மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒரே சிரிஞ்ச்ன் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அதிர்ச்சி தகவல்!

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தின் சாகர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒரே சிரிஞ்ச்-ன் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திர அஹிர்வார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று பள்ளியில் நடந்துள்ளது. மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது சிரிஞ்ச்-ஐ மாற்றாமல் தடுப்பூசி செலுத்தியதாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 39 மாணவர்களும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் 9 முதல் 12ம் வகுப்பு … Read more

சிஆர்பிஎப் எழுச்சி தினம் – வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) எழுச்சி தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 1939-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிஆர்பி (கிரவுன் ரெப்ரசன்டேடிவ் போலீஸ்) என்ற பெயரில் தொடங்கப்பட்ட படையே, நாடு விடுதலைக்குப் பிறகு சிஆர்பிஎப் என மாற்றப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய மத்திய போலீஸ் படையாக உள்ள சிஆர்பிஎப் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிஆர்பிஎப் … Read more

பறிபோகும் அமைச்சர் பதவி..? – ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர்!

கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரான கொல்கத்தாவில் உள்ள அர்பிதா முகர்ஜியின் இரண்டாவது குடியிருப்பில் அமலாக்க இயக்குனரகம் நடத்திய சோதனையில் சுமார் ₹ 29 கோடி ரொக்கம் மற்றும் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. பள்ளி வேலை வாய்ப்பு மோசடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்கத்தாவின் பெல்காரியா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 18 மணி நேர சோதனையை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 10 டிரங்குகளுடன் … Read more

விண்ணப்பமோ 22.5 கோடி..வேலைவாய்ப்போ 7,22,311 மட்டுமே!: 8 ஆண்டுகளில் 1% பேருக்கு கூட கிடைக்காத ஒன்றிய அரசு வேலை.. அதிர்ச்சி தகவல் வெளியீடு..!!

டெல்லி: ஒன்றிய அரசு பணிக்காக கடந்த 8 ஆண்டுகளில் 22 கோடி பேருக்கு மேல் பதிவு செய்தும் வெறும் 7 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை கிடைத்திருக்கிறது. வேலைக்காக விண்ணப்பித்தவர்களில் 1 விழுக்காட்டினருக்கும் குறைவாக மட்டுமே வேலை கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை பணியமர்த்த இருப்பதாக ஒன்றிய அரசு ஜூன் 14ம் தேதி அறிவித்தது. அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு நிலைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டதை … Read more

குரங்கு அம்மை நோய் | தடுப்பூசி கண்டுபிடிக்க விருப்பத்தை தெரிவிக்கலாம் – நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விரும்பும் நிறுவனங்கள் ஆகஸ்ட்10-ம் தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. எனினும் இப்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை 78 நாடுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் ஐரோப்பிய நாடுகளையும் 25 சதவீதம் … Read more

கேரளாவில் போதுமான பெட்ரோல் இல்லை என பைக் ஓட்டுனருக்கு அபராதம்: மென்பொருள் பிரச்சனையால் குளறுபடி என அதிகாரிகள் விளக்கம்

திருவனந்தபுரம்: மோட்டார் சைக்கிளில் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லை என்று கூறிய இளைஞருக்கு காவல்துறை அபராதம் விதித்துள்ள வினோத நிகழ்வு கேரளாவில் அரங்கேறியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியை அடுத்துள்ள பூக்காட்டுபள்ளியை சேர்ந்த பஷில்ஷியாம் என்ற இளைஞர், பணிக்கு தாமதமானதால் ஒருவழி பாதையில் தவறுதலாக சென்றுவிட்டார். அப்போது மோட்டார் சைக்கிளுடன் அவரை மடக்கி பிடித்த கொச்சி காவல்துறையினர், ரூ.250 அபராதம் விதித்தனர். அபராதத்தை கட்டிவிட்டு அவலுவலகத்திற்கு சென்ற ஷியாம் ஓய்வு நேரத்தில் ரசீதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அபராதத்திற்கான … Read more

'என்னிடம் இனி பேசாதீர்கள்' – ஸ்மிருதி இரானி மீது சோனியா காந்தி பாய்ச்சல்

மக்களவையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாஜக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் … Read more

குஜராத்தில் விஷ சாராய உயிரிழப்பு 40 ஆக உயர்வு

அகமதாபாத்: குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் ரோஜிட் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளச் சாராயம் குடித்த பலருக்கு மறுநாள் அதிகாலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மேலும் 7 பேர் இறந்ததால் விஷ சாராய உயிரிழப்பு 40 ஆக உயர்ந்தது. இதுதவிர சுமார் 50 பேர் போடாட், அகமதாபாத் மற்றும்பாவ்நகரில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் … Read more

ஜனாதிபதியை இப்படியா அழைப்பது? -காங்கிரஸ் எம்பியால் சோனியாவுக்கு சிக்கல்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாள்தோறும் அமலில் ஈடுபட்டு வருவதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டும் பெரும்பாலான நாட்கள் ஒத்திவைக்கப்பட்டே வருகின்றன. அத்துடன் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் மக்களவை சபாநாயகர ஓம் பிர்லா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இப்படி நாளொரு சர்ச்சை, … Read more

குடியரசு தலைவரின் மனம் புண்பட்டு இருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயார் : காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

புதுடெல்லி : குடியரசு தலைவரின் மனம் புண்பட்டு இருந்தால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க தயார் என்று மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் சவுத்ரி, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, ‘ராஷ்டிரபதி என்பதற்கு பதிலாக ராஷ்டிரபத்தினி’ என்று கூறினார். இது தனிப்பட்ட பெண்ணின் பாலினத்தை மிக பெரிய அளவில் விமர்சிக்கும் வார்த்தை என கூறி பாஜவினர், காங்கிரஸ் … Read more