ஆர்எஸ்எஸ் தொண்டர் டு மகாராஷ்டிர முதல்வர் – யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளன. சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தின் புதிய முதல்வராக நேற்று பதவியேற்றார். முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு 44, தேசியவாத காங்கிரஸுக்கு 54 இடங்கள் கிடைத்தன. … Read more

நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா..!

நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு முதல் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஷாருக்கான், அமிதாப்பச்சன்,  விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  Source link

மணிப்பூர் நிலச்சரிவில் 8 பேர் புதைந்து பலி; ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் மாயம்

இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பிராந்திய ராணுவ வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாகவே கனமழை பெய்து வருகிறது. அசாம், திரிபுராவில் பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் மழை, வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், … Read more

பனிலிங்க தரிசனத்துக்கு 3 லட்சம் பேர் முன்பதிவு: அமர்நாத் யாத்திரை தொடங்கியது; முதல் நாளில் 10,000 பேர் பயணம்.!

ஜம்மு: இமயமலையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க, அமர்நாத் பனிக்குகையை நோக்கி பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் கிளம்பினர்.  நேற்று  10 ஆயிரம் பேர் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க, அமர்நாத் கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக இந்த யாத்திரை நடத்தப்படவில்லை. தற்போது தொற்று பீதி குறைந்துள்ளதால், நேற்று முதல் இந்த யாத்திரை தொடங்கியது. அனந்தநாக் மாவட்டத்தில் … Read more

“வணிக சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலம் தமிழ்நாடு” – மத்திய அரசு

வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அந்த பட்டியலில், முதன்மையான மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.  Source link

மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்; முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே.! பாஜவின் பட்நவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றார்

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. பாஜ.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனா அதிருப்தி  எம்எல்ஏ.க்கள் அணியின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி  ஏற்றார். பட்நவிஸ் துணை முதல்வராக  பதவியேற்றார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து, ‘மகாராஷ்டிரா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. முதல்வராக இக்கட்சியின் தலைவர் … Read more

மராட்டியத்தில் பாஜக – சிவசேனா ஆட்சி… புதிய முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே

மகாராஷ்டிரத்தில் பாஜக – சிவசேனா கூட்டணி சார்பில் புதிய முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே பதவியேற்க உள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் 39 பேரும் அறிவித்தனர். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியனார். இந்நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் சிண்டே ஆகியோர் மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோசியாரியை முறைப்படி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். தங்களுக்கு ஆதரவளிக்கும் … Read more

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மாற்றாக, அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடும் அங்கீகாரம், எஸ்பிஐ வங்கிக்கு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மூலமாக 21வது … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18ம் தேதி துவக்கம்; ஆகஸ்ட் 12 வரை நடக்கும்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் முடிகிறது. இதனால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடத்தப்படுகிறது. இதில், பாஜ கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி முடியும் என்று அறிவிக்கப்பட்டு … Read more

ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே – லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!

மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து நேற்று ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிசும் ஏக்நாத் ஷிண்டேவும் ஆளுநர் கோஷ்யாரியிடம் உரிமை கோரினர். ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்பு ஊட்டினார் ஆளுநர் கோஷியாரி. தங்களுக்கு தான் பெரும்பான்மை பலம் இருப்பதாக இருவரும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். … Read more