தேசிய கொடியை புறக்கணிக்கனுமாம்; மடாதிபதி பகீர் விளக்கம்; பா.ஜ.க ஷாக்!

புதுடெல்லி அடுத்துள்ள காஜியாபாத்திப் மகாகால் தாஸ்னா மடத்தின் தலைவராக இருப்பவர் யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி. சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி சிக்கலில் மாட்டுவது யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதியின் வழக்கம். இந்நிலையில் மடாதிபதி யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு மற்றொரு சர்ச்சையையும் கிளப்பி உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற அந்த வீடியோவில் மடாதிபதி யத்தி நரசிங்காணந்த் சரஸ்வதி‘மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்களால் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது. எனவே, வீடுதோறும் … Read more

ஜனநாயக சக்தியை உலகம் தெரிந்துகொள்ள இந்தியா உதவியிருக்கிறது: குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை

புதுடெல்லி: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அதோடு நாட்டு மக்களிடையே உரையும் ஆற்றியுள்ளார். “நம் நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் 76-வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான நேரத்தில் உங்களிடத்தில் உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா ஒரு சுதந்திர நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதியை, ‘பிரிவினைக்கால … Read more

'உலககோப்பையில் அவரால் விக்கெட்டுகள் எடுக்க முடியாது!' – ஜடேஜா குறித்து முன்னாள் வீரர்!

உலககோப்பையில் ஆடினாலும் அவரால் விக்கெட்டுகள் எடுக்க முடியாது என்று இந்திய வீரர் ஜடேஜா குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஜடேஜா நடக்கவிருக்கும் டி20 உலககோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், ”கண்ணாடி என்றும் பொய் சொல்லாது என்று கூறியுள்ள அவர், 2021 … Read more

இந்தாண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில் 2.2 கோடி வழக்குகள் தீர்வு; நேற்று மட்டும் 81 லட்சம் வழக்குகள் சமரசம்

புதுடெல்லி: நாடு முழுவதும் இந்தாண்டு நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத் மூலம் 2.2 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நேற்று மட்டும் 81 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நாட்டின் 75வது சுதந்திர தின  விழாவிற்கான ஒத்திகை தலைநகர் டெல்லியில் நடைபெற்றதால், நேற்று அங்கு தவிர  நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது.  ஏற்கனவே இந்த ஆண்டு இரண்டு லோக் அதாலத்கள் நடத்தப்பட்ட நடத்தப்பட்ட நிலையில் நேற்று மூன்று லோக் அதாலத் நடத்தப்பட்டது. … Read more

பானையில் இருந்த குடிநீரை குடித்ததால் ஆசிரியர் தாக்கியதில் தலித் மாணவன் பலி; ராஜஸ்தான் பள்ளியில் வன்கொடுமை

ஜலோர்: ராஜஸ்தானில் பள்ளியில் இருந்த குடிநீர் பானையில் இருந்த தண்ணீரை குடித்த தலித் மாணவரை ஆசிரியர் அடித்து தாக்கியதில் அந்த மாணவர் பலியானார். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது தலித் பள்ளி மாணவன், கடந்த ஜூலை 20ம் தேதி தான் படிக்கும் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் பானையில் இருந்து தண்ணீரை குடித்தார். இதைப் பார்த்த பள்ளி ஆசிரியர் சைல் சிங், மாணவனை திட்டியது மட்டுமின்றி … Read more

”மனநலம் பாதிக்கப்பட்டவனா?”.. உணவின் தரத்தை குறைகூறிய உபி காவலருக்கு கட்டாய பணி விடுப்பு.!

12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள் ஆனால் தரமற்ற உணவை வழங்குகிறார்கள் என்று உணவின் தரம் குறித்து குறைகூறிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த காவலருக்கு கட்டாய பணி விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காவலராக பணிபுரிந்து வரும் மனோஜ் குமார் என்பவர் தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து விமர்சனம் செய்து அழுதபடி பேசிய வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது. காவலர் மனோஜ் குமார் அந்த வீடியோவில், “ஒரு நாய் கூட இந்த உணவை சாப்பிட … Read more

கார் மீது மோதியதால் கோபம்; ஆட்டோ டிரைவருக்கு ‘பளார்’ .! நிதானத்தை இழந்த பெண் கைது

நொய்டா: நொய்டாவில் ஆட்டோ டிரைவரின் காலரை பிடித்து கன்னத்தில் பளார் என்று அறைந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஆட்டோ ரிக்‌ஷா ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதையடுத்து காரில் இருந்த பெண் ஒருவர், காரில் இருந்து இறங்கிவந்து ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவர் ஆட்டோ ஓட்டுரின் சர்ட் காலரை பிடித்து இழுத்து, அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்தார். நிதானத்தை இழந்து அந்த பெண் … Read more

விவாகரத்து வழக்கு: நீதிமன்ற வளாகத்திலே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கில் ஆஜராகிய மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிபுரா குடும்பநல நீதிமன்றத்தில் சிவக்குமார் – சைத்ரா தம்பதியின் விவகாரத்து வழக்கு நடைபெற்று வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி, கருத்து வேறுபாடுகள் காரணமாக விவகாரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். விவகாரத்து வழக்கின் விசாரணையின் ஒருபகுதியாக சிவக்குமார், … Read more

பீகார் முதல்வர், துணை முதல்வர் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு; காங்கிரசுக்கு 4 அமைச்சர்கள் உறுதி

பாட்னா: பீகாரில் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாகவும், காங்கிரசுக்கு நான்கு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். கடந்த புதன்கிழமை நிதிஷ் குமார் முதல்வராகவும், ஐக்கிய ஜனதா தளம் தலைவரான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த பேச்சுவார்த்தைகள் … Read more

பங்குச் சந்தையின் ‘பிக் புல்’ மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

மும்பை: இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், பங்குச் சந்தையின் ‘பிக் புல்’ என்று அழைக்கப்பட்டவருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (62), கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். சிறுநீரக கோளாறுகள் உட்பட பல உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர்,  சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டார். ஆனால் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் கேண்டி ப்ரீச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் … Read more