ஜூலை 1-ல் தொடங்குகிறது 21-வது தேர்தல் பத்திர விற்பனை – மத்திய அரசு

21-வது தேர்தல் பத்திர விற்பனை ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், அவற்றை தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கலாம். அதன்படி ஆயிரம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான தேர்தல் பத்திரங்களை அவ்வப்போது, ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கியால் வெளியிடும். குஜராத், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜூலை ஒன்று முதல் 10 ஆம் தேதி … Read more

3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: 3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். நியூசார், டி.எஸ்.இ.ஓ. ஸ்கூப்-1 ஆகிய 3 செயற்கைக்கோளும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் – மத்திய அரசு அறிக்கை!

தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழில் சீர்திருத்த செயல்திட்ட அடிப்படையில் மாநிலங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய 7 மாநிலங்கள் தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியதில் முதன்மை மாநிலங்களாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதன்மை மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 மாநிலங்களில் 5 மாநிலங்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றைச் … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைகோள்களை தாங்கிக்கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்து இஸ்ரோவின் PSLV C -53 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 3 முக்கியமான செயற்கைகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை பொறுத்த வரை சமீப காலங்களாகா பணம் பெற்று வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளுகாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணியை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் விண்ணில் … Read more

வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்

டிஎஸ்-இஓ புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மாலை 6 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.  டி.எஸ் இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -53 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி அவற்றை விண்ணில் ஏவி வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு … Read more

முதல்வராக பட்னவிஸ்.. துணை முதல்வராக ஷிண்டே.. நாளை பதவியேற்பு விழா!

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, பாஜகவைச் சேர்ந்த, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். மேலும், தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத உத்தவ் தாக்கரே, என்ன செய்வதென்று தெரியாமல் … Read more

ராஜஸ்தான் படுகொலை குற்றவாளிகளிக்கு உச்சபட்ச தண்டனை: தையல் கடைக்காரர் குடும்பத்துக்கு முதல்வர் அசோக் கெலாட் உறுதி

ஜெய்ப்பூர்: உதய்பூரில் தையல் கடைக்காரரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உறுதி அளித்துள்ளார். முகமது நபிகள் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜ தகவல் தொடர்பாளராக இருந்த  நுபுர் சர்மா கூறியதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், அவரை ஆதரித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், … Read more

45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!

விதிமுறைகளை சரியாக பின்பற்ற வில்லை என கடந்த பிப்ரவரியில் என்.எஸ்.இ.யின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா , எஸ்.எஸ்.இ நிறுவனம் உள்ளிட்ட பலருக்கும் செபி அபராதம் விதித்தது. ஆனந்த் சுப்ரமணியன் நியமனம், முக்கியமான தகவல்களை அடையாளம் தெரியாத நபரிடம் பகிர்ந்துகொள்வது மற்றும் நிர்வாக முறைகேடு காரணமாக பிப்ரவரியில் 3 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது,. தற்போது `டார்க் பைபர்’ வழக்கில் செபி மீண்டும் ரூ.5 கோடி அளவுக்கு சித்ராவுக்கு அபராதம் விதித்திருக்கிறது. 18 … Read more

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அடுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிலவி வரும் நிலையில் புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்கிறார். சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு … Read more

மகாராஷ்டிர முதல்வர் ஆகிறார் ஏக்நாத் ஷிண்டே – பாஜக கொடுக்கும் கிப்ட்!

மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்க உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இன்று, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் … Read more