டெல்லியில் மதுபான விற்பனை கொள்கை முறைகேடு புகாரில் துணை முதல்வர் மீது வழக்குப்பதிவு

டெல்லி: டெல்லியில் மதுபான விற்பனை கொள்கை முறைகேடு புகாரில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் சூடுபிடித்த விவாதம்! பிடிஆர் முன்வைத்த டாப் 5 அம்சங்கள் என்னென்ன! முழு அலசல்

பொருளாதாரம், இலவசங்கள், மக்கள் நலத் திட்டங்கள் பற்றி தேசிய அளவில் விவாதங்கள் கொளுந்து விட்டு எரிந்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தேசிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி இந்த விவாதத்’தீ’க்கு பெட்ரோலாக அமைந்து பற்றி எரியச் செய்தது என்றே கூறலாம். ஆனால் இந்த விவாதத்தீ எங்கு துவங்கியது? யார் இதை பற்ற வைத்தார்கள் என்று தெரியுமா? குஜராத் மாநிலத் தேர்தலில் வலுவான அடித்தளம் அமைக்க டெல்லி முதலமைச்சர் தலைமையிலான ஆம் … Read more

நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை தரதரவென இழுத்து ரயில் முன் தள்ளி கொன்ற கணவன்.. போலீசார் விசாரணை!

மகாராஷ்டிராவில் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை ரயில் வரும்போது தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர், அங்குள்ள ரயில் நிலையத்தில் 2 குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்த மனைவியை எழுப்பி, அவரை தரதரவென இழுத்து சென்று, அவாத் விரைவு ரயில் வரும் தண்டவாளத்தில் வீசினார். இதில் மனைவி உடல் சிதைந்து உயிரிழந்த நிலையில், குழந்தைகளை தூக்கி கொண்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி … Read more

பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்ட விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம்

டெல்லி: மார்ச் 9-ல் பிரமோஸ் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்ட விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். குரூப் கேப்டன், விங் கமாண்டர், ஸ்குவாடரன் லீசர் நிலையிலுள்ள தலா ஒரு அதிகாரியை விமானப்படை பணி நீக்கம் செய்துள்ளது.

ஆளுநருக்கே டஃப் கொடுக்கும் ஆம் ஆத்மி… பஞ்சாப்பில் சம்பவம் செய்த முதல்வர் பகவந்த் மான்!

‘ஆளு அல்லது ஆளுநர்களை வைத்து கெடு’ என்று புதுமொழி சொல்லும் அளவுக்கு பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு தந்துவரும் குடைச்சல்கள் ஏராளம். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை பல மாதங்களுக்கு பிறகு, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆர்.என்.ரவி, தெலங்கானா மாநில அரசுக்கு போட்டியாக ராஜ்பவனில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தும் தமிழிசை சௌந்தரராஜன் என இப்படி பாஜக ஆட்சி புரியாத … Read more

சுகேஷ் சந்திரசேகரின் உயிருக்கு அச்சுறுத்தல் வழக்கு; திகார் டூ மண்டோலி சிறைக்கு மாற்ற அனுமதி.! டெல்லிக்கு வெளியே அனுப்ப சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் அவரையும், அவரது மனைவியையும் திகார் சிறையில் இருந்து மண்டோலி சிறைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது மனைவியான நடிகை லீனா மரியா பாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். … Read more

மகாராஷ்டிரா அரசியல் குழப்ப விவகாரம் – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

மகாராஷ்டிரா அரசியல் குழப்ப விவகாரம், உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்திவந்த நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் தனக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்து தற்பொழுது முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார். ஏக்நாத் … Read more

சிவசேனாவுக்கு உரிமை கோரிய வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

சிவசேனா தேர்தல் சின்னம் வழக்கில், வரும் வியாழக்கிழமை வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிராக அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒன்றிணைந்ததில் அரசு கவிழ்ந்தது. இதனால் முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் … Read more

டிஆர்டிஒ – இந்திய கடற்படை இணைந்து நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து வானில் குறுகிய தூரம் உள்ள இலக்கினை செங்குத்தாக பாய்ந்து சென்று தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.  டிஆர்டிஒ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட குறுகிய தூரம் உள்ள இலக்கினை தாக்கி அழிக்கும் ஏவுகணையின் சோதனை ஒடிசா மாநிலத்தின் சண்டிப்பூர் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்டது. டிஆர்டிஒ மற்றும் இந்திய கடற்படை இணைந்து இந்த சோதனையை நடத்தியது. தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை … Read more

இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு; அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வாய்ப்பு? சுப்ரீம் கோர்ட்டில் இன்று பரபரப்பு விவாதம்

புதுடெல்லி: இலவச திட்டங்கள் ெதாடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின் போது, இவ்வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இலவச வாக்குறுதிகளை தடை செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பு குறித்து கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு விசாரித்து வருகிறது. கண்காணிப்பு குழு அமைக்க … Read more