“எனது முதல் ஆர்டரே, பள்ளி விடுமுறை அறிவிப்பு” – கவனம் ஈர்த்த கேரள கலெக்டரின் பதிவு

ஆலப்புழா: கேரளத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து, மாணவர்களுக்கு ஆலப்புழா எழுதியுள்ள முன்னெச்சரிக்கை பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் நிலை அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதுவரை கேரளாவில் கனமழைக்கு 18 பேர் பலியாகினர். கனமழையினால் எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு மாவட்டங்களில் ஆலப்புழாவும் ஒன்று. கனமழை பெய்து வருவதால், கேரள பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை … Read more

நூல், பருத்தி விலை உயர்வால் நசிந்த ஜவுளித் தொழிலை மேம்படுத்துவது எப்போது? ஒன்றிய அரசுக்கு எம்பி. தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: நூல், பருத்தி விலை உயர்வால் நசிந்து போன ஜவுளித் தொழிலை மேம்படுத்துவது எப்போது? என ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து, முன்பு எப்போதும் இல்லாத அளவில் பருத்தி, நூல் விலை உயர்ந்துள்ளதால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 2021 தேர்தலின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கு மண்டல மாவட்டங்களுக்கு பிரசாரத்திற்கு சென்ற போது, பருத்தி, நூல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், … Read more

சோகத்தில் முடிந்த ஐ.டி. இளைஞரின் லட்சியப் பயணம் – பாதியிலேயே கலைந்த குமரி டூ காஷ்மீர் கனவு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டிலேயே பயணம் செய்யும் லட்சியத்துடன் சென்ற இளைஞர், தனது கனவை அடைய இன்னும் சில கிலோ மீட்டர் தூரங்களே இருந்தநிலையில், ட்ரக் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாறமூடு அருகேயுள்ள புல்லம்பாற அஞ்சாம்கல் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான அனாஸ் ஹஜாஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்ற அனாஸ் ஹஜாஸ், அதன்பிறகு டெக்னோ பார்க் என்ற ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். பயணம் … Read more

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் திருட்டில் ஈடுபட்ட காவலர் கைது

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளர் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய காவலர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பாளர் சுபம் கோஷ் வீட்டில் வேலை செய்யும் மகேஸ்வரி என்பவர், கடந்த 26ஆம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில் கைப்பையில் வைத்திருந்த பணம் மாயமானதாக புகாரளித்தார். சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் விசாரித்த போலீசார், சீருடையுடன் பணத்தை திருடிய காளிதாஸ் என்ற காவலரை கைது செய்தனர். Source … Read more

சபரிமலை கோயிலில் நிறை புத்தரிசி பூஜை: பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று நிறை புத்தரிசி பூஜை நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் விவசாயம் செழித்து, வறுமை நீங்குவதற்காக இது நடத்தப்படுகிறது. புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டு கோயிலில் பூஜை நடத்தப்படும். பின்னர், அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இவ்வருட நிறை புத்தரிசி பூஜை நேற்று நடந்தது. இதற்காக, அதிகாலை 5 மணிக்கு கோயில் … Read more

தண்ணீர் நிரம்பி வழியும் பாலத்தின் நடுவே சிக்கிய தனியார் பஸ்.. பொதுமக்கள் செய்த சாகசம்!

கர்நாடகாவில் தண்ணீர் நிரம்பி வழியும் பாலத்தின் நடுவே தனியார் பேருந்து சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பேருந்திலிருந்த 50 பயணிகள் உயிர் தப்பினர்.  கர்நாடக மாநிலம் தும்கூரில் நிரம்பி வழியும் பாலத்தின் நடுவே 50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சிக்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். தும்கூர் மாவட்டம் ஹிண்டுபுர பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் பாவகடா பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து தொம்மதாமரி கிராமம் அருகே உள்ள ஸ்ரீனிவாஷ்புரா ஏரி நிரம்பி கால்வாயில் வெள்ளப்பெருக்கு … Read more

யங் இந்தியா அலுவலகத்தில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத் துறை விசாரணை: 8 மணி நேரம் நடந்தது

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் ஏற்கனவே பலமுறை விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, நேற்று முன்தினம் ‘யங் இந்தியா’ நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி சீல் வைத்தது. இந்நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் அமலாக்கத் துறை நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்த அவர், அமலாக்கத் துறை நடவடிக்கை கண்டித்து பேசியபோது, ‘சட்டத்தை புறக்கணிக்க மாட்டேன், சட்டத்தை … Read more

முடிந்தது ஏலம்! 5ஜி சேவை குறித்து தொலைத்தொடர்பு அமைச்சர் கொடுத்த மாஸ் தகவல்

”இந்தியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை எப்போது அறிமுகமாகும் என அனைவரும் காத்திருந்த நிலையில், 5ஜி அலைக்கற்றைக்கான மெகா ஏலம் நிறைவடைந்துள்ளது. இந்த ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி … Read more

தற்கொலை செய்துகொண்ட வியாபாரி, முதலமைச்சருக்கு எழுதிய கடைசி கடிதம் ..!

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த வியாபாரி வர்மா. இவர் கடந்த 2010ம் ஆண்டு தொழில்ரீதியாக பைனான்சியர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். பின்னர் அதை வட்டியுடன் முழுவதும் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. எனினும் கடன் தொகை நிலுவை உள்ளதாக பைனான்சியர் வர்மாவிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததுடன், அடிக்கடி வர்மாவின் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த வர்மா நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த … Read more

சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் புதியதலைமை  நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட உள்ளார். நாட்டின் அடுத்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தேர்வு செய்வதற்கான அதிகாரபூர்வ பணிகள் தொடங்கியுள்ளன. பொதுவாக, தலைமை நீதிபதியின் பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றிய சட்ட அமைச்சகம் முடிவு … Read more