ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே – லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!

மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து நேற்று ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிசும் ஏக்நாத் ஷிண்டேவும் ஆளுநர் கோஷ்யாரியிடம் உரிமை கோரினர். ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்பு ஊட்டினார் ஆளுநர் கோஷியாரி. தங்களுக்கு தான் பெரும்பான்மை பலம் இருப்பதாக இருவரும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். … Read more

கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

கேரள மாநிலம் மலப்புறத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதும் சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்குள்ள ஆசாத் நகர் என்னுமிடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மினி லாரி வேகமாக மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயமடைந்தார். தற்போது அவருக்கு திருவங்காடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   Source link

கேரளாவில் மீண்டும் ஆந்த்ராக்ஸ்; கொத்து கொத்தாக காட்டுப் பன்றிகள் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆதிரப்பள்ளி வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் பரவி காட்டுப் பன்றிகள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கேரள  மாநிலம், திருச்சூர் அருகே உள்ள ஆதிரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள  நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தமிழ், தெலுங்கு, மலையாளம்,  இந்தி உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் இந்த நீர்வீழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இங்குள்ள வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு ஏராளமான  காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறந்து விழுந்தன. … Read more

பங்குச்சந்தை சரிவு! ஜூன் மாதத்தில் ரூ.14 லட்சம் கோடி இழப்பு! என்ன காரணம்?

ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் சுமார் 2300 புள்ளிகள் வரை சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஜூன் 30-ம் தேதி முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.14 லட்சம் கோடி குறைந்து 243 கோடி ரூபாயாக இருக்கிறது. சென்செக்ஸ் 52 வார குறைந்தபட்ச புள்ளியை இந்த மாதத்தில் தொட்டது. ஏப்ரல் மே மற்றும் ஜுன் காலாண்டில் … Read more

EXCLUSIVE: யார் இந்த ஏக்நாத் ஷிண்டே? – ஆட்டோ டிரைவர் முதல் முதல்வர் வரை..!

மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே குறித்த சுவாரசிய தகவல்களை தற்போது காண்போம். 288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக – சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. எனினும், முதலமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என, சிவசேனா கட்சி பிடிவாதம் பிடித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக, முதலமைச்சர் பதவியை எல்லாம் … Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு விவரங்களின் மையங்கள் வெளியீடு

புதுடெல்லி: நீட் தோ்வு மையங்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தகுதி தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் ஜூலை 17ம் … Read more

தொழில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்திய டாப் 7 மாநிலங்கள்! முதலிடத்தில் தமிழ்நாடு

தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மை மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு இடம் கிடைத்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், அரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்கள் முதன்மை மாநிலங்களாக திகழ்கின்றன. தொழில் சீர்திருத்த செயல்திட்ட அடிப்படையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் வெளியிட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட இந்த பட்டியலில் … Read more

டீ விலை ரூ.20 + சேவை கட்டணம் ரூ.50: மொத்தம் ரூ.70 செலுத்திய ரயில் பயணி | விளக்கம் கொடுத்த ரயில்வே

போபால்: சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 70 ரூபாய் செலுத்தி தேநீர் பருகி உள்ளார். அதற்கான ரசீதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி தேநீர் பிரியர்களுக்கு கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். அதற்கான காரணம் என்ன என இந்திய ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 28-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பயணி டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். காலை நேரம் எனபதால் கொஞ்சம் களைப்பாக … Read more

மூன்று செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 53 ராக்கெட்

சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.-சி53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மாலை 6 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது. வணிக ரீதியாக ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.- சி53 மூலம் தெளிவான வண்ணப் படங்களை எடுக்கும் திறன்கொண்ட டி.எஸ். – இ.ஓ. செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதனுடன் அனைத்து வானிலை சூழலிலும் புவியை துல்லியமாக படம் எடுக்கும் ‘நியூசர்’ மற்றும் கல்விப் பணிக்காக நன்யாங் பல்கலைக்கழக மாணவர்கள் … Read more

ஆந்திராவில் இன்று காலை சோகம்; ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளர்கள் உள்பட 8 பேர் பலி

திருமலை: ஆந்திராவில் இன்று காலை உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் லோடு ஆட்டோவில் சென்ற தொழிலாளர்கள் உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் குன்றம்பள்ளி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தினசரி மற்ற கிராமங்களுக்கு சென்று நாற்று நடவுப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஷேர் ஆட்டோக்களில் சென்றுவருவது வழக்கம். அதன்படி இன்று காலை 6.30 மணியளவில் … Read more