மீண்டும் நிர்வாண போட்டோ ஷூட் எடுக்க ரன்வீருக்கு ‘பீட்டா’ கடிதம்: எதிர்ப்பு ஒருபக்கம்; வியாபாரம் மறுபக்கம்

புதுடெல்லி: நிர்வாண புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பாலிவுட் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் பத்திரிகை ஒன்றின் முன்பக்க அட்டையில் வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன் பெரும் கண்டனங்கள் எழுந்தன. சிலர் நிர்வாண புகைப்படத்திற்கு ஆதரவு கருத்துகளும் தெரிவித்தனர். ரன்வீர் சிங்கிற்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் சில இடங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. … Read more

கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார நடைமுறைகள் என்னென்ன? – மக்களவையில் மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார நடைமுறைகள் என்ன என்பது பற்றி மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதுகுறித்து விழுப்புரம் தொகுதியின் திமுக எம்பியான டி.ரவிக்குமார், “கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறதா.. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆஷா பணியாளர்களும் ஈடுபட்டுள்ளார்களா? விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவர்களால் மேற்கொள்ளப்படும் உத்திகள் என்ன? திட்டத்தின் நோக்கங்களைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏதேனும் சவால்களை எதிர்கொள்கின்றனவா?’ எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பாரதி ப்ரவீன் பவார் , … Read more

விலைவாசி உயர்வை கண்டித்து பேரணி: ராகுல் உள்பட 65 எம்பிக்கள் கைது: பிரியங்காவை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றதால் பரபரப்பு

புதுடெல்லி: விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி.க்கள் அனைவரும் கருப்பு உடையில் பங்கேற்றனர். டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் 65  காங்கிரஸ் எம்பி.க்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கியதில் இருந்து, ஒருநாள் கூட முழுமையாக அலுவல் நடக்கவில்லை. விலைவாசி உயர்வு, … Read more

மார்பக புற்றுநோய் தொடர்பான தனிநபர் மசோதா: மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல்

புதுடெல்லி: பெண்களுக்காக மார்பக புற்றுநோய் தொடர்பான தனிநபர் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் திமுகவின் தென் சென்னை எம்.பியான தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்தார். தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்துள்ள இந்த தனிநபர் மசோதா, நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் நலன் தொடர்பானதாக அமைந்துள்ளது. இதன்மூலம், மார்பகப் புற்றுநோய் பற்றி அனைத்து தரப்பு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது. நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் ‘மேமோகிராபி’ சிகிச்சைகளுக்கான வசதிகள் கிடைக்கும். மார்பக … Read more

நிர்வாண வீடியோவில் ஆந்திரா எம்.பி..! – பதவி பறிபோக வாய்ப்பு ..?

வீடியோ காலில் பெண்ணுடன் நிர்வாணமாக நின்று பேசி தனது அந்தரங்கத்தை காட்டுகிறார் ஹிந்துபுரம் எம்பி கோரண்ட்லா மாதவ். இந்த வீடியோ வைரலாகி ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல அது மார்பிங் செய்யப்பட்டிருக்கிறது என்று மறுத்திருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் ஒய். எஸ் .ஆர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளவர் கோரண்ட்லா மாதவ் . ஹிந்துபுரம் தொகுதி மக்களவை உறுப்பினரான கோரண்ட்லா மாதவ், பெண் ஒருவருடன் வீடியோ காலில் பேசும்போது … Read more

ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு வீடு, வாகன கடன் வட்டி உயரும்: மாத தவணை கட்டணமும் அதிகரிக்கிறது

மும்பை: பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்தியுள்ளது. இதனால், வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான மாத தவணையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம் நடத்துகிறது. இதில், கடன் வட்டி விகிதம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த மே மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான … Read more

நாட்டில் 5ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்?.. வைகோ கேள்விக்கு, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்

டெல்லி: மாநிலங்களவையில் மதிமுக எம்.பி. வைகோ பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதாவது; நாட்டில் 5ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்? 5ஜி அலைக்கற்றையின் ஏலச் செயல்பாட்டின் போது ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் வைப்புத்தொகை வசூலிக்கப்படுமா? படாதா? வசூலிக்கப்படவில்லை எனில், காரணம் என்ன? அரசுக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு? கருவூலத்திற்கு எதிர்பார்க்கப்படும் பெரும் இழப்பைக் கருத்தில் கொண்டு, அரசு விசாரணைக்கு உத்தரவிடுமா? முழு டெண்டர் நடைமுறைகளையும் மறுபரிசீலனை செய்யுமா? என கேள்வி எழுப்பினார். வைகோ அவர்களின் மேற்கண்ட கேள்விகளுக்கு, … Read more

பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக சோனியா காந்தி, ராகுல்காந்தி போராட்டம்

டெல்லி: டெல்லியில் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து நாடு முழுவதும் காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு ஆகஸ்ட் 5ம் தேதி … Read more

வரும் 29ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா: பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்க திட்டம்

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முன்னோட்டமாக  5 மாநில தேர்தல் நடைபெற்றது.  பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 18 மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டு மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை நடத்த … Read more