டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

'இப்படியொரு கொடுமையா?' – மாற்றுத்திறனாளி குழந்தையை 4வது தளத்திலிருந்து வீசி கொன்ற பெண்

அம்மா என்றாலே அன்பு பாசம் என்று கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால் அவற்றை பொய்யாக்கும் வகையில் அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெறுவதையும் நாம் கேள்விப்படுகிறோம். அதுபோல் பெற்ற குழந்தையையே தாய் ஒருவர் இரக்கமில்லாமல் மாடியிலிருந்து தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள் பார்ப்போரை பதைக்கவைக்கிறது. வடக்கு பெங்களூருவின் எஸ்.ஆர் நகரிலுள்ள ஒரு அபார்ட்மெண்ட்டின் 4வது தளத்திலிருந்து பெண் ஒருவர் தனது 4 வயது மகளை தூக்கி கீழே போடுகிறார். பின்னர் பால்கனி … Read more

சிறப்பு ரயில் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக: மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்

புதுடெல்லி: “சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். நூறு சதவீத ரயில் சேவையை உடனடியாகக் கொண்டுவர வேண்டும்” என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பின் கீழ் திமுக உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு பேசியது: “இந்திய அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது ரயில்வே துறை. அவர்கள் தங்களின் பயணத்திற்காக பெரும்பாலும் சார்ந்திருப்பது ரயில்களைத்தான். கரோனா காலத்தில் வழக்கமான பல ரயில்களை ரத்து செய்த … Read more

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: மேல்முறையீட்டு மனுவை தினமும் விசாரிக்க சிபிஐ கோரிக்கை!

‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தினமும் விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில், … Read more

குற்றவாளிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 8ம் தேதி தண்டனை விபரம்; நிலக்கரி ஊழலால் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு அறிக்கை

புதுடெல்லி: நிலக்கரி ஊழலால் அரசு கருவூலத்திற்கு ரூ. 1.86 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் பரபரப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் லோகாரா கிழக்கு நிலக்கரி சுரங்கத்தை கிரேஸ்  இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக  டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நிலக்கரி  சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார்  எழுந்தது. இதுதொடர்பாக … Read more

இறந்த தாயை கட்டி அணைத்து உறங்கிய 3 வயது மாற்றுத்திறனாளி சிறுவன்.. கண்கலங்க வைத்த காட்சி!

3 வயது சிறுவன் இறந்த தாயின் உடலை கட்டியணைத்து உறங்கிய புகைப்படம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. பீகார் மாநிலம் பகல்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் பிளாட்பாரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த இறந்த தாயின் அருகே 3 வயது மாற்றுத் திறனாளி சிறுவன் அவரை கட்டி அணைத்து தூங்கிக் கொண்டிருந்தான். இதையடுத்து அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு … Read more

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு: அணையில் இருந்து இடுக்கி அணைக்கு உபரி நீர் திறப்பு

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.15 அடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் உள்ள … Read more

நாடு தழுவிய போராட்டம்: ராகுல், பிரியங்கா காந்தி கைது

தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உட்பட பல காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் விலைவாசி உயர்வை தடுக்கவும் உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்துசெய்யவும் கோரிக்கை வைத்து இன்று நாடு முழுவதும் காங்கிர1 கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. அப்போராட்டத்தில் `இந்தியா தற்போது ஜனநாயகத்தின் இறப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறது. சர்வாதிகாரத்திற்கு எதிராக நிற்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுகின்றனர்’ என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். … Read more

தண்ணீர் திறக்க கோரிக்கை: மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும் அந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்டவை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்படி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு, கேரள … Read more

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50 சதவிதமாக அதிகரிப்பு

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழுவின் முடிவுப்படி, வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமான ‘ரெப்போ ரேட்’  0.5 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும், வங்கி கடனுக்கான வட்டி சற்று அதிகரிக்கும். அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த … Read more