இந்தியாவில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 15,447பேர் குணமடைந்தனர்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,36,69,850 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 15,447பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,30,11,874 ஆனது. நாடுமுழுவதும் தற்போது 1,32,457 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக கடந்த 24 மணணிநேரத்தில் … Read more

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம்: யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது என யுஜிசி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உயர்கல்வி சேர்க்கை என்பது அந்தந்த மாநில பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து … Read more

மத்திய அரசு and டெல்லி அரசுக்கு இடையே அதிகார போட்டி: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: டெல்லியில் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. டெல்லி யூனியன் பிரதேச அரசாக செயல்பட்ட போதிலும் நாட்டின் தலைநகர் என்பதால் நகரின்பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசின் பாதுகாப்புப் பிரிவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அதாவது நகரில் பாதுகாப்பு, பேரணி, அனுமதி அளித்தல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசு தன்னிடத்தில் வைத்துள்ளது. இதனால் டெல்லி போலீஸார் சுதந்திரமாக செயல்பட … Read more

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது: யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது:  என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு, உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

கேரளா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய படகு போட்டி

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற படகு போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செம்பங்குளம் பம்பா நதியில் துவங்கியது. கேரள மாநிலம் ஆலப்புழாவில், செம்பங்குளம் படகு பந்தயம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பம்பா நதியில் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த கேரளாவின் புகழ் பெற்ற நேரு கோப்பைக்கான படகு போட்டியை ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். இந்த படகு போட்டியில் 9 படகுகள் பங்கேற்கின்றன. செம்பகுளம்  படகு போட்டியில் வெற்றி … Read more

உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றிய விமர்சனம்: முன்னாள் உயர் அதிகாரிகள், நீதிபதிகள் குழு கண்டனம்

புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 63 பேர் குற்றமற்றவர்கள் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பொய் தகவல்கள் அளித்ததாகவும், ஆதாரங்களை திரட்டியதாகவும், தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை … Read more

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் விளம்பர விதிமுறை மீறல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி; கடும் சட்டம் கொண்டு வர பரிந்துரை

புதுடெல்லி: தமிழக உள்ளாட்சி தேர்தலில் சட்ட விதிமுறைகளை மீறி ஒரு சில கட்சிகள் விளம்பரங்களை பிரசுரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்தாண்டு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்  நடத்தப்பட்டது. அதே மாதம் 22ம் தேதி முடிவுகள் வெளியானதில், திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், எம்.எல்.ரவி தரப்பில் உச்ச … Read more

கருத்தடை சாதனங்களை அதிகம் பயன்படுத்துவது முஸ்லிம்கள்தான் – யோகிக்கு ஒவைசி பதிலடி

“கருத்தடை சாதனங்களை முஸ்லிம்கள்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்” என்று அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஒரு கருத்தை தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒவைசி இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை சார்பில் உலக மக்கள்தொகை தொடர்பான அனுமான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், 2023-ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு

மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 39 எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து உத்தவ் பதவி விலகினார். பின்னர் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார். சிவசேனாவுக்கு 19 மக்களவை எம்.பி.க்களும் 3 மாநிலங்களவை எம்.பி.க்களும் உள்ளனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் … Read more

இந்திய ராணுவ அதிகாரிகளின் தகவல்களை திருட பாகிஸ்தான் திட்டம் – உளவுத்துறை தகவல்

வாட்ஸ் அப் மால்வேர் தாக்குதல் மூலம் இந்திய ராணுவ அதிகாரிகளின் தகவல்களை திருட பாகிஸ்தான் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்தேகத்திற்குரிய எண்ணில் இருந்து ராணுவ அதிகாரிகளின் வாட்ஸ் அப் செயலிக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பக்க கோரி லிங்க் அனுப்பபடுவதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வாட்ஸ் அப்பில் பகிரப்படும் லிங்கை அதிகாரிகள் தொட்டதும் ஜெர்மனி நியூரம்பெர்க்கில் உள்ள சர்வரில் இணைவதாகவும், அதன் மூலம் ராணுவ … Read more