ம.பி.யில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு நிலம் ஒதுக்கியது குறித்து விசாரணை

போபால்: போபால் நகரில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் விதிகளை மீறி வர்த்தக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மாநில நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் புபேந்திர சிங் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “போபால் பிரஸ் காம்ப்ளக்ஸ் பகுதியில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் விதிகளை மீறி வர்த்தக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார். பின்னர் இந்த விவகாரம் … Read more

டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம்

புதுடெல்லி: நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் குழு இயங்கி வந்தது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜ அரசு அமைந்தவுடன்,  திட்டக்குழு கலைக்கப்பட்டது. அதற்குப் பதில் நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் நிதி ஆயோக் நிர்வாக குழுவின் 7வது கூட்டம் நாளை நடக்கிறது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். மாற்றுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் … Read more

இன்று குடியரசு துணை தலைவர் தேர்தல் – நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடுகள் மும்முரம்

புதுடெல்லி: புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ளது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் கடந்த ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் திரவுபதி முர்மு … Read more

சென்னையில் நீர் மேலாண்மைக்கு புதிய திட்டம் உள்ளதா?… தயாநிதி மாறன் எம்பி கேள்வி

புதுடெல்லி: ‘சென்னையில் நீர் மேலாண்மைக்காக புதிய திட்டங்களை ஒன்றிய அரசு வகுத்துள்ளதா’ என மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மக்களின் குடிநீர் வசதி, நீர் மேலாண்மையில் அதிகம் கவனம் செலுத்தும். அந்த வகையில் 2010ம் ஆண்டு கலைஞரின் ஆட்சியில் ரூ.1000 கோடி செலவில் வடசென்னை மீஞ்சூரிலும், ரூ.908 கோடி செலவில் தென்சென்னை நெம்மேலியிலும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் தொடங்கப்பட்டன. 2007ம் ஆண்டு காவிரி கூட்டுக் … Read more

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளுக்கு முற்றுப்புள்ளி – ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஜிபிஎஸ் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு கி.மீ. கணக்கில் நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் தொடக்கத்தில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்பின், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட … Read more

நாடாளுமன்றத்தில் இன்று வாக்குப்பதிவு புதிய துணை ஜனாதிபதி யார்?

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் எம்பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜ கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் ஆளுநருமான மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.இதில், … Read more

குஜராத், ராஜஸ்தான், உ.பி., பஞ்சாபில் பரவும் மர்ம நோய் – வடமாநிலங்களில் 16 ஆயிரம் கால்நடைகள் உயிரிழப்பு

புதுடெல்லி: குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் மர்ம நோயால் பசுக்கள் உள்ளிட்ட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. நோயால் பசுக்கள் உயிரிழப்பதால் பால் வாங்க மக்கள் அஞ்சுகின்றனர். கால்நடைகள் உயிரிழக்கும் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த 1929-ம் ஆண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் பரவுவது கண்டறியப்பட்டது. அதன்பிறகு கடந்த 2015-ம் ஆண்டில் துருக்கி, கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கால்நடைகளுக்கு இந்நோய்பரவியது. கடந்த 2019-ம் … Read more

கியூட் நுழைவு தேர்வில் 2வது நாளாக குளறுபடி: பல இடங்களில் தேர்வு ரத்து

புதுடெல்லி: கியூட் எனப்படும் பொது நுழைவு தேர்வின் முதல்கட்ட தேர்வு. கடந்த மாதம் முதல் கட்ட தேர்வு முடிந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள 489 மையங்களில் 2ம் கட்ட தேர்வு நேற்று முன்தினம் காலை துவங்கியது.  காலை 9 மணிக்கு ஒரு தேர்வும் (முதல் ஷிப்ட்), மதியம் 3 மணிக்கு (2வது ஷிப்ட்) இன்னொரு தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,  நிர்வாக மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகளினால் பல மையங்களில் தேர்வு துவங்குவது தாமதமானதால் மாணவர்கள் அவதிக்குள்ளாயினர். … Read more

கேரளாவில் தொடரும் மழை 22 அணைகள் திறப்பு ஆறுகளில் வெள்ளம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் நிரம்பியுள்ள முல்லைப் பெரியாறு, மலம்புழா உட்பட 22 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், ஆறுகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து தீவிரமாக மழை பெய்ததால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. முல்லைப் பெரியாறு அணை 137 அடியை தாண்டியதை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டது. இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஒரு சில அடிகளே உள்ளதால் அந்த அணைக்கு … Read more

பிரமோற்சவத்தின்போது பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க தினம் 9 லட்சம் லட்டுகள்: அறங்காவலர் குழு தலைவர் ஏற்பாடு

திருமலை: திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவத்தின் போது பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க, தினமும் 9 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம், திருமலை அன்னமய்யா பவனில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு  தலைவர் சுப்பா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கி, அக்டோபர் 5ம் தேதி 9ம் நாள், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு … Read more