மதம் சார்ந்த சர்ச்சைப் பேச்சு: தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைது

ஹைதராபாத்: குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தெலங்கானா கோஷமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கைது செய்யப்பட்டார். இவர் அண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த முனாவர் ஃபரூக்கி ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை விமர்சித்துப் பேசியிருந்தார். இதனை அவர் ஒரு வீடியோவாக வெளியிட்டார். அந்த வீடியோ வெளியாகி வைரலாக அதற்கு அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ஹைதராபாத் நகரம் முழுவதும் போராட்டங்கள் பரவியது. இதனையடுத்து தபீர்புரா காவல்நிலையம் … Read more

'3 நாட்களில் மணீஷ் சிசோடியா கைது' – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அடுத்த மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசிலும், கட்சியிலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக, நம்பர் 2 இடத்தில் இருப்பவர், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா. கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி மதுபானக் கொள்கை விதிமீறல் தொடர்பாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா … Read more

பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய்குமார் சின்ஹா..!!

பாட்னா: பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் சுய மரியாதையை பாதிக்கும் என்பதால் ராஜினாமா செய்ததாக விஜய்குமார் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

இலவசங்கள் அறிவிக்க தடைகோரிய வழக்கில் திமுகவை தலைமை நீதிபதி சாடியது ஏன்? – முழு விபரம்

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கக்கோரி, பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாயா தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நடைபெற்றது. திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சனிடம் தலைமை நீதிபதி காட்டமான கேள்விகளை முன்வைத்தார். – இன்று நடந்த வாதத்தின் முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  அப்போது பேசிய தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் பிரச்னை இருக்கிறது, இதை யாரும் மறுக்கமுடியாது. இதுகுறித்து நிச்சயமாக விவாதம் என்பது … Read more

“புத்தர் தான் முதல் புரட்சியாளர், முதல் பகுத்தறிவாளர்” – ஜேஎன்யூ துணை வேந்தர் உரை

புதுடெல்லி: “எந்தக் கடவுளுமே பிராமணர் அல்ல; எல்லாப் பெண்களுமே சூத்திரர்கள் தான். புத்த மதமே சிறந்த மதம். புத்தர்தான் முதல் புரட்சியாளர், முதல் பகுத்தறிவுவாதி” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் பேசியுள்ளார். மத்திய சமூகநலத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடந்த பி.ஆர்.அம்பேத்கர் தொடர் கருத்தரங்கத்தில் பேசியபோது துலிபுடி பண்டிட் இதனைக் கூறியுள்ளார். அவர் பேசிய தலைப்பு: பாலின சமத்துவ நீதி மீது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பார்வை: பொது சிவில் சட்டத்தை … Read more

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ஏற்காவிட்டால்…. – அஷோக் கெய்லாட் சொல்வது என்ன..?

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்காவிட்டால் தொண்டர்கள் வருத்தம் அடைவார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெய்லாட் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட ஆர்வம் காட்டாத நிலையில், அஷோக் கெய்லாட் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து தனது தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். … Read more

சட்டவிரோதமாக கட்டப்பட்ட 100 மீட்டர் உயரம் கொண்ட இரட்டைக் கோபுரங்கள் வரும் 28ஆம் தேதி இடிப்பு.!

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 100 மீட்டர் உயரம் கொண்ட இரட்டைக் கோபுரங்கள் வரும் 28ஆம் தேதி தகர்க்கப்பட உள்ள நிலையில், அந்த கட்டடங்களில் 3,700 கிலோ வெடிபொருட்களை நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளன. 40 தளங்களை கொண்ட இரட்டை கோபுர கட்டிடங்கள் 15 விநாடிகளுக்குள் இடிந்து விழும் என்றும் கட்டிடங்களில் இருந்து கிடைக்கும் 4,000 டன் இரும்புத் தகடுகள் உள்பட 55 ஆயிரம் டன் கழிவுகள் ஆயிரத்து 300 லாரிகள் மூலம் அகற்றப்படும் என்றும் தொழில்நுட்ப … Read more

உணவு எண்ணையை சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது: உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார்

டெல்லி: உணவு எண்ணையை சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அதிகளவில் நிறமூட்டப்பட்ட உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டாம் எனவும் உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருக்கிறார். சரியான முறையில் தயாரிக்கப்பட்டால் ஷவர்மா நல்ல உணவுதான் எனவும் தெரிவித்துள்ளார்.

“திமுக மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம்” – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: "திமுக கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். மேலும், பல விஷயங்கள் குறித்து கூற வேண்டியுள்ளது, பேசாமல் தவிர்ப்பதால் அவை குறித்து எங்களுக்கு தெரியாது என நினைக்க வேண்டாம்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபத்யா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வுமுன் இன்று மீண்டும் விசாரணைக்கு … Read more

இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ. தகவல்

புவனேஷ்வர்: இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது. ஒடிசா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ.வின் ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும்.