சற்றே குறைந்த வைரஸ் பாதிப்பு; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு கொரோனா.! 31 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 16,103 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 17,092 ஆக  பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,09,568-லிருந்து 1,11,711 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி … Read more

பாஜக தேசிய செயற்குழு கூட்டம்: பிரதமர் மோடி இன்று உரை

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவில் 2024 ஆம் ஆண்டு  தேர்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, நேற்று தனி விமானத்தில் ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடியின் வரவேற்பில் மாநில முதலமைச்சரும் , தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர ராவ் … Read more

உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாக். தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு

உதய்பூர்: நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரைச் சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையாலால் கருத்து பதிவிட்டார். இதையடுத்து அவரை 4 நாட்களுக்கு முன்பு 2 பேர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவுஸ் முகம்மது, ரியாஸ் அத்தரி ஆகியோருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான தவாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 2 கொலையாளிகளில் ஒருவருக்கு நேரடியாகவே பாகிஸ்தான் உடன் … Read more

காஷ்மீர் ஃபைல்ஸுக்கு கொண்டாட்டம்: ராணுவ அத்துமீறலை பேசும் படத்துக்கு தடை!

காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்த இயக்குநர் சந்தீப் ரவீந்திரநாத்தின் ஒன்பது நிமிட குறும்படம் உட்பட இரண்டு படைப்புகள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்இல் முடக்கப்பட்டுள்ளன. சந்தீப் ரவீந்திரநாத்தின் காஷ்மீருக்கான கீதம் (Anthem for Kashmir) எனும் வீடியோ, ஆயுதப் படைகள் சிறப்புப் படைச் சட்டத்தின் கீழ் உள்ள ராணுவ நகரமான பாரமுல்லாவில் படமாக்கப்பட்டது. ராணுவ ஒடுக்குமுறை பற்றிய காட்சிகளை கொண்ட அந்த குறும்படம், கடந்த மே மாதம் 12ஆம் தேதி பிரபல குறும்பட இயக்குநர் ஆனந்த் … Read more

நுபுர் சர்மா பற்றிய உச்சநீதிமன்றத்தின் கருத்து – சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில்

உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவைப் பற்றி கூறிய கருத்துகளை உரிய முறையில் அணுகுவோம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் தெரிவித்தது கருத்துதான் என்றும் அது உத்தரவு அல்ல என்றும் அவர் விளக்கினார். ஹைதராபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் ஆட்சேபகரமாக இருந்தாலும் சட்ட அமைச்சர் என்ற முறையில் அதைப்பற்றி பேச முடியாது என்று தெரிவித்தார். உரிய தளத்தில் இதைப்பற்றி விவாதிப்போம் என்றும் அமைச்சர் கூறினார் Source link

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு; மாயமான 28 பேரை தேடும் பணி தீவிரம்

மணிப்பூர்: மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்திருக்கிறது. மாயமான 28 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர். ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு … Read more

மின்னல் தாக்கியதன் விபரீதம் – ஒரே நாளில் 10 பேர் பலி

பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் பத்து பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. அப்போது, சரண் மாவட்டத்தில் ஆறு பேரும் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை … Read more

சத்தீஸ்கரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

ராய்ப்பூர்: நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு பலதரப்பிலும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்தை வெளியிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கன்னையா லால் என்பர் கடந்த மாதம் 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் சத்தீஸ்கர் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா ஜெகத் (22) என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து ஒன்றை கடந்த மாதம் 12-ம் தேதி பகிர்ந்துள்ளார். தற்போது அவருக்கும் … Read more

மும்பை திரும்பிய எம்.எல்.ஏ.க்கள்: மகாராஷ்டிராவில் இன்று கூடுகிறது சிறப்பு சட்டப்பேரவை!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மாநிலத்தை விட்டு வெளியேறினர். இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும் பொறுப்பேற்றனர். இந்த … Read more

சாலையோரம் நின்ற கார் மீது ஷேர் ஆட்டோ மோதி அப்பளம் போல் நொறுங்கிய சிசிடிவி காட்சி

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் சாலையோரம் நின்ற கார் மீது ஷேர் ஆட்டோ மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆட்டோவில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  Source link