சோதனைகளை சாதனையாக்கிய குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு – முழு பின்னணி!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மு யார், அவரது பின்னணி என்ன என்பது குறித்து இங்கு காணலாம். 1958-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைடாபோசி என்ற கிராமத்தில் பிறந்தவர் திரெளபதி முர்மு. இவர் ‘சந்தல்’ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி கல்லூரியில் பட்டப்படிப்புகளை முடித்தார். இதையடுத்து, ஸ்ரீ அரவிந்தர் கல்வி மையத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றினார். … Read more

வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்..!!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் … Read more

தேர்வு முடிவுகள்.. 5 மாணவர்கள் தற்கொலை.. மனநல டாக்டர் கூறுவது என்ன..?

தமிழகத்தில் நேற்று வெளியான 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாணவிகள், 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், 5 மாணவ – மாணவியர் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இப்படிப்பட்ட விபரீத முடிவுக்கு வருவதற்கு என்ன காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘முன்பெல்லாம் மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு குறைவாக இருந்தது. தற்போது, ஆன்லைன் வகுப்புகளுக்காக ஒவ்வொரு மாணவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். வகுப்பு … Read more

அக்னி வீரர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து

புதுடெல்லி: அக்னி வீரர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: போர் சூழல் என்பது முழுமையாக மாறிவிட்டது. நேருக்கு நேர் போரிடும் சூழல் மாறி கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருந்து போர் நடைபெறுகிறது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் நடைபெறுகிறது. இன்றைய போரில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. காலத்துக்கு ஏற்ப இந்தியாவும் மாற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக … Read more

பிரதமர் மோடிக்கு அக்னிபாதை திட்டம் குறித்து தெளிவான கண்ணோட்டம் உள்ளது -அஜித் தோவல்

அக்னிபாதை திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தெளிவான கண்ணோட்டம் இருப்பதாகவும் அவரால் திடமான முடிவெடுக்க முடியும் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். ராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் ராணுவத்தை இளமையாக வைத்திருக்கவும் அக்னிபாதை திட்டம் உதவும் என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் தோவல் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார். Source link

கொரோனாவுக்கு உலக அளவில் 6,343,278 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.43 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,343,278 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 545,639,410 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 520,697,282 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,154 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இனி ஈசிதான்.. நாள்தோறும் வேலைகளை எளிதாக்க உதவும் 5 ஆப்கள் !!

நம்முடைய ஒவ்வொருவரிடமும் குறைவான நேரம், பல வேலைகளை செய்வதற்கு. இதனால் அந்த வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் செய்தால் எவ்வித கஷ்டமும் இன்றி குறித்த நேரத்தில் செய்திட முடியும். இதற்கு முக்கிய கருவியாக இருப்பது செல்போனும் அதில் இருக்கும் ஆப்களும் தான். குறிப்பாக ஒவ்வொரு நாளும் 4-5 மணிநேரம் மொபைல் போன்களில் செலவிடுவதால், சரியான ஆப்ஸைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. அவ்வாறு நாம் நம்பும் வகையிலும் எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் ஆப்களை இங்கே விளக்கப்படுகிறது. இது பயனர்களுக்கு பல்வேறு … Read more

இந்த மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,366 ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியே செல்லும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் கீர்த்தி உத்தரவட்டுள்ளார். அதன்படி, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு கட்டாயம் அபாராதம் விதிக்கப்படும் என்றும் பொது … Read more

ஆந்திராவில் 55 வயதில் அரசு ஆசிரியர் ஆன பிச்சைக்காரர்

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பழையபட்டினம் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால், அந்த ஆண்டு தேர்வு ஆனவர்கள் யாரும் அரசு ஆசிரியர் ஆக முடியவில்லை. இவ்வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, கேதாரேஸ்வர் ராவ் சைக்கிளில் ஊர் ஊராக சென்று துணிகளை விற்க தொடங்கினார். ஏழ்மை இவரை வாட்டியது. இவர் அணிய … Read more

நக்சல்கள் தாக்குதல் சிஆர்பிஎப் வீரர்கள் 3 பேர் வீர மரணம்

புதுடெல்லி: ஒடிசாவில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 3 சிஆர்பிஎப் படையினர் வீர மரணம் அடைந்தனர். ஒடிசா மாநிலத்தின் நுவாபடா மாவட்டத்தில் பெடான் பகுதியில் உள்ள முகாமில் இருந்து 7 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றொரு முகாமிற்கு நேற்று புறப்பட்டு சென்றனர். இத்தகவல் கிடைத்து பதாதரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்கள், வீரர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர், 2 துணை உதவி ஆய்வாளர்கள் என 3 பேர் வீர மரணமடைந்தனர். ஒடிசா டிஜிபி … Read more