லடாக் எல்லை மோதல்: இந்திய – சீன ராணுவம் நாளை 16ம் சுற்று பேச்சு

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு ஜூன்  15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீன ராணுவ வீரர்கள்  முயன்றனர். அதை தடுத்தபோது ஏற்பட்ட பயங்கர மோதலில்  20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலை அடுத்து லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. பதற்றத்தைக் குறைக்க, இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. இதுவரை ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தை நடந்து உள்ளன. இதனால் இருதரப்பிலும் எல்லையில்  … Read more

சர்தார் சரோவர் அணையில் இருந்து வறட்சியான கட்ச் பகுதிக்கு வந்தடைந்தது நர்மதா நதி நீர் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

ராஜ்கோட்: சர்தார் சரோவர் அணையிலிருந்து 750 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட மிக நீண்ட கால்வாய் மூலம் நர்மதா நதி நீர், குஜராத்தின் வறட்சியான கட்ச் பகுதிக்கு வந்தடைந்துள்ளது. குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. இந்த அணையால் பல ஆதிவாசி கிராமங்கள் நீரில் மூழ்கும் என்று எதிர்ப்பு தெரிவித்து மேதா பட்கர், அருந்ததி ராய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடினர். அதையும் மீறி சர்தார் … Read more

இரு மாநில எல்லை பிரச்னைக்கு தீர்வு: அசாம் – அருணாச்சல் முதல்வர்கள் ஒப்பந்தம்

கவுகாத்தி: வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசமும், அசாம் மாநிலமும் 804 கிமீ துார எல்லையை  பகிர்ந்து கொண்டுள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. கடந்த 1972ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் யூனியன் பிரதேசமானது. அப்போது, பழங்குடியினருக்கு சொந்தமான பாரம்பரிய நிலங்கள் ஒருதலைப்பட்சமாக அசாமுக்கு மாற்றப்பட்டது. பின்னர், 1987ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் மாநில அந்தஸ்தை பெற்றதும் அமைக்கப்பட்ட முத்தரப்பு கமிட்டி அசாமின்  சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் அருணாச்சல … Read more

7 மணிக்கு மாணவர்கள் பள்ளி வரும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா? – உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி கேள்வி

புதுடெல்லி: காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தற்போது காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்குகள் மீது விசாரணை நடைபெறுகிறது. மதியம் 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உணவு இடைவேளை விடப்படுகிறது. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்திர … Read more

ஆடி மாத பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் திறக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில், ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார். இன்றைய தினம், … Read more

மது அருந்தி தள்ளாடி வந்தாரா முதல்வர் ஷிண்டே? – வீடியோ வைரலானதால் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மது அருந்திவிட்டு தள்ளாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து உண்மை கண்டறியும் ஊடகங்கள் விசாரணை நடத்தி விளக்கம் அளித்துள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அண்மையில் கவிழ்ந்தது. சிவசேனாவில் இருந்து தனி அணியாக பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கடந்த 30-ம் தேதி பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்றபோது ஏக்நாத் … Read more

நாளை மறுதினம் ஜனாதிபதி தேர்தல்; முர்முவுக்கு 61% வாக்குகள் உறுதி: தொடர்ந்து ஆதரவு அதிகரிக்கிறது

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடக்க உள்ள நிலையில், பாஜ கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு 61 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜ கூட்டணி தரப்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான பழங்குடி பிரிவைச் சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில், … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை – மாநிலங்களவையின் சுற்றறிக்கையால் மீண்டும் சர்ச்சை

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, போராட்டம், உண்ணாவிரதம், மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மாநிலங்களவையின் புதிய சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திங்கட்கிழமை 18-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. கடந்த காலங்களை போல் இந்த தொடரிலும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே இரு அவைகளின் உறுப்பினர்களும் போராட்டங்களை நடத்துவது வழக்கம். இந்நிலையில், மாநிலங்களவையின் … Read more

ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் கோளாறு.. அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் விமான நிலையத்தில் அவசர நிலை.!

ஷார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில், 222 பயணிகள் மற்றும் ஏழு விமான ஊழியர்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதால் விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. கொச்சி விமான நிலையத்துக்கு வரவேண்டிய இதரவிமானங்கள் கோயமுத்தூருக்கும் கண்ணூருக்கும் திருப்பி விடப்பட்டன. சுமார் ஒருமணி நேரம் கழித்து அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்ட பின் சென்னை வரும் இண்டிகோ விமானம் புறப்பட அனுமதியளிக்கப்பட்டது. Source link

குழந்தைகளே 7 மணிக்கு பள்ளிக்கு போகிறார்கள் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் 9.30 மணிக்கே வர முடியாதா?: உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி

புதுடெல்லி: ‘குழந்தைகளே காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு செல்கையில், நீதிபதிகளும், வக்கீல்களும் காலை 9.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாதா?’ என உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான பணி நேரம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையாகும். இந்நிலையில். உச்ச நீதிமன்றத்தின் 2வது அமர்வின் நீதிபதியான யு.யு.லலித் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக 9.30 மணிக்கு வழக்கு விசாரணையை தொடங்கினார். அப்போது, வேறு ஒரு வழக்கில் … Read more