ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை! ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்! 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடியில் பயின்று வரும் மாணவி உட்பட 8 கல்லூரி மாணவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து ஜார்க்கண்டில் உள்ள குந்தி மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் துணை வளர்ச்சி ஆணையர் இல்லத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டனர். விருந்தில் மாணவி தனியாக இருந்ததை சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டான … Read more

தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கு; இந்தி நடிகருக்கு 2 ஆண்டு சிறை.! லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு

லக்னோ: தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில் பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு லக்னோ நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தி திரைப்பட பாலிவுட் நடிகரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜ் பப்பர், 1996ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலின் போது தேர்தல் அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வஜிர்கஞ்ச் காவல் நிலைய போலீசார் ராஜ் பப்பர் மீது வழக்குபதிவு செய்தனர். அப்போது நடந்த தேர்தலின் போது சமாஜ்வாதி கட்சி சார்பில் … Read more

சட்டையின் மீது தண்ணீரை கொப்பளித்து… இஸ்திரிகாரரின் அலம்பல் வீடியோ வைரல்

இஸ்திரி கடைக்காரர் ஒருவர் சட்டைத் துணிகளின் மீது தண்ணீரை கொப்பளித்து அயர்ன் பண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட் ஃபோனும், சமூக வலைதளங்களின் பயன்பாடும் மக்கள் மத்தியில் அதிகரித்ததை அடுத்து, மனிதர்கள் செய்யும் வினோதமான செயல்களையும், ஆச்சரியப்படும்படியான நடவடிக்கைகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்படியெல்லாம் யாராவது செய்வார்களா என்று நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சில வீடியோக்கள் அவ்வப்போது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அந்த ரகத்திலான வீடியோ தான், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி … Read more

கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக தொடங்குவதற்கு மக்களின் பங்களிப்பு முக்கியம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

புது டெல்லி: வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமூக அமைப்புகளையும் ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களை தொடங்குமாறு தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது. சுற்றுப்புறங்களில் கொசு இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நமது சொந்த வீடுகள் மற்றும் சமூகங்களுடன் தொடங்குவோம் என கொசு மூலம் பரவும் … Read more

விவோ நிறுவனம் தொடர்புடைய 119 வங்கிக் கணக்குகளை முடக்கியது அமலாக்கத்துறை..!

விவோ நிறுவனம் தொடர்புடைய 119 களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் மீது பணப்பரிவர்த்தனை முறைகேடு புகார் எழுந்ததையடுத்து அந்நிறுவனத்தின் 44 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிறுவனத்தின் இரண்டு முக்கிய சீன நிர்வாகிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, இந்தியாவில் விவோ நிறுவனத்தின் 23 துணை நிறுவனங்கள் செயல்படுவதாகவும் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு … Read more

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்; தேசிய பங்குச்சந்தை மாஜி சிஇஓ மாஜி போலீஸ் கமிஷனர் மீது வழக்கு: 10 இடங்களில் சிபிஐ ரெய்டு

மும்பை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா, முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ)  சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ குழும செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன்  ஆகியோர் பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பங்குச் சந்தை தகவல்களை கசியவிட்ட … Read more

செல்போன் இறக்குமதி 33% சரிவு! சீனாவை நம்பியிருக்கும் நிலை குறைந்துள்ளது! காரணம் என்ன?

செல்போன்கள் தயாரிப்பிற்கு பயன்படும் சிப்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலிலும் உற்பத்தி அதிகரித்துள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பால் மொபைல் போன்கள் இறக்குமதி 33 விழுக்காடு சரிந்துள்ளதாக கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்னணு சாதங்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. செல்போன்கள் தயாரிப்பிற்கு பயன்படும் செமி கண்டக்டர் சிப்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலிலும் செல்போன்கள் உற்பத்தி உள்நாட்டில் அதிகரித்துள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது. இதனால், 2021-22ஆம் நிதியாண்டில் உள்நாட்டில் செல்போன்கள் உற்பத்தி 26 விழுக்காடு … Read more

அமர்நாத் யாத்திரையின்போது ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்..!

காஷ்மீர்: அமர்நாத் புனித யாத்திரை நடைபெற்று வரும் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். அமர்நாத் யாத்திரை என்பது இமயமலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள சிவன்  கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் யாத்திரையாகும். கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இதனிடையே இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. … Read more

'காளியை வழிபடுவது குறித்து பாஜக எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்' – மஹுவா மொய்த்ரா பதிலடி

“காளியை வழிபடுவது குறித்து வங்க மக்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்” என்று பாஜகவுக்கு திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மஹுவா மொய்த்ரா அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “என்னை பொறுத்தவரை காளி மாமிசம் உண்ணும், மது அருந்தும் தெய்வம்” எனக் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். … Read more

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

புதுடெல்லி: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக தேசிய கொடி பறக்கும் அனைத்து கட்டிடங்களிலும் நாளை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நாளை நடைபெறாது. முன்னதாக, ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறும் நிலையில், … Read more