“உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதத் தொகுப்பு” – அதிபர் ஜோபைடன் அறிவிப்பு

உக்ரைனுக்கு வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் இரு நவீன ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேட்டோ மாநாட்டில் மேலும் 820 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்தார். இந்நிலையில், ஆயுத தொகுப்பில் வான் இலக்கை தாக்கி அழிக்கும் NASAMS வகை ஏவுகணைகள், பீரங்கி எதிர்ப்பு ரேடார்கள், மற்றும் 15 மில்லி மீட்டர் பீரங்கி வெடிகுண்டுகள் என நவீன ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் … Read more

சட்டப்பேரவை தீர்மானத்தை மீறி பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர் நியமனம்: மேற்கு வங்க ஆளுநர் அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி, ரபீந்திர பாரதி பல்கலைக் கழகத்துக்கு புதிய துணைவேந்தரை ஆளுநர் நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜெகதீப் தன்காருக்கும் பல்வேறு விஷயங்களில் மோதல் நிலவி வருகிறது. இதனால், ஆளுநரை மட்டம் தட்டும் வகையில், அவரிடம்  இருந்த பல்கலைக் கழக வேந்தர் பதவியை, சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானத்தின் மூலம் மம்தா பறித்தார். ஆளுநருக்கு பதிலாக அவரே இந்த … Read more

கன்னைய்யா லால் கொலை வழக்கில் 6 பேர் கைது – மேலும் ஒருவரை கொல்ல திட்டமிட்டது அம்பலம்

புதுடெல்லி: உதய்பூரின் தையல்காரர் கன்னைய்யா லால் டெனி (40) கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைதாகி உள்ளனர். இவர்களில் கன்னைய்யா லால் உடலிலிருந்து தலை துண்டாகும் என எச்சரித்த நால்வர் அஜ்மீரிலும், கொலையாளிகளுக்கு உதவியதாக இருவர் உதய்பூரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் இறைத்தூதரை பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா விமர்சித்திருந்தார். இதனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் நுபுர் சர்மாவுக்கு உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கன்னைய்யா லால் சமூக வலைதளத்தில் ஆதரவளித்தார். இதன் … Read more

உத்தரப்பிரதேசத்தில் ரயில் நிலையம் அருகேயே சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு விபத்து.!

உத்தரப்பிரதேச மாநிலம் shahzadpur ரயில் நிலையம் அருகே நேற்றிரவு 10 மணி அளவில் சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. Source link

வாகனங்களின் டயர் தயாரிக்க புதிய விதிமுறை; மழையில பிரேக் அடிச்சாலும் வழுக்காம டக்குனு நிக்கணும்: ஒன்றிய அரசு கெடுபிடி உத்தரவு

புதுடெல்லி: வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய விதிமுறைகளின்படி தான் வாகனங்களின் டயர்களை தயாரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு  அறிவித்துள்ளது. இது குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கனரக வாகன டயர்களை புதிய விதிமுறைகளின்படி தயாரிக்க வேண்டும். இந்தியாவில் விற்கப்படும் டயர்களின் உருளும் விதம், ஈரமான தரையில் உறுதியாக நிற்பது, சாலையில் பயணிக்கும் போது டயர்களில் இருந்து எழும் சத்தத்தை கட்டுப்படுத்தும் வரன்முறை ஆகியவை இந்த … Read more

ஹைதராபாத் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.ராஜன் பொறுப்பேற்பு

சென்னை: ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஏ.எஸ்.ராஜன் பொறுப்பேற்றுள்ளார். 1987-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தேனியைச் சேர்ந்த ஏ.சேர்மராஜன் என்ற ஏ.எஸ்.ராஜன், ஐபிஎஸ் அதிகாரியாக பிஹார் மாநிலத்தில் நியமிக்கப்பட்டார். இவரது பெற்றோர் எஸ்.கே.அய்யாச்சாமி மற்றும் ஏ.ரெத்தினம்மாள். பிஹார் மாநிலத்தின் ராஞ்சியில் முதன்முதலாக பயிற்சி எஸ்பியாக தனது பணியைத் தொடங்கிய ஏ.எஸ்.ராஜன் அதன்பிறகு ரோஹ்டாஸ் மாவட்டஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 1999-ம் ஆண்டு மத்திய உளவுத் துறையில் … Read more

“கடந்த ஜூனில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வரி வருவாய்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டில் ஜி.எஸ்.டி. வருவாய் தொடர்ந்து அதிகரிப்பதாகவும், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்தாண்டு ஜூன் மாதத்தில் கிடைத்த ஜி.எஸ்.டி. வருவாயைக் காட்டிலும் இந்தாண்டு அதே மாதத்தில் 56 சதவீதம் அதிகம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரி ஏய்ப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவை அதிக ஜி.எஸ்.டி. வசூலுக்கு பங்களிப்பதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். Source link

மணிப்பூரில் மீட்பு பணிகள் தீவிரம்; நிலச்சரிவில் புதைந்த 60 பேர் கதி என்ன?.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் பலியானாவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண்ணில் புதைந்த பிராந்திய வீரர்கள் உட்பட 60 பேரின் கதி பற்றி கவலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் ேநானி மாவட்டத்தில்  துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக பிராந்திய ராணுவ  வீரர்கள் அந்த பகுதியில் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த புதன் இரவு இங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. … Read more

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை: பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஜூலை 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிராவில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்தார். சில நாட்களுக்கு முன்பு, சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு 38 சிவசேனா … Read more

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி விழுந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்த்தப்பிய சிசிடிவிக் காட்சி..!

கர்நாடகாவில் சாலையில் விபத்தின் போது இளம்பெண் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்த்தப்பிய சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. பெல்காம் புறநகர் கணேஷ்புரா சாலையில், நேற்று காலை ஒரு பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது எதிரே நாய் ஓடி வந்ததால், வாகனத்தில் வேகத்தை குறைக்க முயன்றுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி வாகனத்துடன் அப்பெண் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் சடன் பிரேக் அடித்ததால் அந்த பெண் உயிர்த்தப்பினார்.  Source link