பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : பிரதமர் மோடி கேட்டறிந்தார்!!

பாட்னா : பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டி உள்ளது. உடல்நிலை மோசமானதால் ஜாமீனில் உள்ள லாலு பிரசாத் யாதவ், நேற்று முன்தினம் தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவும் காயமும் ஏற்பட்டது. உடனடியாக அவரை பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனைக்கு சென்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலு … Read more

மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக இளையராஜா, பி.டி. உஷா தேர்வு – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதுடெல்லி: மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் விஜயேந்திர பிரசாத், கொடையாளரும், கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா கோயில் நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டோரை நியமன எம்.பி.க்களாக … Read more

முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை..!

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கீழே விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சிறப்பு சிகிச்சைக்காக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாட்னாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த லாலு பிரசாத் யாதவ் ஆம்புலன்சு மூலமாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். லாலு பிரசாத்தின் உடல் நலம் சீராக இருப்பதாகவும் அவர் சிறப்பு சிகிச்சைக்காக டெல்லி அழைத்துவரப்பட்டதாகவும் லாலுவின் மனைவி ராப்ரி தேவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்   Source link

கர்நாடகாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு; 144 தடை உத்தரவு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த பெண்களை கிண்டல் செய்ததாக தகராறு ஏற்பட்டு அந்த தகராறு வன்முறையில் முடிந்துள்ளது.இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் சில கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பத்தில் 7 காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் தனியார் மருத்துவமனையில் … Read more

உள்நாட்டிலேயே தயாரித்த விக்ராந்த் கப்பல் கடற்படையில் அடுத்த மாதம் சேர்ப்பு

புதுடெல்லி: இந்திய கடற்படையில் ஏற்கெனவே இருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த 1997-ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதன்பின் அதே பெயரில் உள்நாட்டிலேயே இந்த கப்பல் 40,000 டன் எடையில் தயாரிக்கப்பட்டு வெள்ளோட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்திய கடற்படையில் அடுத்த மாதம் சேர்க்கப்படவுள்ளது. இந்த விமானத்தில் பயன்படுத்த 24 முதல் 26 போர் விமானங்களை வாங்கும் பணியில் கடற்படை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரான்ஸ் தயாரிப்பான … Read more

ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் பாதுகாப்பானவை என அந்த நிறுவனம் உறுதி

விமானப் பாதுகாப்பு தொடர்பாக தினசரி 30 சம்பவங்கள்  நிகழ்ந்தாலும், பயணிகளின் பாதுகாப்புக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பருவநிலை, இயந்திரக் கோளாறு, பறவை மோதல், பயணியின் உடல் நல பாதிப்பு, வானில் வட்டமடித்தல் போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகள்  விமானப் பயணிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி வருகின்றன. இதனிடையே ஒரே நாளில் இரண்டு ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த அந்நிறுவனத்தின் தலைமை … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 18,936 பேருக்கு கொரோனா… 35 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 18,936 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,59,239 ஆக உயர்ந்தது.* புதிதாக 35 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

சிறப்பு குழந்தையை சந்தித்த பிறகு என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்தது – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

காந்திநகர்: சிறப்பு குழந்தையை சந்தித்த பிறகு என்னுடைய தன்னம்பிக்கையின் அளவு அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற ‘டிஜிட்டல் இந்தியா வாரம் 2022’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பல்வேறு டிஜிட்டல் தளங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில், 11 வயது சிறப்புக் குழந்தை பிரதமேஷ் சின்ஹாவுடன் அவர் கலந்துரையாடினார். பார்வை குறைபாடு உடைய பிரதமேஷ் சின்ஹா, திங்கர்பெல் லேப்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக உள்ளார். இந்நிறுவனம் உலகிலேயே … Read more

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் கருத்தரங்கு.. பிரதமர் மோடி பங்கேற்பு.!

வாரணாசியில் மூன்று நாள் நடைபெறும் அகில பாரதிய கல்வி தொடர்பான விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தேசிய கல்விக் கொள்கையின் இலக்கை அடைவதற்கான வழிகாட்டுதல் தொடர்பான கருத்தரங்கில் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் பங்கேற்க உள்ளனர். மாலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் 1800 கோடி ரூபாய் மதிப்புடைய பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். Source link

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்!!

காத்மாண்டு : 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.