இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது – பிரதமர் மோடி எச்சரிக்கை

லக்னோ: இலவச திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தின் புந்தேல் கண்ட் பகுதியில் ரூ.14,850 கோடியில் 296 கி.மீ. தொலைவுக்கு 4 வழி விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. சித்திரகூட் மாவட்டம் பரத்கூப்பில் தொடங்கி எட்டாவா மாவட்டம் குட்ரெயில் வரை 7 மாவட்டங்களை இந்த சாலை கடந்து செல்கிறது. புந்தேல்கண்ட் விரைவு சாலை என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். … Read more

சிறையில் அவதி ‘ஓவர் குண்டு’ சித்துவுக்கு மூட்டு வலி

பாட்டியாலா: பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, 34 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் சமீபத்தில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கைது செயயப்பட்டு பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் பல்வேறு  உடல் நல பாதிப்பால் அவமதிப்பட்டு வருகிறார். இருப்பினும், அவருக்கு மருத்துவம் சார்ந்த சிறப்பு உணவு வகைகளை தவிர, வேறு எந்த சிறப்பு வசதிகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சித்துவுக்கு முழங்கால் மூட்டு வலி அதிகரித்துள்ளது. … Read more

குஜராத் கலவர வழக்கு | மோடியை சிக்க வைக்கும் சதியின் பின்னணியில் சோனியா காந்தி – பாஜக பகிரங்க குற்றச்சாட்டு

புதுடெல்லி: குஜராத் கலவர வழக்கில், பிரதமர் மோடி குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இதையடுத்து குஜராத் கலவர வழக்கில் மனுதாரராக இருந்த தீஸ்தா சீதல்வாட்டையும், பொய் ஆதாரங்களை திரட்டிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீ குமார் மற்றும் சஞ்சீவ் பட் ஆகியோரை குஜராத் போலீசார் கைது செய்தனர். தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில் , ‘‘கடந்த … Read more

வரலாற்றில் முதல்முறை கோதாவரியில் 71 அடி உயரத்துக்கு வெள்ளம்: ஆந்திரா உட்பட 3 மாநிலங்கள் பாதிப்பு

புவனேஸ்வர்: ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் 300 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தோவலேஸ்வரம் அணையில் இருந்து 19.05 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. இதன் காரணமாக, கோதாவரி ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 3 மாநிலத்திலும் … Read more

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்பி டி.ஆர். பாலு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் … Read more

கும்பகர்ணன் தூக்கம் போதும் பிளீஸ் கெட்அப்: ராகுல் காந்தி அறிவுரை

புதுடெல்லி: ‘வார்த்தை ஜால அரசியலை நிறுத்தி விட்டு பொருளாதார சீர்திருத்தங்களை உடனே செய்யுங்கள்,’ என ஒன்றிய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: மோடி பிரதமராவதற்கு முன் இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து பல்வேறு பிரசாரங்களை செய்துள்ளார். ஆனால், அவர் பதவிக்கு வந்த பின் போலியான பாசாங்குதனத்தால் 75 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டை பின்னோக்கி தள்ளிவிட்டார். வரலாற்றில் இல்லாத அளவில், டாலருக்கு … Read more

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென சென்னைக்கு மாற்றம்: அதிருப்தி கோஷ்டியினர் வரவில்லை

பனாஜி: ஜனாதிபதி தேர்தலையொட்டி, கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் திடீரென சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்க உள்ளது. இந்நிலையில், கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, ரகசிய இடத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து கோவா மாநில காங்கிரஸ் மூத்த … Read more

சிரஞ்சீவி வீட்டில் ஆமிர் கான் படம் பிரீவியூ

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தயாரித்து நடித்த இந்திப் படத்தின் பிரீவியூ நடந்தது. தற்போது அந்த போட்டோக்கள் வைரலாகியுள்ளது. இந்தியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம், ‘லால் சிங் சத்தா’. இது ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற நாவலைத்தழுவி, கடந்த 1994ல் அதே பெயரில் அமெரிக்காவில் வெளியான படத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். கடந்த 2019ல் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. ஆமிர் கான், … Read more

யாரையும் நான் திருமணம் செய்யவில்லை: சுஷ்மிதா சென் ஆவேசம்

மும்பை: நடிகை சுஷ்மிதா சென்னுக்கு 46 வயது ஆகிறது. ஆனால், இன்னும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 470 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, இந்தியாவில் இருந்து தப்பியோடி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் சில போட்டோக்களுடன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், ‘சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறேன். நிலவில் இருப்பது போல் … Read more

தூத்துக்குடி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை..!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தாசன் என்பவரின் மகன் விஜய் (17). பனையேறும் தொழிலாளியான அவர், அதே ஊரைச் சேர்ந்த சுடலைமணி மகள் மேகலா (16) என்பவரை காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் சில மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு ஓடிப்போய் கோவிலில் தாலி கட்டி குடும்பம் நடத்தியுள்ளனர். இதனிடையே தனது மகளை காணவில்லை என பெண்ணின் … Read more