மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம் – அதிர்ச்சியூட்டிய முதல்வர் சந்திரசேகர ராவ்!

“தெலங்கானாவில் நிகழ்ந்த மேகவெடிப்புக்கு வெளிநாட்டு சதியே காரணம்” என்று அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரக்காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை – வெள்ளத்துக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் மழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே, இந்த கனமழைக்கு … Read more

அலங்காரமும் இல்லை; அரசியலும் இல்லை.. ஆளுநர்கள் வழிகாட்டிகளாக செயல்பட வேண்டும்: வெங்கய்ய நாயுடு

புதுடெல்லி: ஆளுநர் பதவி என்பது அலங்கார பதவியும் இல்லை, அரசியல் செய்யும் பதவியும் அல்ல மாறாக ஆளுநர்கள் மாநிலங்களுக்கு சிறந்த வழிகாடிகளாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். முன்னதாக நேற்று குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில் மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு மதிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, ஆளுநர் பதவி என்பது அலங்கார பதவியும் அல்ல, அரசியல் செய்யும் பதவியும் அல்ல. … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறலாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

போட்டியே இல்லாமல் தேர்வான குடியரசுத் தலைவர் பெயர் தெரியுமா உங்களுக்கு? குட்டி ரீவைண்ட்!

இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்கள், அவற்றில் எத்தனை தேர்தல்களில் போட்டி நிலவியது, வெற்றி பெற்றவர்கள் யார் யார் என்பது பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட், இங்கே! இந்திய குடியரசு தலைவரை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. அதேபோல் நாடாளுமன்ற நியமன எம்.பி.க்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க … Read more

லடாக் எல்லை விவகாரம்: இந்தியா-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சு

ஸ்ரீநகர்: கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றதால் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.   இந்த மோதலை அடுத்து லடாக் எல்லையில் இரு நாட்டு படைகள் குவிக்கப்பட்டன. லடாக் எல்லையில் பதற்றத்தை குறைக்க  இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்பு கொண்டன. அதன் பலனாக இதுவரை 15 … Read more

விசாகப்பட்டினத்தில் ஆடை அணிகலன் கடையில் பயங்கர தீ விபத்து.. ரூ.2 கோடி மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசம்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் துவடா பகுதியில் உள்ள ஒரு ஆடை அணிகலன் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாக கடைமுழுவதும் பரவிவிட்டது. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் பல மணி நேரம் போராடின. கடும் முயற்சிக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. எனினும் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். Source link

தெலங்கானாவில் டிஆர்எஸ் வாக்கு சரியும் 2வது இடத்துக்கு முன்னேறும் பாஜ

ஐதராபாத்: தெலங்கானாவில் கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 46.9 சதவீத வாக்குகளுடன் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) 88 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 28.4% வாக்குகளுடன் காங்கிரஸ் 2-வது இடத்தை பிடித்தது. பாஜ வெறும் 7.1 % வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்புகளில் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி, பாஜ 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் டிஆர்எஸ் 38.88% … Read more

நாடாளுமன்ற கூட்ட தொடர் இன்று ஆரம்பம்: 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் 

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கு கிறது. இதில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, அக்னிபாதை திட்டம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் கன்டோன்மென்ட் மசோதா, மாநிலங்களின் கூட்டுறவு சொசைட்டிகள் மசோதா, காபி மேம்பாடு மசோதா, தொழில்நிறுவன … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதியன்று இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராகப் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. இந்திய … Read more

விஜய் சேதுபதி படம் ஓடிடியில் ரிலீஸ்

திருவனந்தபுரம்: தமிழ், ெதலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கும் விஜய் சேதுபதி, தற்போது மலையாளத்தில் இந்து இயக்கத்தில் நடித்த படம், ‘19 (1) (a)’. முக்கிய வேடத்தில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன் நடித்துள்ளனர். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்து இருக்கிறது. கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தேதி முடிவாகவில்லை. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்திருந்த ‘க/பெ ரணசிங்கம்’ … Read more