வரும் 26,27ம் தேதிகளில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க மோடி ஜெர்மனி பயணம்: நபிகள் சர்ச்சைக்கு இடையே அமீரகமும் செல்கிறார்

புதுடெல்லி: வரும் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனியில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்கிறார். நபிகள் நாயகம் சர்ச்சைக்கு இடையே 28ம் தேதி அமீரகத்துக்கும் அவர் செல்கிறார். 48வது ஜி-7 மாநாடு வரும் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று மோடி ஜெர்மனி செல்ல உள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று … Read more

மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ அலுவலகம் மீது சிவசேனா கட்சி தொண்டர்கள் தாக்குதல்.!

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ சுரேஷ் கடேவின் அலுவலகம் மீது சிவசேனா கட்சி தொண்டர்கள், கற்கள் மற்றும் தர்பூசணி பழங்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அம்மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு, சுரேஷ் கடே காரணம் எனக்கூறி, அவரது அலுவலகத்தை சிவசேனா கட்சி தொண்டர்கள் தாக்கியுள்ளனர். Source link

ரூ.34,615 கோடி கடன் மோசடி டிஎச்எப்எல் முன்னாள் சிஇஓ, இயக்குநர் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: யூனியன் வங்கியில் ரூ.34,615 கோடி பெற்று கடன் மோசடியில் செய்த வழக்கில் டிஎச்எப்எல் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி, இயக்குநர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்பரேஷன் லிமிடெட் (டிஎச்எப்எல்) நிறுவனத்துக்கு யெஸ் வங்கி ரூ.3,000 கோடி கடன் வழங்கியது. இதற்கு கைமாறாக, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், அவரது மனைவி, 3 மகள்கள் வங்கி கணக்குகளில் ரூ.600 கோடி பணம் செலுத்தப்பட்டது.இது … Read more

சாகசம் செய்ய முயன்ற கன்னட நடிகர் திகாந்த் தவறி விழுந்து பலத்த அடி.. மருத்துவமனையில் அனுமதி.!

கோவாவில் சாகசம் செய்ய முயன்ற கன்னட நடிகர் திகாந்த் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அலைச்சறுக்கு, நீச்சல், மலையேற்றம் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட திகாந்த், விடுமுறையைக் கொண்டாட தனது மனைவியுடன் கோவா சென்றார். அவரது வழக்கமான பேக் ப்ளிப்  சாகசத்தை செய்ய முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த அவரது முதுகுத் தண்டு மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  Source link

கனமழையால் கரை புரளும் ஆறுகள் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் பறி போனது

உதம்பூர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு, பல இடங்களில் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தின் காரணமாக ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. உதம்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 150 அடி தூர சாலை அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனிடையே, ரம்பன்- உதம்பூர் மாவட்டங்களில் 270 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையில் சுமார் … Read more

கணவர், மகன்களுக்கு தெரியாமல் இரவில் படிப்பு.. 10ம் வகுப்பில் 53 வயது பெண் அசத்தல்!

குடும்ப சூழ்நிலையால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய பெண்,  53 வயதை கடந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 53 வயதான பெண்ணான கல்பனா அச்யுத் என்பவர் 10ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதி 79.6 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது 16வது வயதில் தந்தை இறந்துபோனதன் காரணமாக அச்சமயத்தில் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கல்பனா அச்யுத் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினார். அதன்பின் திருமணம், குழந்தைகள், … Read more

இசை குழுவுக்கு கட்டணம் கொடுப்பது யார்?…மணமகன் ஓட்டத்தால் திருமணம் நின்றுபோனது

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தையே நிறுத்தினார். உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த தர்மேந்திரா என்பவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக பரூக்காபாத்தில் இருந்து மிர்சாபூருக்கு பேண்ட் வாத்தியங்களை தர்மேந்திரா அழைத்து வந்தார். திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணமகன் தரப்பினரிடம் இசைக்குழுவினர் பணம் கேட்டனர். ஆனால் மணமகள் தரப்பினர்தான் பணம் கொடுக்க வேண்டும் என்று … Read more

கர்நாடகா: நண்பர் வீட்டு மெகந்தி விழாவில் நடமாடிய நபர் மாரடைப்பால் உயிரிழப்பு

உடுப்பியில் உள்ள அம்பாகிலுவில் நேற்றிரவு மெஹந்தி விழாவில் நடனமாடிய நபர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் அம்பாகிலு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி ஆச்சார்யா (56). இவர், தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கிற்காக வசூல் செய்யும் பணி செய்துவந்தார், இந்த நிலையில் நேற்றிரவு இவர், தன் நண்பர் வீட்டு மெஹந்தி விழாவிற்குச் சென்றிருந்தார். அப்போது இரவு உணவு முடிந்து அங்கு நடனமாடிக் கொண்டிருந்தவர்களோடு இணைந்து கணபதி ஆச்சாரியாவும் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது கணபதி ஆச்சாரியா … Read more

சிவசேனாவுக்கு வந்த சோதனை.. தப்புமா உத்தவ் தாக்கரே அரசு?

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் 40 பேர் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் விரும்பினால் பதவி விலக தயார் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் 2019 ஆம் ஆண்டு முதல் சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார். பாஜக … Read more

சீனாவில் நாளை ‘பிரிக்ஸ்’ மாநாடு: பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்பு

புதுடெல்லி: சீன அதிபர் ஜின்பிங் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தாண்டு சீனா தலைமையில் 14வது பிரிக்ஸ் மாநாடு நாளை (23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். … Read more