நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கு: 11 குற்றவாளிகளையும் விடுதலை செய்தது குஜராத் அரசு

காந்தி நகர்: 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானோ என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. பில்கிஸ் பானோ கூட்டுப் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் ஒருவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் … Read more

காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா..! – ராஜஸ்தான் தலித் சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம்..!!

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீண்டாமைகள் பல வகைகளில் இருந்து வருகிறது. இதில் சாதிய தீண்டாமை பெரும் பங்கு வகித்து வருகிறது. ஏற்றத்தாழ்வுகள் என்பது மக்களிடம் பழக்கமான ஒன்றாகிவிட்டது. இது கல்வி நிறுவனங்களில் இருப்பது தான் பெரும் அதிர்ச்சியானது. இந்நிலையில் பள்ளிக்கூடத்தில் பொது குடத்தில் தண்ணீர் எடுத்து குடித்தற்காக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவராலயே ஒன்பது வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் … Read more

10 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினமான நேற்று (திங்கள்) ஆகிய 3 நாட்கள் அதிகளவு பக்தர்கள் திரண்டனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் காணப்பட்டனர். இதனால் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இவ்வாறு காத்திருந்த பக்தர்கள் சுமார் 40 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.இந்நிலையில் நேற்று 87,692 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 36,832 பக்தர்கள் தலைமுடிகாணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹5.30 … Read more

பீகாரில் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு – யார், யாருக்கு எந்தெந்த துறை?

பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை முறித்துக் கொண்டு, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் சென்ற வாரம் பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, திங்கட்கிழமை புதிய அரசின் 31 அமைச்சர்கள் பதவியேற்றனர். முன்னாள் பீகார் முதல்வர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட 16 ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி அமைச்சர்கள் … Read more

பாஜக ஆட்சி எப்படி? – கர்நாடக அமைச்சர் ஆடியோவால் சர்ச்சை

பெங்களூரு: பாஜக ஆட்சி எப்படி நடக்கிறது என்பது குறித்து ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரே பேசிய ஆடியோ அம்பலமாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கர்நாடக மாநில சட்டத் துறை அமைச்சராக இருப்பவர் ஜேசி மதுசுவாமி. இவரும் சமூக ஆர்வலர் பாஸ்கர் என்பவரும் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று கசிந்துள்ளது. அவர்கள் உரையாடலில் கர்நாடகாவில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒருகட்டத்தில் அமைச்சர் மதுசுவாமி, “கர்நாடக அரசு செயல்படவில்லை. கட்சி முழுக்க முழுக்க 2023 வரை … Read more

'அரசை நாங்க நடத்தல; மேனேஜ் தான் பண்றோம்!' – புயலை கிளப்பிய அமைச்சர் ஆடியோ!

“அரசை நாங்கள் நடத்தவில்லை; நிர்வகிக்க மட்டுமே செய்கிறோம்” என, கர்நாடக மாநில அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பி.எஸ்.எடியூரப்பாவுக்கு பிறகு முதலமைச்சராக பதவி ஏற்ற பசவராஜ் பொம்மை மீது, அதிருப்தி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், பசவராஜ் பொம்மை முதலமைச்சரான பிறகு, மாநிலத்தில், வகுப்புவாத கலவரம் உள்ளிட்ட பிரச்னைகள் தலைதூக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது, … Read more

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் இருந்து 513 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள அங்க்லேஷ்வர் என்ற இடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் இருந்து 513 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றினார்கள். மூட்டை, மூட்டையாக கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 1026 கோடி ரூபாயாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக ஒரு பெண் உள்பட 7 பேரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.   Source link

தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

டெல்லி: தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக மனு அளித்துள்ளது. இலவசங்கள் தொடர்பான வழக்கில் திமுக தங்களையும் சேர்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையிட்டு மனு அளித்துள்ளது. அரசியல் காட்சிகள் இலவச திட்டங்களை எதிர்த்து வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான அஸ்வினி குமார் உபாத்தியாய மனு அளித்தனர்.

குஜராத் கூட்டு பலாத்கார வழக்கில் விடுதலையான குற்றவாளிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு!

குஜராத் கலவரத்தின் போது கர்ப்பிணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு மிகப்பெரிய கலவரம் மூண்டது. அப்போது ரன்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு (21) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று … Read more

பலருக்கு முன்னோடியாக விளங்குகிறார் பிரதமர் மோடி – சந்திரபாபு நாயுடு புகழாரம்

குண்டூர்: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி குண்டூரில் உள்ள தெலுங்கு தேசம் தலைமை அலுவலகத்தில் நேற்று தேசியக் கொடி எற்றி மரியாதை செலுத்தினார் சந்திரபாபு நாயுடு. அப்போது அவர் பேசியதாவது: ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நம் நாட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. நம் மக்கள் ஏழ்மை, கொடுமைகளுக்கு இடையே பெரும் போராட்டம் செய்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்துள்ளனர். இதனை என்றும் நாம் மறக்க கூடாது. நேரு, நரசிம்ம ராவ், வாஜ்பாய் போன்றோர் நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள். … Read more