இறக்குமதி செய்த நிலை மாறியது பொம்மைகள் ஏற்றுமதி 61 சதவீதம் அதிகரிப்பு: மோடியின் திட்டத்தால் பலன்

புதுடெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் ஏற்றுமதி கடந்த 3 ஆண்டுகளில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது, இறக்குமதி 70 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. குழந்தைகளின் விளையாட்டு சம்பந்தப்பட்ட இந்த துறையில், பல லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடப்பதை கண்ட பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் பொம்மை தயாரிப்பை ஊக்கப்படுத்தி வருகிறார். இதற்கு, … Read more

வெளிநாடுகளில் கிராக்கி அதிகரிப்பு – நெல், கோதுமையை அதிகமாக பயிரிட மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: நடப்பு சீசனில் நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது. இதை அதிகரிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இந்தியாவின் அரிசி, கோதுமைக்கு கடுமையான தேவை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பரப்பளவை அதிகரிக்குமாறு மத்திய உணவுத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மாநில உணவு அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். நெல், கோதுமை அதிகம் பயிரிடும் மாநிலங்கள் மாற்று பயிர்களான எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகளை பயிரிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேசிய அளவில் நெல் பயிரிடும் … Read more

சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ 10 குறைக்க வேண்டும் … மத்திய அரசு உத்தரவு

சமையல் எண்ணெயின் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான  விற்பனை விலையை நிர்ணயிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவதாகும். சர்வதேச விலை உயர்வை அடுத்து உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயரும் நிலை ஏற்பட்டது. ஆயினும் உலகளவில் விலை வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரிகளைஅழைத்து ஆலோசனை நடத்திய உணவுத்துறை … Read more

தடகள வீராங்கனை பிடி.உஷா உள்பட 4 பேர் தேர்வு இளையராஜாவுக்கு எம்.பி. பதவி: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி. உஷா உள்ளிட்ட 4 பேருக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இது தவிர, சிம்பொனி இசையமைத்த ஒரே இந்திய இசைக்கலைஞராவார். இந்நிலையில், இளையராஜா, கேரளாவை சேர்ந்த தடகள வீராங்கனை பிடி. உஷாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி வழங்கி இருப்பதாக பிரதமர் மோடி தனது … Read more

போர் விமானத்தில் ஒரே நேரத்தில் பறந்து தந்தை, மகள் சாதனை

பீதர்: தந்தையும், மகளும் சேர்ந்து போர் விமானத்தில் ஒரே நேரத்தில் பறந்து புதிய சாதனை படைத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் பணியாற்றுபவர் ஏர் கமோடர் சஞ்சய் சர்மா. இவரது மகள் அனன்யா சர்மாவும் விமானப் படையில் உள்ளார். இவர் ‘பிளையிங்’ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பீதரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து ஹாக்-132 ரக போர் விமானங்களில் இருவரும் ஒரே நேரத்தில் பறந்தனர். இதுவரை இந்தியாவில் எந்தவொரு தந்தையும், மகளும் … Read more

நுபுர் சர்மாவை கொன்றால் வீடு பரிசு அஜ்மீர் தர்கா மதகுரு கைது

ஜெய்ப்பூர்: பாஜ முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை கூறியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அஜ்மீர் தர்காவில் இருக்கும் மதகுரு சல்மான் சிஸ்டி, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நுபுர் சர்மாவின் தலையை யார் வெட்டி தன்னிடம் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு தனது வீட்டை பரிசாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நபிகள் நாயகத்தை அவமதித்தற்காக அவரை சுட்டுக் கொன்றிருப்பேன் … Read more

ஒரேநாளில் இரண்டு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா – கூடுதல் பொறுப்பாக ஸ்மிருதி இரானி, சிந்தியாவிடம் துறைகள் ஒப்படைப்பு

புதுடெல்லி: மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மத்திய எஃகுத் துறை அமைச்சர் ஆர்.சி.பி. சிங்கும், தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் (64) மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். முன்னதாக … Read more

‘காளி’ போஸ்டர் குறித்து சர்ச்சை கருத்து பெண் எம்பி மொய்த்ரா மீது மபி. போலீஸ் வழக்குப் பதிவு: எதிர்ப்பு வலுத்ததால் திரிணாமுல் விளக்கம்

கொல்கத்தா: ‘காளி’ போஸ்டர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை சமீபத்தில் ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் ‘காளி’ வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டருக்கு உலகளவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் … Read more

வானிலை ரேடார் பழுது கொல்கத்தா திரும்பிய தனியார் விமானம்: விளக்கம் கேட்டு டிஜிசிஏ நோட்டீஸ்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இருந்து சீனாவின் சாங்கிங் நோக்கி நேற்று முன்தினம் தனியார் சரக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமானத்தில் வானிலையை காட்டும் ரேடார் கருவி செயல்படவில்லை என்பதை விமானி கண்டறிந்தார். எனவே, பாதுகாப்பு கருதி விமானத்தை தரையிறக்க அவர் முடிவு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா விமான நிலையத்திலேயே விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் கடந்த சில நாட்களாக … Read more

கனமழையால் பொறியியல் கல்லூரியின் சுற்று சுவர் இடிந்து விழுந்து சேதம்..!

கர்நாடகாவில் கல்லூரியின் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் கார்கள் சேதமடைந்தன. தொடர் கனமழை காரணமாக மங்களூரு அருகேயுள்ள மூட்பிட்ரி என்ற இடத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் சுற்று சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது Source link