வருமான வரிக் கணக்கு – இன்றே கடைசி நாள் – தவறினால் யார், யாருக்கு எவ்வளவு அபராதம்?

2021 – 2022 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். முந்தைய வருடங்களைப் போல கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. நீட்டிப்பு சாத்தியமா? கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு வருமான வரி செலுத்த டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. … Read more

உருது பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையா..? சர்ச்சையில் பீகார் முதல்வர் ..!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளமும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி ஆட்சி நடத்துகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மாணவர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனும் கல்வித்துறையின் அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. வெள்ளிக்கிழமை விடுமுறையும் ஞாயிற்றுக்கிழமை பள்ளியும் நடைபெறுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்து பாஜக தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து … Read more

பொருளாதார பிரச்னைகளில் இலங்கை, பாக். போன்ற நிலையை இந்தியா சந்திக்காது: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தகவல்

புதுடெல்லி: இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதார பிரச்னைகளை இந்தியா சந்திக்காது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு  இருக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க  ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றி உள்ளது. வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடன் அளவும் குறைவாகவே உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற … Read more

புதுக்கோட்டை ஆட்சியர் வெளியிட்ட செஸ் ஒலிம்பியாட் வீடியோ: தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பாராட்டு

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பர வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவை மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார். அந்த வீடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, சிறப்பான நடன வடிவமைப்பு. புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தயாரித்துள்ளதாக அறிகிறேன். சதுரங்க காய்கள் உயிர் பெற்றுள்ளன. இந்தியா தான் சதுரங்க விளையாட்டை கண்டுபிடித்தது என்ற நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது. வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். Superb. … Read more

தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்; அதிமுக இரண்டு பிரிவுக்கும் தேர்தல் கமிஷன் அழைப்பு: 2 மணி நேரத்தில் நடந்தது என்ன? எடப்பாடி தரப்பு அதிர்ச்சி

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைப்பது குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் இரண்டு பிரிவுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது என்பது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் (கலெக்டர்கள்) ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் … Read more

ரூ.1034 கோடி ஊழல் | அமலாக்கத்துறை தடுப்புக் காவலில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்

மும்பை: அமலாக்கத்துறை விசாரணைக்கு உள்ளான சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் ஏற்கெனவே கடந்த ஜூலை 20, 27 தேதிகளில் அனுப்பப்பட்டிருந்த சம்மன்களை ஏற்று ஆஜராகாத நிலையில் அவரது வீட்டிற்கே இன்று (ஜூலை 31) அமலாக்கத் துறை அதிகரிகள் சென்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை துணையுடன் சஞ்சய் ரவுத் வீட்டிற்கே சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை 7 மணிக்கு விசாரணையை … Read more

புது மதுபான கொள்கையை கைவிட்டதால் டெல்லியில் சரக்கு வாங்க குவிந்த குடிமகன்கள்

புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுக்கொள்கையை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி சில்லறை மதுக்கடைகளை அரசுக்கு பதில் தனியார் நடத்தும் என்றும், அதற்கான உரிமத்தையும் வழங்கியது. அதன்படி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மதுபானங்களை விநியோகிக்கப்பட்டது. ஆனால் இந்த புதிய மதுக்கொள்கை நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த போதும், இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதியான இன்றோடு புது மதுக் கொள்கை முடிவுக்கு வருகிறது. நாளை (ஆகஸ்ட் 1) முதல் மதுபானத்திற்கு … Read more

கடும் மன உளைச்சல்! 63 நாணயங்களை விழுங்கிய ராஜஸ்தான் வாலிபர்- மருத்துவர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த வாலிபரின் வயிற்றில் இருந்து 63 நாணயங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்நகரிலுள்ள சௌபாஸ்னி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் 36 வயதான வாலிபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றுவலிக்கான காரணம் குறித்து கண்டறிய இளைஞருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அதில் அவரது வயிற்றில் நாணயங்களின் குவியலை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மன அழுத்தத்தில் இருந்த போது 10-15 நாணயங்களை உட்கொண்டு விட்டதாக … Read more

"மதத்தின் பெயரால் மோதல்" – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு ..!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மதநல்லிணக்கம் பேணுவதற்காக மதநல்லிணக்க சந்திப்பு கூட்டம் நடத்தியுள்ளார். டெல்லியில் நேற்று சூபி மதகுருக்களுடன் சர்வமத நல்லிணக்க சந்திப்பை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நடத்தினார். நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கான பிரதமர் மோடியின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் அஜித் தோவல் பேசுகையில் கூறியதாவது: சில தீவிரவாத அமைப்புகள் மதத்தின் பெயரால் கலவரத்தையும், … Read more

உலகையே அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை.!

பணவீக்கம், அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பாதிப்புகள் காரணமாக உலகம் முழுவதும் விரைவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்படும் நிலையில், தனிநபர்கள் பாதிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான 8 வகையான  வழிகளை பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதலாவது வருமானத்துக்கும் செலவுக்குமான வரவுசெலவு அறிக்கையை தயாரித்து, தேவையற்ற செலவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வேலைஇழப்பு காலத்திலும், ஊதிய குறைப்பை சமாளிக்கும் வகையில் அவசரகால நிதியாக குறைந்தபட்சம் 3 மாத ஊதியத்தை வைத்திருக்க … Read more