குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் நபராக டெல்லி துணை முதல்வர்..!- சிபிஐ பரபரப்பு தகவல்..!!

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ விசாரணை செய்துள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி திட்டம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இடம் பெற்ற பிறகுதான் சிபிஐ மணீஷ் சிசோடியாவின் வீட்டிற்கு வந்ததாக குற்றம் சாட்டினார்.சிபிஐ கடந்த ரெய்டுகளில் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இன்று எதையும் கண்டுபிடிக்க முடியாது என்று ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதி ராகவ் சத்தா கூறியிருந்தார்.. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பெயர் பட்டியலில் முதல் இடத்தில் மனிஷ் … Read more

நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளதால் மக்களை வெளியேற்ற நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 100 மீட்டர் உயரம் கொண்ட சூப்பர் டெக் இரட்டை கோபுர கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளதால், பாதுகாப்பு கருதி அருகில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட உள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவிற்கு இணங்க, வருகிற 28 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு 3500 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருள்களை பயன்படுத்தி இரு கட்டிடங்களும் தகர்க்கப்பட உள்ளன. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு வீடுகளை விட்டு வெளியேறி விட்டு … Read more

தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்து ஆலோசனை; மாநில காவல் துறைக்கு 5ஜி தொழில்நுட்பம்: டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்த மாநாட்டில் மாநில காவல்துறை 5ஜி தொழில்நுட்பத்தை மாநில காவல்துறை திறன்பட பயன்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமிஷ் வலியுறுத்தினார். டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு உத்திகள் (என்எஸ்எஸ்) தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘அனைத்து மாநிலங்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். எல்லைப் பகுதிகளில் நடைபெறும் மக்கள்தொகை … Read more

பீகார்: போலி காவல் நிலையம் நடத்தி வசூலை வாரிக் குவித்த ரவுடிக் கும்பல்? சிக்கியது எப்படி?

பீகார் மாநிலத்தில் 8 மாதங்களாக போலி காவல்நிலையம் நடத்தி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்தில் இயங்கி வந்த ரவுடிக் கும்பல் ஒன்று கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளது. இதையடுத்து ஒரு படி மேலே சென்று போலியாக ஒரு காவல் நிலையத்தையே நடத்திமக்களிடம் இருந்து பணம் பறித்து வசூல் வேட்டையை நடத்தியுள்ளது இந்த கும்பல். கடந்த ஜனவரி மாதம் பாங்கா நகரில் உள்ள … Read more

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ

டெல்லி : டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா  உட்பட 16 பேர் மீது  சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. புதிய காலால் வரிக் கொள்கையில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி துணை நிலை ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இல்லம் உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

பில்கிஸ் பானு பாலியல் வழக்கு | குற்றவாளிகளை விடுவித்தது பற்றி வெட்கப்படவில்லையா? – பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: உன்னாவ் பாலியல் வன் கொடுமை வழக்கில், பாஜக எம்எல்ஏவை காப்பாற்ற பணியாற்றினீர்கள். கதுவா, ஹாத்ரஸ் மற்றும் குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிப்பது பெண்களுக்கு எதிரான பாஜக.வின் மனநிலையை காட்டுகிறது. இது போன்ற அரசியல் செய்வதற்காக நீங்கள் வெட்கப்படவில்லையா பிரதமர் அவர்களே. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் … Read more

அவர் ஒரு அப்பாவி; நிரபராதி; ஜாக்குலினின் இமேஜை கெடுக்கின்றனர்!: அமலாக்கத்துறை மீது பகீர் குற்றச்சாட்டு

மும்பை: மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு அப்பாவி; அவரது இமேஜை தேவையில்லாமல் கெடுக்கின்றனர் என்று அமலாக்கத்துறை மீது அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். டெல்லி மருந்து கம்பெனியின் உரிமையாளர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த மருந்து கம்பெனி தொழிலதிபரும் சிறையில் இருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் மட்டுமல்லாமல் அவர் மனைவி லீனா உட்பட இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் … Read more

நமீபியா வழங்க முன்வந்த சிறுத்தைகளை வாங்க மறுத்த இந்தியா! என்ன காரணம்?

நமீபியா வழங்கத் தயாராக இருந்த சிறுத்தைகளைப் பெற இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சிறுத்தையின் ஒரு வகை இனம் முற்றிலும் அழிந்துபோய் பல பத்தாண்டுகள் ஆகி விட்ட நிலையில், அவற்றை மத்தியப பிரதேச வனவிலங்கு பூங்காவிற்கு வழங்க நமீபியா முன்வந்தது. இதற்காக நமீபியாவுடன் இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதற்கட்டமாக சிறுத்தைகளை நமீபியா இந்தியாவிற்கு அனுப்ப திட்டமிடப்பிட்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு சிறுத்தைகளை வாங்கும் … Read more

சாவர்க்கர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முன்னாள் முதல்வர் சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு

பெங்களூரு: சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சாவர்க்கர் படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கர்நாடகாவில் சுதந்திர கொண்டாட்டத்தின்போது சாவர்க்கர் படம் வைக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழும் பகுதியில் சாவர்க்கர் படம் வைக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சித்தராமையா … Read more

ஜனாதிபதியின் செயலராக ஒடிசா கேடர் அதிகாரி நியமனம்

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான  ராஜேஷ் வர்மா என்பவரை ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு நியமனம் செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு (64), கடந்த ஜூலை 25ம் தேதி நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் செயலாளராக ராஜேஷ் வர்மா என்பவரை ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு நியமனம் செய்துள்ளது. இவர் 1987ம் ஆண்டு ஒடிசா கேடர் இந்திய … Read more