விண்ணில் பாய்கிறது ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோள் .!

புவியைக் கண்காணிக்கும் ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி-D1 என்ற சிறியரக ராக்கெட் வரும் 7ஆம் தேதி காலை 9.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் சுமந்துச் செல்லும் 142 கிலோ எடையுள்ள செயற்கைகோள், கடலோர நிலப் பயன்பாடு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும். இந்த செயற்கைகோளில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டர் அளவுக்கு துல்லியமாகப் படம் … Read more

5ஜி ஏலம் முடிந்தது ரூ.1.5 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை விற்பனை: அக்டோபரில் சேவை தொடங்கும்

புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றை மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு அலைவரிசை உரிமம் எடுத்துள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ம் தேதி துவங்கியது. இதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக ஒன்றிய … Read more

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி – மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

பாட்னா: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்நிறுத்தப்படுவார். அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் … Read more

மோடிக்கு 6 வயது சிறுமி கடிதம் பென்சில், ரப்பர் விலை கூடிடுச்சு

புதுடெல்லி: விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் துயரங்கள் பற்றி ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கன்னூஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ராமூ கிராமத்தை சேர்ந்தவர் விஷால் துபே. இவரது 6 வயது மகள் கீர்த்தி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் பென்சிலை தொலைத்து விட்டு, வேறு பென்சில் கேட்டதற்காக கீர்த்தியை கண்டித்து அவரது தாய் … Read more

தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், திரைப்பட தயாரிப்பு செலவுகள் அதிகரித்திருப்பது, ஓ டி டி தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக, தெலுங்கு ஃபிலிம் சேம்பர் ஆப் காமர்ஸின் தலைவர் பசீர் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் உள்ள 24 சங்கங்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் … Read more

சல்மான் கானுக்கு துப்பாக்கி லைசென்ஸ் கிடைத்தது

மும்பை: கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைப்பதற்கான லைசென்ஸ் பெற்றார். கடந்த மே 29ம் தேதி பஞ்சாபி பாடகர் சித்து முஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் என்பவன், சல்மான் கானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதில், உனக்கும் இந்த கதிதான் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்ற மிரட்டல் சல்மானின் அப்பா சலீம் கானுக்கும் விடுக்கப்பட்டது. இதையடுத்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கி லைசென்ஸ் … Read more

தேசிய விருது கமிட்டியில் சினிமா தெரியாதவர்கள்: அடூர் கோபாலகிருஷ்ணன் சாடல்

திருவனந்தபுரம்: சினிமா பார்க்காத, சினிமா  குறித்து எதுவுமே தெரியாதவர்கள் தான் தேசிய விருதுக் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்று மலையாள சினிமா இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அடூர் கோபாலகிருஷ்ணன் பேசியது: தேசிய சினிமா விருது என்பது இப்போது ஒரு கொடுமையான பொழுதுபோக்காக மாறிவிட்டது. யார் என்றே தெரியாத விருதுக் கமிட்டினர்தான் இந்த கொடுமைகளில் ஈடுபடுகின்றனர். யாரெல்லாமோ விருதுக் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். யாருக்கெல்லாமோ அவர் விருதுகளை வாரி வழங்குகிறார். … Read more

‘இந்தி தெரியாம பாலிவுட்டுக்கு வர்றாங்க’ தமிழ் இயக்குனர்களை விமர்சித்த அனுராக் கஷ்யப்

மும்பை: பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அனுராக் கஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர். சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், தென்னிந்திய படங்கள்தான் வட இந்தியாவிலும் சாதித்து வருகின்றன. அந்த படங்களுடன் ஒப்பிடும்போது, பாலிவுட் படங்கள் சமீபகாலமாக சாதிக்கவில்லை. தோல்வியை தழுவி வருகின்றன என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் தந்த அனுராக் கஷ்யப், ‘இங்கு இந்தி தெரியாதவர்கள் எல்லாம் இந்தி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் … Read more

அமெரிக்கா வரை சென்ற குஜராத் தேர்வு முறைகேடு: ஆங்கிலம் தெரியாமல் மாட்டிய மாணவர்கள்

அகமதாபாத்: அமெரிக்காவில் ஆங்கிலேமே தெரியாமல் சிக்கிய குஜராத் மாணவர்கள் மூலம், ஆங்கில திறனறியும் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடுகள் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தபோது, அவர்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல் தவித்தனர். இதனால் இந்தி மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு உதவி செய்யப்பட்டதும், விசாரணையில் அவர்கள் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் 6.5 முதல் 7 வரை மதிப்பெண் … Read more

விமானங்களின் எரிபொருள் விலையை 12 விழுக்காடு குறைத்த எண்ணெய் நிறுவனங்கள்..

டெல்லியில் விமானங்களுக்கான எரிபொருளின் விலை 12 விழுக்காடு குறைந்து ஆயிரம் லிட்டர் ஒரு இலட்சத்து 22ஆயிரம் ரூபாயாக உள்ளது. விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் மொத்தச் செலவில் 40 விழுக்காடு எரிபொருளுக்கே செலவாவதாகக் கூறப்படுகிறது. மே மாதத்தில் வரலாறு காணாத வகையில் ஆயிரம் லிட்டர் எரிபொருள் விலை ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 233 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கெனவே இருமுறை விலையைக் குறைத்த நிலையில், இன்று மேலும் 12 விழுக்காடு குறைத்துள்ளன.  Source … Read more