பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை: 3 விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம்

புதுடெல்லி: ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணைகளின் பராமரிப்பு பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக ஒரு ஏவுகணை சீறிப் பாய்ந்தது. இந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான் கன்னு நகரின் மீது விழுந்தது. அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன. இந்த விவகாரத்தில் தான் இந்திய விமானப்படை அதிகாரிகள் பணியிடை … Read more

இந்தியாவில் தலைவரைக் கொல்லவும், மதக்கலவரத்தைத் தூண்டவும் சதித்திட்டத்துடன் இந்திய வர இருந்த தீவிரவாதி ரஷ்யாவில் கைது..!

இந்தியாவில் முக்கியத் தலைவரைக் கொல்லவும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மதக்கலவரங்களைத் தூண்டவும் திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவனை ரஷ்யாவில் FSB அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உஸ்பெக்கிஸ்தான் குடியுரிமை பெற்ற மஷ்ரப் கான் என்ற அந்தத் தீவிரவாதிக்கு துருக்கியில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கைது சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் மறைந்து வாழும் பாகிஸ்தான் ஸ்லீப்பர் செல் தீவிரவாதிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் Source … Read more

பாக்.கில் விழுந்த ஏவுகணை விமானப்படையின் 3 அதிகாரி டிஸ்மிஸ்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் பிரதான ஏவுகணையாக பிரம்மோஸ் ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணைகளில் ஒன்று, கடந்த மார்ச் 9ம் தேதி தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று விழுந்தது. இதனால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டது. இதில், ஏவுகணையை செலுத்துவதற்கான நிலையான இயக்க விதிமுறைகளை விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பின்பற்றவில்லை என்று தெரிய வந்தது. இந்த தவறுக்காக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தான் அரசிடம் ‘மிகவும் வருந்தத்தக்கது’ என்று மன்னிப்பு … Read more

மலேசிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டு சிறை உறுதி

புத்ராஜெயா: ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமரான நஜிப் ரசாக்குக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜிப் ரசாக், கடந்த 2015ல் அவரது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான நிதி முதலீட்டு நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஊழல்  குற்றச்சாட்டுக்கு ஆளானார். மொத்தம் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் செய்யப்பட்டதில், ரசாக் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ.100 கோடி வரை … Read more

ஆசிரியை வங்கி கணக்கில் ரூ.21 லட்சம் அபேஸ்..! – வாட்சாப் மூலம் நடந்த மோசடி..!

பல்வேறு காலகட்டங்களில் திருட்டுகள் நூதனமாக நடந்து கொண்டு தான் உள்ளன. இந்த காலத்தில் தொழில்நுட்பத்திலும் திருட்டுகள் அதிகரித்துள்ளன. செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஏடிஎம் பின் கேட்பது போன்ற திருட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் மதனபள்ளி நகரில் ரெட்டப்பநாயுடு காலனியில் வசித்து வருபவர் வரலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் ஒன்று வந்துள்ளது. அதனுடன் லிங்க் ஒன்றும் இருந்துள்ளது. அந்த லிங்க்-கை ஆசிரியை திறந்து … Read more

கேக்கில் விஷம் கலந்து கொடுத்து மனைவி, 2 குழந்தைகள் கொலை: தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை

திருமலை: மனைவி, 2 குழந்தைகளுக்கு கேக்கில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இதற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத்திற்கு மனைவி அக்‌ஷயா(36), மகள் பிரதியுஷா(13), மகன் அத்வைத்(10) ஆகியோருடன் குடிபெயர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் சங்கரம்பேட்டா அருகே பங்குதாரர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு நிலம் வாங்கி லேஅவுட் அமைத்து ரியல் எஸ்டேட் … Read more

சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜக எம்எல்ஏ கைது: தெலங்கானாவில் பதற்றம்

ஐதராபாத்: தெலங்கானாவில் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங், கடந்த சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட மதத்தினரை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து கூறி பேசிய வீடியோ வைரலானது. அதனால் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருந்ததால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை  பாஜக … Read more

முகமது நபிகள் குறித்து அவதூறு! தெலங்கானா பாஜக எம்எல்ஏ அதிரடி கைது!

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக தெலங்கானா மாநில பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம் கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங், கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்லாம் மற்றும் முகமது நபிகள் குறித்து அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து கூறி பேசிய வீடியோ வைரலானது. இதையடுத்து பாஜக எம்எல்ஏ ராஜா சிங் அம்மாநில போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாரதிய … Read more

முன்விடுதலை சரியா? – பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த முன்னாள் நீதிபதியின் பார்வை

மும்பை: “இந்த முடிவை யார் எடுத்திருந்தாலும், அவர்கள் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளின் முன்விடுதலையை மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யுடி சால்வி விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்த குற்றவாளிகள் 11 பேரையும், 14 வருடங்களுக்கு முன்பு அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தவர் முன்னாள் நீதிபதி யுடி … Read more

2 ஆண்டுக்கு பிறகு இந்திய மாணவர்களுக்கு விசா வழங்க சீனா முடிவு..!

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட மாணவர் விசாக்களை நாளைமுதல் வழங்க சீனஅரசு முடிவு செய்துள்ளது. மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளைப் படித்துவந்த 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் கொரோனா காலத்தில் தாயகம் திரும்பினர். சீனப் பல்கலைக் கழகங்களில் பயின்று பாதியில் திரும்பிய மாணவர்கள், புதிய மாணவர்கள் மட்டுமின்றி, இந்திய தொழிலதிபர்களுக்கும், சீனாவில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கும் விசா வழங்கப்படும் என்று டெல்லியில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மீண்டும் சேர ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய … Read more