நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும், மக்களவை மாலை 4 மணிக்கும் ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 10-வது நாளான இன்றும் அவையில் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும், மக்களவை மாலை 4 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி … Read more