார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள நிதிஷேஸ்வர் கல்லூரி. 1970 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் நிதிஷேஸ்வர் பிரசாத் சிங் நினைவாக நிதிஷேஸ்வர் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. இது 1976 ஆம் ஆண்டு முதல் பிஆர் அம்பேத்கர் பிஹார் … Read more

வகுப்புக்கு வராத மாணவர்கள் : மனசாட்சி உறுத்தியதால் தனது 23 லட்சம் ரூபாய் சம்பளத்தை திரும்ப கொடுத்த கல்லூரி பேராசிரியர்

பீகாரில், மாணவர்கள் வகுப்பில் பங்கேற்காத நிலையில், தனது 3 ஆண்டு ஊதியத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் திரும்ப அளித்துள்ளார். முஷ்ரபூரில் உள்ள நித்தீஸ்வரர் கல்லூரியில் லாலன் குமார் என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தனது இந்தி வகுப்பில் மாணவர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் மனசாட்சிக்கு பயந்து, 23 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை பல்கலைக்கழகத்துக்கு திரும்ப அளித்துள்ளதாக, உதவி பேராசிரியர் கூறியுள்ளார்.   Source link

கேரளாவில் இன்று 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு கோழிக்கோடு உள்பட பெரும்பாலான வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தென் மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா தவிர ஏனைய 11 … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் – தமிழகத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி 12-ம் தேதி கொண்டு வரப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவைச் செயலாளருமான சீனிவாசன் ஆலோசனை மேற்கொண்டார். குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் … Read more

வீட்டில் குண்டு வெடித்து தந்தை, மகன் சாவு

திருவனந்தபுரம்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பசல் ஹக் (45). அவரது மகன் சகீதுல் (22). 2 பேரும் கடந்த சில வருடங்களாக கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள மட்டனூரில் பழைய இரும்பு மற்றும் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். அந்த வீட்டில் மேலும் 2 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து … Read more

2 வருடத்தில் 21 பேரை கொன்ற 'Man Eater' பெண் புலி – வனத்துறையிடம் சிக்கியது எப்படி?

உத்தர பிரதேசத்தின் துத்வா புலிகள் காப்பகத்தில் இருந்த ஆட்கொல்லி பெண் புலியொன்று, இனி தன் வாழ்நாளை லக்னோ உயிரியல் பூங்காவில் கழிக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் பின்னணி நம்மை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயம். விஷயம் என்னவெனில், இந்தப் புலி கடந்த அக்டோபர் 2020 முதல் இப்போது வரை சுமார் 21 மனிதர்களை கொன்றுள்ளதாம். இந்தப் புலியுடன், மற்றொரு புலியையும் உ.பி.யின் மாநில வனத்துறை பிடித்திருந்தது. காப்பகத்துக்கு அருகே இருந்த கிராம மக்களை இப்புலிகள் தொடர்ந்து தாக்கியதால், … Read more