முர்மு விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜ, காங். போட்டி போட்டு அமளி: திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: பாஜ மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின. இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியதில் இருந்து பல்வேறு விவகாரங்களால் இரு அவைகளிலும் அலுவல்கள் நடக்காமல் முடங்கி வருகின்றன. இதற்கிடையே, ஜனாதிபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று முன்தினம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அக்கட்சியின் … Read more

மீண்டும் பயங்கரம் – சிறுவனின் காதை துண்டாக எடுத்த பிட்புல் நாய்!

உத்தரபிரதேசத்தில் பிட்புல் நாயால் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, பஞ்சாபில் ஒரு சிறுவனின் காதை பிட்புல் நாய் கடித்து பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்லி பான் கிராமத்தைச் சேர்ந்தவர் பகதூர் சிங். இவர் தனது மகன் டிக்குனை (13) இன்று காலை மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்றார். கடையில் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பி வரும் போது, அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் பிட்புல் … Read more

அவமதிப்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது – எம்பிக்கள் உண்ணாவிரதம் நிறைவு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவமதித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். மேற்குவங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடந்த 27-ம் தேதி டெல்லியில் பேட்டியளித்தபோது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று முன்தினம் எதிரொலித்தது. … Read more

குஜராத்திகளையும், ராஜஸ்தானிகளையும் அகற்றினால் மகாராஷ்டிராவில் பணமே இருக்காது: மகாராஷ்டிரா ஆளுநர்

குஜராத்திகளையும், ராஜஸ்தானிகளையும் மும்பை மற்றும் தானேவிலிருந்து அகற்றினால் மகாராஷ்டிராவில் பணமே இருக்காது என்றும் மும்பை இந்தியாவின் நிதி தலைநகராக இருக்காது எனவும் ஆளுநர் பகந்த் சிங் கோஷ்யாரி தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த பேச்சை டிவிட்டரில் பதிவிட்டுள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், ஆளுநர் மராத்தியர்களை இழிவுப்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். Source link

பசுவின் கோமியம் லிட்டர் ரூ.4-க்கு கொள்முதல் செய்யும் திட்டம் : சத்தீஸ்கர் முதல்வர் தொடங்கி வைத்தார்

ராய்ப்பூர் : கால்நடை விவசாயிகளிடம் இருந்து பசுக்களின் கோமியத்தை கொள்முதல் செய்யும் திட்டத்தை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே பசு கோமியம் கொள்முதல் செய்யும் முதல் மாநிலமாக சத்தீஸ்கர் மாநிலம் உருவெடுத்துள்ளது. கால்நடை விவசாயிகளிடம் இருந்து மாட்டு சாணத்தை வாங்குவதற்காக 2020ம் ஆண்டில் ‘கோதன் நியாய் யோஜனா’ திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது பசு கோமியம் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி கால்நடை விவசாயிகளிடம் இருந்து ஒரு லிட்டர் கோமியம் … Read more

அழுக்கான மருத்துவமனை படுக்கையில் டீனை படுக்கவைத்த பஞ்சாப் அமைச்சர்: குவியும் கண்டனங்கள்

சண்டிகர்: அழுக்கான மருத்துவமனை படுக்கையில் டீனை படுக்கவைத்த பஞ்சாப் மாநில அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜாவுக்கு கண்டனங்கள் குவிகின்றன. பஞ்சாப் சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜா. இவர் நேற்று ஃபரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த படுக்கைகள் சுகாதாரமற்றதாக இருப்பதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார். அப்போது அவர் திடீரென தன்னுடன் இருந்த துணை வேந்தர் மருத்துவர் ராஜ் பகதூரை நோயாளியின் படுக்கையில் படுக்க நிர்பந்தித்தார். அந்தப் படுக்கை அழுக்காக இருந்தது. அமைச்சரின் நிர்பந்தத்தால் டீன் சில … Read more

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமின்

டெல்லி: வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் அதிகாரிகள் 4 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமின் ஜாமின் வழங்கியது. ஜாமின் பெற்றுள்ள விமானப்படை முன்னாள் அதிகாரிகள் 4 பேரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

டெல்லியில் 14,000 சீன கத்திகள் பறிமுதல்: தமிழகம், குஜராத் வாடிக்கையாளர்களிடம் விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் தடை செய்யப்பட்ட 14,000 சீன கத்திகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. இவற்றை விலைக்கு வாங்கிய தமிழ்நாடு, ஹைதராபாத் மற்றும் குஜராத் மாநில வாடிக்கையாளர்களிடம் விசாரிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. டெல்லி சித்தரஞ்சன் பூங்கா பகுதி காவல்நிலையத்திற்கு ஒரு ரகசியத் தகவல் போலீஸுக்குக் கிடைத்தது. அதில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன கத்திகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் தடை செய்ய அந்தக் கத்திகள் ஆன்லைன் வர்த்தகத்தளங்களின் … Read more

உலகளவில் மிக அதிகமாக இந்தியாவில் 40 சதவீதம் டிஜிட்டல் பரிவர்த்தனை: பிரதமர் மோடி பெருமிதம்

அகமதாபாத்: ‘உலகின் 40 சதவீத டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடக்கிறது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள கிப்ட் சிட்டியில் இந்தியாவின் முதல் சர்வதேச தங்க சந்தை மற்றும்  சர்வதேச நிதிச் சேவைகள் மைய ஆணையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தன்னம்பிக்கையின்றி, அடிமைத் தனத்தால் முடங்கி கிடந்தது. தற்போது, நிலைமை மாறி வருகிறது. சர்வதேச சந்தைகளுடன் நாம் … Read more

குடியரசுத் தலைவர் முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கடிதம்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் அண்மையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து அவர் சர்சைக்குரிய வகையில் பேசினார். இந்த வீடியோ நாடு முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மாநிலங்களவையில் மத்திய … Read more