மகாராஷ்டிராவில் ஆயுதங்களுடன் மிதந்த மர்ம படகு – ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்

மும்பை: மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியை மர்ம படகு நேற்று நெருங்கியது. அந்த படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் ராய்காட் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கடல் பகுதியை நேற்று மர்ம படகு நெருங்கியது. இந்த படகு குறித்து போலீஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து படகை ஆய்வு செய்தனர். அதில் இருந்த பெட்டியில் … Read more

டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ ரெய்டு

டெல்லியில் அரசின் புதிய மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுகுறித்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மணீஷ் சிசோடியா குறிவைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் தினசரி நாளிதழில், டெல்லியின் கல்வித்துறை குறித்தும், அத்துறையின் அமைச்சரான மணீஷ் சிசோடியாவை … Read more

டோலோ650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் மருத்துவர்களுக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: டோலோ650 மாத்திரை தயாரிக்கும் மைக்ரோ லேப் நிறுவனம் மருத்துவர்களுக்கு மட்டும் ரூ.1000 கோடிக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் மிக அதிகமான அளவில் விற்கப்பட்ட மாத்திரை டோலோ-650 என்பது அனைவருக்கும்  தெரிந்த விஷயம். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலையடுத்து, கடந்த 6-ம் தேதி மைக்ரோ லேப்ஸ் லிமிடட் நிறுவனத்திக்கு சொந்தமாக 9 மாநிலங்களில் இருக்கும் 36 இடங்களில் … Read more

உலகில் அதிக மாசடைந்த நகரமாக இருக்கும் தலைநகரம் டெல்லி.! காரணம் என்ன?

உலகில் அதிகம் மாசு நிறைந்த நகரங்களின் பட்டியலில் எப்பொழுதுமே முதல் இடத்தில் இருக்கும் நகரமாக தலைநகர் டெல்லியே இருந்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன? இதனால் டெல்லி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? மாசுபாட்டை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? விரிவாக தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு வருடத்திலும் பெரும்பாலான நாட்கள் காற்றின் தர குறியீடு மிக மோசமாகவே இருக்கும் நகரமாகத்தான் நமது தலைநகரம் டெல்லி இருந்து வருகிறது. கொரோனாவிற்கு பிறகுதான் முகக் கவசம் அணிவது என்பது மிகச் … Read more

காஷ்மீரில் வெளிமாநில மக்களும் வாக்காளராக பதிவு செய்ய அனுமதி – அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் வெளிமாநில மக்களும் வாக்காளராக பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த மாநில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிமாநில மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 15,754 பேருக்கு கொரோனா… 47 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 15,754 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,14618 ஆக உயர்ந்தது. * புதிதாக 47 … Read more

லிங்காயத்து வாக்குகளுக்கு குறிவைத்து தேர்தலுக்காக எடியூரப்பாவுக்கு பதவி

பெங்களூரு: தென்னிந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர் பி.எஸ்.எடியூரப்பா. கடந்த 2021-ம் ஆண்டு அவர் கர்நாடக முதல்வராக இருந்தபோது, வயதை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் உத்தரவிட்டது. இதையடுத்து மிகுந்த வருத்தத்துடன் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். ஆட்சியிலும் கட்சியிலும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் அரசியலில் இருந்து விலகி பாஜக கூட்டங்களில் பங்கேற்பதைகூட தவிர்த்து வந்தார். இதனால் லிங்காயத்து சாதியினரும் மடாதிபதிகளும் பாஜக மேலிடத்தின் மீது அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் பாஜகவின் … Read more

மின்சாரம் வாங்க, விற்க தடை: தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு உத்தரவு!

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 5,085 ரூபாய் கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் தெலங்கானா, அதிகபட்சமாக 1,381 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தமிழகம், 926 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. மேலும், ராஜஸ்தான் 501 கோடி ரூபாய், ஜம்மு காஷ்மீர் 435 கோடி ரூபாய், ஆந்திரா 413 கோடி ரூபாய், … Read more

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி: 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள தடை…

டெல்லி : மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. மின் கட்டமைப்பை நிர்வகிக்கும் ஒன்றிய அரசின் பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 13 மாநிலங்கள் 5,100 கோடி ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளன. மின்சார சட்டத்திருத்தத்தின் புதிய விதிகளின்படி மாநிலங்கள் உரிய காலத்தில் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால், காலக்கெடு முடிந்துவிட்டதால், வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கவோ, … Read more

'பம்பாய்' பட பாணியில் காதலியை பார்க்க சென்ற காதலனுக்கு நேர்ந்த சோகம்: உ.பியில் பரபரப்பு

காதலுக்காக எதையும் செய்யத் துணியும் எண்ணம் எப்போதும் அனைவருக்கும் இருக்கும். அப்படி துணிந்து செய்யும் செயல்களில் ஒரு சிலர் சிக்கலில் சிக்கும் சூழலும் ஏற்படும். அப்படியான சூழலில்தால் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கியிருக்கிறார். உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்புர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான நபர் சையிஃப் அலி. இவர் தனது காதலியை பார்க்கச் சென்று போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான காரணம்தான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாஜ்பாய் … Read more