ஆதீர் ரஞ்சன் சவுத்ரியை தொடர்ந்து சர்ச்சையில் சோனியா காந்தி: பாஜகவினர் சாடல்

புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவரை தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், சோனியா காந்தி மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். முன்னதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் பேசும்போது குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபதி என்று சொல்வதற்குப் பதிலாக ராஷ்ட்ரபத்னி என்று சொல்லிவிட்டார். “இது வாய் தவறி நிகழ்ந்துவிட்டது. எனக்கு குடியரசுத் தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அவர் கூறியிருந்தாலும் … Read more

காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சௌத்ரியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக ஆர்பாட்டம்!

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை தகாத வார்த்தையில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சௌத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதிர்ரஞ்சன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். இதனிடையே, தாம் தவறுதலாக அவ்வாறு குறிப்பிட்டு விட்டதாக ஆதிர்ரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார். Source link

மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதியாக சொல்வேன்; மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிற மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது: எனது கட்சிக்கு எதிராக தீய நோக்கத்துடன் பிரசாரம் செய்யப்படுகிறது. ஒருவர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் கண்டிப்பாக தண்டிக்கட்டும். ஆனால் புலனாய்வு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு … Read more

மேலும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்; சஸ்பெண்ட் 27ஆக உயர்வு

மேலும் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மக்களவை உறுப்பினர்கள் நால்வர் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் சேர்த்து, இந்தக் கூட்டத் தொடரில் இதுவரை 27 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடக்க நாளிலிருந்து ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்குவது தினசரி வாடிக்கையாகிவிட்டது என்கிற … Read more

மேற்குவங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜியை நீக்கினார் மம்தா பானர்ஜி..!!

கொல்கத்தா: மேற்குவங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜியை மம்தா பானர்ஜி நீக்கி உள்ளார். மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், தலைநகர் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி கடந்த 23-ம் தேதி கைது … Read more

மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம் தொடர்கிறது

புதுடெல்லி: மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றும் தொடர்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், விலைவாசி உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, அக்னிபாதை திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த கோரி மக்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கூட்டத்தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர். அதே போன்று மாநிலங்களவையில் திமுகவின் 6 எம்பிக்கள் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் … Read more

எஸ்சி, எஸ்டி காலிப் பணியிடங்களை நிரப்புக: மத்திய அமைச்சரிடம் ரவிக்குமார் எம்.பி நேரில் வலியுறுத்தல் 

புதுடெல்லி: மத்திய அரசில் காலியாக இருக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, விழுப்புரம் எம்.பி டி.ரவிக்குமார் இன்று மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திரா குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார். இது தொடர்பாக கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பியான ரவிக்குமார் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான பதிலில் பிரதமர் அமைச்சகம், மத்திய அரசின் பத்து துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் … Read more

மேற்கு வங்க அமைச்சரை பதவியில் இருந்து நீக்க குணால் கோஷ் கோரிக்கை..

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்தும், திரிணாமூல் கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என அந்தக் கட்சித் தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாகப் பார்த்தா, அர்ப்பிதா இருவரையும் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். அர்ப்பிதாவின் வீடுகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளில் 40 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Source link

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒரே சிரிஞ்ச்ன் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அதிர்ச்சி தகவல்!

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தின் சாகர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒரே சிரிஞ்ச்-ன் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திர அஹிர்வார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று பள்ளியில் நடந்துள்ளது. மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது சிரிஞ்ச்-ஐ மாற்றாமல் தடுப்பூசி செலுத்தியதாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 39 மாணவர்களும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் 9 முதல் 12ம் வகுப்பு … Read more

சிஆர்பிஎப் எழுச்சி தினம் – வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) எழுச்சி தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 1939-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிஆர்பி (கிரவுன் ரெப்ரசன்டேடிவ் போலீஸ்) என்ற பெயரில் தொடங்கப்பட்ட படையே, நாடு விடுதலைக்குப் பிறகு சிஆர்பிஎப் என மாற்றப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய மத்திய போலீஸ் படையாக உள்ள சிஆர்பிஎப் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிஆர்பிஎப் … Read more