காஷ்மீர் பண்டிட்டை கொன்ற  தீவிரவாதியின் வீடு பறிமுதல் – பாதுகாத்த குடும்பத்தினர் கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சுனில் குமார் பட் என்ற காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக் கொன்ற அடில் வானி என்ற தீவிரவாதியின் வீட்டை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நேற்று பறிமுதல் செய்தது. ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பழத்தோட்டத்தில் பணியாற்றிய காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சுனில் குமார் பட் மற்றும் அவரது உறவினர் பிதாம்பர் நாத் பட் ஆகியோர் மீது, அடில் வானி என்ற உள்ளூர் தீவிரவாதி கடந்த 16-ம் தேதி துப்பாக்கி சூடு நடத்தினார். … Read more

டெல்லி தான் இதில் நம்பர் 1: இதுக்கு வெக்கப்படணும் சென்றாயன்!

உலகளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் நேற்று (ஆகஸ்ட் 17) வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலகளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் 7500க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்திய தலைநகர் டெல்லி தான் அதிக காற்று மாசுபாடுள்ள நகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலும் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும் தாண்டி மிக மோசமான … Read more

புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வாஸ்கோ மற்றும் fite n fusta  ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘PONDY FOOD FETE 2022’ என்ற நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பழைய துறைமுக வளாகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த உணவு மற்றும் ஒயின் திருவிழாவில் மது பிரியர்களை குதூகலப்படுத்தும் விதமாக உள்நாட்டு மற்றும் … Read more

அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என ஐஜத எம்எல்ஏ பகிரங்க புகார்.. சிக்கலில் நிதிஷ் குமார்!

பீகார் மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளார் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி. இதனால் அம்மாநில அரசியலில் மீண்டும் குழப்பம் நிலவுகிறது. பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி உடனான முரண்பாட்டை தொடர்ந்து கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கமும் செய்யப்பட்டது. இந்நிலையில் … Read more

சிறைகளில் ஆங்கிலேயர் கால விதிமுறைகளுக்கு முடிவு – கைதிகளுக்கு புதிய வசதிகள் அளிக்க உ.பி. முதல்வர் யோகி ஒப்புதல்

புதுடெல்லி: உத்தரபிரதேச சிறைச்சாலைகளில் ஆங்கிலேயர் கால விதிமுறைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு பல்வேறு புதிய வசதிகளை அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உ.பி. சிறைச்சாலை நடைமுறைகளில் ஆளும் பாஜக அரசு பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இதில் கடந்த 1941 முதல் பின்பற்றப்பட்டு வந்த சிறைச்சாலை விதிமுறைகள் கையேடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனி அது, ‘உத்தரப்பிரதேச விதிமுறைகள் கையேடு 2022’ என்ற பெயரில் பின்பற்றப்பட உள்ளது. இதற்கான … Read more

வடகிழக்கில் மீண்டும் துவங்கிய சிஏஏ போராட்டம்!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளாதால் சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு … Read more

மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து

திருவனந்தபுரம்: மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவதும் கொடுமைதான். அதை எந்தப் பெண்ணும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்று கூறிய கேரள உயர் நீதிமன்றம், இளம்பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஏற்றுமானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். எம்சிஏ படித்த 2 பேரும் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். திருமணம் முடிந்த அதே வருடம் நவம்பர் 2ம் தேதி, … Read more

கேரளாவில் செயற்கை சுவாச உதவியுடன் தனித்தேர்வு எழுதிய 50 வயது பெண்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட் டம், வைக்கப்ரயார் பகுதியைச் சேர்ந்தவர் சிமிமோள்(50). இவர் கடுதுருத்தி பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு நிலையிலான தனித்தேர்வு எழுதினார். தீவிரமான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிமிமோள் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு இந்தத் தேர்வினை எழுதினார். சிமிமோளிற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில் ஆக்சிஜன் கலன்கள், சுவாசம் பெறுவதற்கான குழாய் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அந்த தனி அறையில் சிமிமோள் 12-ம் வகுப்பு தனித்தேர்வை எழுதினார். … Read more

எனது காட்ஃபாதர் யார் தெரியுமா? கோவையில் கர்நாடக முதல்வர் அளித்த சர்ப்ரைஸ்!

கோவையில் பிரபல சுகுணா குழுமத்தின் நிறுவனர் ஜி.ராமசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்கத்தில் செய்யப்பட்டிருந்தன. இதில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையொட்டி கோவை விமான நிலையம் முதல் விழா அரங்கு வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நூற்றாண்டு விழாவில் ஜி.ராமசாமி நாயுடுவின் திருவுருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, எனது … Read more

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்

பீகார்: டெல்லியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ், நேற்று பீகார் திரும்பினார். அவரை பீகார் முதல்வர் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், உடல் நிலை பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். … Read more