ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைகோள்களை தாங்கிக்கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்து இஸ்ரோவின் PSLV C -53 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 3 முக்கியமான செயற்கைகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை பொறுத்த வரை சமீப காலங்களாகா பணம் பெற்று வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளுகாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணியை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் விண்ணில் … Read more

வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்

டிஎஸ்-இஓ புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மாலை 6 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.  டி.எஸ் இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -53 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி அவற்றை விண்ணில் ஏவி வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு … Read more

முதல்வராக பட்னவிஸ்.. துணை முதல்வராக ஷிண்டே.. நாளை பதவியேற்பு விழா!

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, பாஜகவைச் சேர்ந்த, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். மேலும், தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத உத்தவ் தாக்கரே, என்ன செய்வதென்று தெரியாமல் … Read more

ராஜஸ்தான் படுகொலை குற்றவாளிகளிக்கு உச்சபட்ச தண்டனை: தையல் கடைக்காரர் குடும்பத்துக்கு முதல்வர் அசோக் கெலாட் உறுதி

ஜெய்ப்பூர்: உதய்பூரில் தையல் கடைக்காரரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உறுதி அளித்துள்ளார். முகமது நபிகள் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜ தகவல் தொடர்பாளராக இருந்த  நுபுர் சர்மா கூறியதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், அவரை ஆதரித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், … Read more

45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!

விதிமுறைகளை சரியாக பின்பற்ற வில்லை என கடந்த பிப்ரவரியில் என்.எஸ்.இ.யின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா , எஸ்.எஸ்.இ நிறுவனம் உள்ளிட்ட பலருக்கும் செபி அபராதம் விதித்தது. ஆனந்த் சுப்ரமணியன் நியமனம், முக்கியமான தகவல்களை அடையாளம் தெரியாத நபரிடம் பகிர்ந்துகொள்வது மற்றும் நிர்வாக முறைகேடு காரணமாக பிப்ரவரியில் 3 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது,. தற்போது `டார்க் பைபர்’ வழக்கில் செபி மீண்டும் ரூ.5 கோடி அளவுக்கு சித்ராவுக்கு அபராதம் விதித்திருக்கிறது. 18 … Read more

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அடுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிலவி வரும் நிலையில் புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்கிறார். சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு … Read more

மகாராஷ்டிர முதல்வர் ஆகிறார் ஏக்நாத் ஷிண்டே – பாஜக கொடுக்கும் கிப்ட்!

மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்க உள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இன்று, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் … Read more

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: இன்று இரவு 7.30 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் ஏக்நாத் ஷிண்டே..!

மும்பை: மராட்டிய மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே நேற்றிரவு ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பாஜ தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. பாஜவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. … Read more

“ஹனுமன் மந்திரத்தின் மகிமை” – உத்தவ் ராஜினாமா குறித்து ம.பி அமைச்சர் கருத்து

புதுடெல்லி: தம் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக கூறிய சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் புகார் குறித்து மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கருத்து கூறியுள்ளார். “இவர்கள் கடத்தப்படவில்லை. 40 எம்.எல்.ஏ.க்கள் 40 நாட்களில் ஹனுமன் மந்திரம் ஓதிய மகிமையால் வெளியேறினர்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரலில் மகாராஷ்டிராவில் மசூதிகளின் ஒலிபெருக்கி சர்ச்சை கிளம்பியது. இதற்கு தடை விதிக்கக் கோரினார் மகாராஷ்டிராவின் சுயேச்சை எம்.பி.யான நவ்நீத் ராணா. இதற்காக அவர் … Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் தாமரை – ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பட்னவிஸ்!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். மேலும், தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் … Read more