நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும், மக்களவை மாலை 4 மணிக்கும் ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 10-வது நாளான இன்றும் அவையில் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும், மக்களவை மாலை 4 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி … Read more

பார்த்தா சட்டர்ஜியின் அமைச்சர் பதவி பறிப்பு – மம்தா பானர்ஜி நடவடிக்கை

ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா … Read more

இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ்கள் அறிமுகம்: அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். ஸ்கை பஸ்களில் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்; எரிபொருளுக்கு மாற்றாக மின்சார ஆற்றலைப் பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.

வங்கியில் சிக்கிய ரூ.25 லட்சம் சேமிப்பு! தகுந்த நேரத்தில் கிடைக்காததால் மூதாட்டி பலி

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.25 லட்சத்தை கூட்டுறவு வங்கி தராமால் இழுத்தடித்த காரணத்தால், 70 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவில் வசித்து வந்தவர் பிலோமினா. ஓய்வு பெற்ற செவிலியரான இவர் தனது கணவர் தேவஸ்ஸியுடன் அவ்வூரில் வசித்து வந்தார். இவர் அவ்வூரிலேயே இருந்த மாநில அரசின் கீழ் இயங்கும் கூட்டுறவு வங்கியில் தனது சேமிப்பை வெகு நாட்களாக மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு உடல்நலக் … Read more

"என்னுடன் பேச வேண்டாம்" – நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி ஆவேசம் ..!

மக்களவை மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, பாஜக எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர் . காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் ‘ராஷ்டிரபத்னி’ கருத்துக்காக சோனியா காந்தியை ராஜினாமா செய்யக் கோரினர். காங்கிரஸ் தலைவர் முன்பு ஜனாதிபதி திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்னி’ என்று குறிப்பிட்டார். இந்த குழப்பத்தின் போது, சோனியா காந்தி பாஜக தலைவர் ரமா தேவியை அணுகி, அந்த கருத்துக்கு சவுத்ரி மன்னிப்பு கேட்டதாகவும், வீட்டில் தனது பெயர் ஏன் எடுக்கப்படுகிறது என்று தேவியிடம் கேட்டதாகவும் … Read more

தேசிய நெடுஞ்சாலைகளை அடிக்கடி பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்க கட்டண சலுகை; அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க கட்டணம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது: தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் 2008-ன்படி, தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வர்த்தகமில்லாத வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி மாதாந்திர பயண அட்டை … Read more

'ஒரு ஆசிரியை செய்யக்கூடிய காரியமா இது?' – மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை சஸ்பெண்ட்

ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் வைத்து மாணவரை மசாஜ் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஊர்மிளா சிங். இவர் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து அந்த மாணவன், நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்திருந்த ஆசிரியைக்கு மசாஜ் செய்கிறார். அப்போது, வகுப்பறையில் மற்ற மாணவ மாணவியரும் அமர்ந்து உள்ளனர். இந்த … Read more

பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் – மேற்கு வங்கத்தில் அதிரடி ..!

மேற்கு வங்க அரசில் உள்ள மம்தா பானர்ஜி அரசாங்கம் இறுதியாக ஆசிரியர் நியமன மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜியை பதவி நீக்கம் செய்துள்ளது. மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சட்டர்ஜி அவர் பொறுப்பு அமைச்சராக இருந்த துறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை மறுசீரமைப்புத் துறை ஆகியவற்றை … Read more

கர்நாடகாவில் மின்வேலியில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழக்கும் காட்டு யானைகள்

பெங்களுர்; கடந்த 5 நாட்களில் 3 காட்டு யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கின்றன. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் இரையை தேடி வரக்கூடிய காட்டு யானைகள் மின் வேலியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டும் 3 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்மாபேட்டை தாலுகா பஞ்சப்பள்ளி பகுதியில் இரை தேடி வனப்பகுதியில் இருந்து கிராமப்பகுதிக்கு வந்த  25 வயது பெண் யானை … Read more

விறகு சேகரிக்க சென்ற பெண்ணுக்கு கிடைத்த வைரக்கல்! நேர்மையுடன் பெண் செய்த காரியம்

அதிர்ஷ்டம் வாழ்க்கையில் ஒருமுறை கதவை தட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணுக்கு பட்டை தீட்டாத வைரக்கல் கிடைத்திருக்கிறது. புருஷோத்தம்பூரில் வசிக்கும் ஜெண்டா பாய் என்ற பெண், தனது 6 குழந்தைகளையும் காப்பாற்ற தினமும் கூலி வேலைக்கு செல்கிறார். அவர் விறகு எடுக்கச் சென்றபோது பட்டை தீட்டாத வைரக்கல் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஏழ்மையிலும் நேர்மையாக இருந்த அந்தப்பெண், வைரத்தை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். 4.39 கேரட் எடையுள்ள … Read more