தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்து ஆலோசனை; மாநில காவல் துறைக்கு 5ஜி தொழில்நுட்பம்: டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்த மாநாட்டில் மாநில காவல்துறை 5ஜி தொழில்நுட்பத்தை மாநில காவல்துறை திறன்பட பயன்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமிஷ் வலியுறுத்தினார். டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு உத்திகள் (என்எஸ்எஸ்) தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘அனைத்து மாநிலங்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். எல்லைப் பகுதிகளில் நடைபெறும் மக்கள்தொகை … Read more

பீகார்: போலி காவல் நிலையம் நடத்தி வசூலை வாரிக் குவித்த ரவுடிக் கும்பல்? சிக்கியது எப்படி?

பீகார் மாநிலத்தில் 8 மாதங்களாக போலி காவல்நிலையம் நடத்தி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்தில் இயங்கி வந்த ரவுடிக் கும்பல் ஒன்று கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளது. இதையடுத்து ஒரு படி மேலே சென்று போலியாக ஒரு காவல் நிலையத்தையே நடத்திமக்களிடம் இருந்து பணம் பறித்து வசூல் வேட்டையை நடத்தியுள்ளது இந்த கும்பல். கடந்த ஜனவரி மாதம் பாங்கா நகரில் உள்ள … Read more

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ

டெல்லி : டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா  உட்பட 16 பேர் மீது  சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. புதிய காலால் வரிக் கொள்கையில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி துணை நிலை ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இல்லம் உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

பில்கிஸ் பானு பாலியல் வழக்கு | குற்றவாளிகளை விடுவித்தது பற்றி வெட்கப்படவில்லையா? – பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: உன்னாவ் பாலியல் வன் கொடுமை வழக்கில், பாஜக எம்எல்ஏவை காப்பாற்ற பணியாற்றினீர்கள். கதுவா, ஹாத்ரஸ் மற்றும் குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிப்பது பெண்களுக்கு எதிரான பாஜக.வின் மனநிலையை காட்டுகிறது. இது போன்ற அரசியல் செய்வதற்காக நீங்கள் வெட்கப்படவில்லையா பிரதமர் அவர்களே. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் … Read more

அவர் ஒரு அப்பாவி; நிரபராதி; ஜாக்குலினின் இமேஜை கெடுக்கின்றனர்!: அமலாக்கத்துறை மீது பகீர் குற்றச்சாட்டு

மும்பை: மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு அப்பாவி; அவரது இமேஜை தேவையில்லாமல் கெடுக்கின்றனர் என்று அமலாக்கத்துறை மீது அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். டெல்லி மருந்து கம்பெனியின் உரிமையாளர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த மருந்து கம்பெனி தொழிலதிபரும் சிறையில் இருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் மட்டுமல்லாமல் அவர் மனைவி லீனா உட்பட இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் … Read more

நமீபியா வழங்க முன்வந்த சிறுத்தைகளை வாங்க மறுத்த இந்தியா! என்ன காரணம்?

நமீபியா வழங்கத் தயாராக இருந்த சிறுத்தைகளைப் பெற இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சிறுத்தையின் ஒரு வகை இனம் முற்றிலும் அழிந்துபோய் பல பத்தாண்டுகள் ஆகி விட்ட நிலையில், அவற்றை மத்தியப பிரதேச வனவிலங்கு பூங்காவிற்கு வழங்க நமீபியா முன்வந்தது. இதற்காக நமீபியாவுடன் இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதற்கட்டமாக சிறுத்தைகளை நமீபியா இந்தியாவிற்கு அனுப்ப திட்டமிடப்பிட்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு சிறுத்தைகளை வாங்கும் … Read more

சாவர்க்கர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முன்னாள் முதல்வர் சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு

பெங்களூரு: சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சாவர்க்கர் படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கர்நாடகாவில் சுதந்திர கொண்டாட்டத்தின்போது சாவர்க்கர் படம் வைக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழும் பகுதியில் சாவர்க்கர் படம் வைக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சித்தராமையா … Read more

ஜனாதிபதியின் செயலராக ஒடிசா கேடர் அதிகாரி நியமனம்

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான  ராஜேஷ் வர்மா என்பவரை ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு நியமனம் செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு (64), கடந்த ஜூலை 25ம் தேதி நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் செயலாளராக ராஜேஷ் வர்மா என்பவரை ஒன்றிய அமைச்சரவையின் நியமனக் குழு நியமனம் செய்துள்ளது. இவர் 1987ம் ஆண்டு ஒடிசா கேடர் இந்திய … Read more

பாட்னா திரும்பிய லாலுவுடன் முதல்வர் நிதிஷ் குமார் சந்திப்பு

பாட்னா: டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் மாலை பாட்னா திரும்பிய ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவை முதல்வர் நிதிஷ் குமார் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். பிஹாரில் பாஜக உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் அண்மையில் முறித்துக் கொண்டார். லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட்ட கட்சி களுடன் சேர்ந்து, புதிய அரசின் முதல்வராக கடந்த 10-ம் தேதி பதவியேற்றார். லாலுவின் இளைய மகன் … Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் சுக்குநூறான அடுக்குமாடி கட்டடம் – வீடியோ உள்ளே!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், நான்கு அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள போரிவலியில், 4 அடுக்குமாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடம் மிகவும் பழமையானது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்து வந்தது. இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தக் கட்டடத்தில் வசித்தவர்களை மாநகராட்சி அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றினர். பிறகு, இந்தக் கட்டடம் பாழடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more