’நாங்கள்தான் அதிமுக!’ – ஆலோசனை கூட்டத்தில் நடந்த கலாட்டா.. தேர்தல் அதிகாரி சொன்ன பதில்!

அதிமுக கட்சியின் தலைமை யார் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்க கூடிய நடவடிக்கை தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று காலை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட 11 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக சார்பாக இ.பி.எஸ் மற்றும் … Read more

காங். எம்.பி.க்கள் 4 பேரின் சஸ்பெண்ட் வாபஸ்; சஞ்சய் ரவுத் கைது விவகாரத்தில் மாநிலங்களவை முடக்கம்

புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இதனால் மக்களவை செயல்பாடு பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சீராகியுள்ளது. அமளி, சஸ்பெண்ட் உத்தரவு: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி ஒதுக்கீடு விவகாரம், அக்னி பாதை திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். … Read more

காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து – மக்களவை சபாநாயகர் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர், வரும் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி, அக்னிபத் திட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து, நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் … Read more

இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் ஒன்றிய அரசு: மக்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு!

டெல்லி: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி; விலைவாசி உயர்வு காரணமாக ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது; … Read more

கடைசி நாளில் 70 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் – இனி தாக்கல் செய்தால் அபராதம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நேற்று கடைசி தினம் என்பதால் ஒரே ஒரே நாளில் 70 லட்சம் பேர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்து உள்ளனர். நடப்பு நிதியாண்டிற்கான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி நேற்றுடன் முடிவடைந்தது. தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டும் … Read more

டிஹெச்எஃப்எல் பண மோசடி வழக்கு: தொழிலதிபர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டரை கைப்பற்றிய சிபிஐ

புனே: திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறு வனம் (டிஹெச்எஃப்எல்) மீதான பண மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டரை சிபிஐ கைப்பற்றியுள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட 17 வங்கிகளிடமிருந்து ரூ.34,615 கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான டிஹெச்எஃப்எல் மீதும் அதன் இயக்குநர்கள் கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. … Read more

ஆக. 3ல் அமைச்சரவை விரிவாக்கம் – முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

மேற்கு வங்க மாநில அமைச்சரவை வரும் 3 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், கடந்த மாத இறுதியில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதை அடுத்து, அவரது கட்சிப் பதவியை … Read more

வன்முறையை எதிர்கொள்ள சகிப்புத்தன்மை தேவையில்லை; துப்பாக்கி எடுத்தால் துப்பாக்கியால் தான் பதில்!: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கொச்சி: வன்முறையை எதிர்கொள்ள சகிப்புத்தன்மை தேவையில்லை; துப்பாக்கி எடுத்தால் துப்பாக்கியால் தான் பதில் அளிக்க வேண்டும் என்று கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளாக எந்தவித ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. சரணடைய முன்வருபவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர்.ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல், … Read more

நெருங்கும் சுதந்திர தினம்: தேசியக்கொடியை டிபி-யாக மாற்றும் பாஜக பிரமுகர்கள்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் தங்களது சமூக வலைதள பக்கங்களுக்கான டிபியை மாற்றி வருகிறார்கள். வரும் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு சமூக வலைதளப் பக்கங்களில் தேசியக் கொடியை வைக்க வேண்டுமென பிரதமர் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர்கள் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களுக்கான டிபியை மாற்றி வருகிறார்கள். I … Read more

விமான துறை பாதுகாப்பாக உள்ளது: விமான போக்குவரத்து இயக்குநரகம் உறுதி

புதுடெல்லி: இந்திய விமானத் துறை முற்றிலும் பாதுகாப்பாகவே உள்ளது என்றும் பயப்படத் தேவையில்லை என்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். சமீபமாக, இந்திய விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதி வழியிலே தரையிறக்கப்படும் நிகழ்வு தொடர்ச்சியாகியுள்ளது. இது விமானப் பயணங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே கூடுதல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய விமானத் துறை பாதுகாப்பாக உள்ளது என்றும் அனைத்து பாதுகாப்பு விதிகளும் முறையாக பின்பற்றப்படுவதாகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் … Read more