மதுராவில் இன்று கோகுலாஷ்டமி கோலாகல விழா – கிருஷ்ணர் உடைகள் ரூ.500 கோடிக்கு விற்பனை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக மதுரா திகழ்கிறது. இந்த நகரில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்ளது. இந்த ஆண்டு கரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று, கிருஷ்ணரின் சிலைகளுக்கு வண்ணமயமான புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் மதுராவில் உள்ள தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்பனையாகி வருகின்றன. இந்த உடைகளில் அதன் விலைக்கு ஏற்ற … Read more

நித்யானந்தாவை உடனடியாக கைது செய்யலாம்: ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு

பெங்களூரு: நித்யானந்தவிற்கு கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் இருந்த பெண் சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்தியானந்தா சாமியார் கோர்ட்டில் ஆஜராக நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் இதுவரை ஆஜராகவில்லை. … Read more

திருப்பதியில் அங்கபிரதட்சண இலவச டிக்கெட்; 22-ல் கிடைக்கும்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்தில் அங்க பிரதட்சணம் செய்ய ஆன்லைனில் இலவசமாக வழங்கும் டிக்கெட்  22ம் தேதி காலை 9 மணிக்கு  வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், வருடாந்திர  பிரமோற்சவம் நடைபெறும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அங்க பிரதட்சணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நாட்களுக்கு இலவசமாக பக்தர்கள் ஆன்லைனில் https://tirupatibalaji.ap.gov.in இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாவில் நீச்சல் உடையில் தோன்றிய பேராசிரியை – ரூ.99 கோடி நஷ்டஈடு கோரும் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக ரூ.99 கோடி கொடுக்க வேண்டும் என்று நீச்சல் உடையுடன் தோன்றிய பேராசிரியைக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியாருக்கு சொந்தமான செயிண்ட் சேவியர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை ஒருவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீச்சல் உடையுடன் புகைப்படம் பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததையடுத்து, பேராசிரியையின் செயலைக் கண்டித்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நிர்வாகம் முடிவெடுத்தது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு … Read more

பாஜக.வில் பேசுவதற்கு வாய்ப்பு தருவதில்லை – நடிகை விஜயசாந்தி குற்றச்சாட்டு

ஹைதராபாத்: பாஜகவில் தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி புகார் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த நடிகை விஜயசாந்தி, பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அக்கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியுடன் இணைத்தார். பிறகு அக்கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2020-ல் மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய அவர் அக்கட்சியில் தேசிய … Read more

கோவிட்டுடன் பரவும் குளிர் ஜூரம்.. மருத்துவமனையில் பெரும்பாலானோர் அனுமதி.!

டெல்லியில் குளிர் ஜூரம் போன்ற சீசன் நோய்கள் வேகமாகப் பரவி வரும் சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெரும்பாலோருக்கு கோவிட் பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 80 சதவீத வீடுகளில் கோவிட் அல்லது ஃபுளூ காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களான காசியாபாத் குருகிராம், நொய்டா, பரீதாபாத் உள்ளிட்ட இடங்களில் சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த இரண்டு மூன்று வாரங்களாக டெல்லியில் கோவிட் … Read more

13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள தடை: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள ஒன்றிய அரசு நேற்று இரவு முதல் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக்கூறி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து செல்போன்களுக்கும் இனி ஒரே சார்ஜர் – ஆராய நிபுணர் குழு அமைப்பு

அனைத்து விதமான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜரை பயன்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆண்ட்ராய்டு போன், ஐபோன், டேப்லேட், லேப்டாப் போன்ற ஒவ்வொரு மின்னணு சாதனத்துக்கும் ஒவ்வொரு சார்ஜரை பயன்படுத்த வேண்டிய சூழல் தற்போது உள்ளது. இதனால் நுகர்வோர்களுக்கு கூடுதல் செலவாவதுடன், மின்னணு கழிவுகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், அனைத்து வகை மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகை சார்ஜரை (டைப் சி) கொண்டுவர மத்திய … Read more

நேதாஜி அஸ்திக்கு மரபணு சோதனை; ஒன்றிய அரசிடம் மகள் முறையீடு

கொல்கத்தா: நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் மரணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என்று நம்பப்பட்டாலும், அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில், அவரது ஒரே மகளான அனிதா போஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘நேதாஜியின் மரணம் குறித்த மர்மங்களுக்கு தீர்வு காண்பதுதான், அந்த  மாபெரும் புரட்சியாளனுக்கு  நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். … Read more

வேட்டையில் சூரப்புலி மோடிக்கு பாதுகாப்பு தரும் கர்நாடகா நாய்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையில் கர்நாடகாவை சேர்ந்த 2 முதோல் இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம், திம்மாபுராவில் நாய்கள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 2 மருத்துவர்கள், வீரர்கள் இந்த மையத்துக்கு சமீபத்தில் வந்து பார்வையிட்டனர். பின்னர், கடந்த ஏப்ரல் 25ம் தேதி இங்கிருந்து 2 முதோல் இன நாய்க்குட்டிகளை எடுத்து சென்றனர். மோடியின் பாதுகாப்பு … Read more