தமிழ்நாடு, ஆந்திராவில் ஆட்சிக்கு வருவது பற்றி பாஜக செயற்குழுவில் ஆலோசனை – ஹைதராபாத் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஒட்டலில் தொடங்கிய இக்கூட்டத்துக்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமை வகித்தார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி மற்றும் யோகி ஆதித்யநாத், பசவராஜ் பொம்மை உட்பட பாஜக ஆளும் மாநிலங்களைச் … Read more

காற்றில் கலந்து வரும் காலன் மண்ணை தொட்டதும் மரணம்: பிறந்த 30 நாளில் ஒரு லட்சம் குழந்தைகள் பலி; ஆண்டுக்கு ஆண்டு குறையும் இந்தியர்கள் ஆயுள்

ஒரு காலத்தில் அனைத்து இடங்களிலும் குடிநீர் இலவசமாக கிடைத்தது. காலப்போக்கில், வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகரங்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, கிராமங்களிலும் கூட பணம் கொடுத்து குடிநீரை மக்கள் வாங்கி வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால், ‘தூய காற்றை’ விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நிலைமை என்னவாகும்? தற்போது அந்த நிலையை நோக்கி பல நகரங்கள் … Read more

முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு

இம்பால்: மணிப்பூரில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களான நிலையில், மண்ணில் புதைந்த 80 பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று இம்மாநில முதல்வர் பைரன் சிங் வேதனை தெரிவித்துள்ளனர். நேற்று வரையில் 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 18 பேர் ராணுவ வீரர்கள். மணிப்பூரில் ேநானி மாவட்டத்தில் துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள பகுதி என்பதால், இவர்களுக்கு … Read more

‘நான்கு முறையும் ஆஜராகவில்லை’ – நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த கொல்கத்தா போலீஸ்

கொல்கத்தா: இறைதூதர் முகமது நபிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது மேற்குவங்க காவல்துறை. டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் … Read more

வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்

புதுடெல்லி: வெளிநாட்டில் வசிப்பவர்கள், இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரையிலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பணம் அனுப்ப அனுமதிக்கும் வெளிநாட்டு நன்கொடை  ஒழுங்குமுறை சட்ட (எப்சிஆர்ஏ) திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள புதிய விதிகள் குறித்த அரசாணையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: * வெளிநாட்டு நன்கொடை விதிகள் 2011, விதி 6ன்படி, வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு … Read more

ஐதராபாத்தில் பிரமாண்ட ஏற்பாடு கரீப் கல்யாண் திட்டம் பாஜ செயற்குழு தீர்மானம்: பேரணியில் இன்று மோடி பேச்சு

ஐதராபாத்: ஐதராபாத்தில் நேற்று நடந்த பாஜ தேசிய செயற்குழு கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை ஆதரித்தும், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாஜ கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. தற்போது பாஜ கட்சி தென் மாநிலங்கள் மீது குறி வைத்துள்ள நிலையில், இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஐதராபாத் முழுவதும் முக்கிய இடங்களில் பாஜ கட்சி மற்றும் பிரமதர் மோடி குறித்த கட் … Read more

திரவுபதி முர்மு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. ‘கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை நிறுத்துவது நல்லது’ – மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திரவுபதி முர்மு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு பெயரை அறிவிப்பதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசனை நடத்தி இருந்தால், அவரை ஆதரிப்பது பற்றி பரிசீலித்து இருப்போம் என கூறினார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முன்னிறுத்தப்பட்ட நிலையில், மம்தாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

இந்தியாவில் மதரீதியான நிகழ்வுகள் கவலை அளிக்கின்றன.. அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை அவசியம் : அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: இந்தியாவில் மதரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் ரஷாத் உசேன் தெரிவித்துள்ளார். சர்வதேச மத சுதந்திர மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவில் உள்ள ஏராளமான மத குழுக்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்வதாக கூறியுள்ளார். இந்தியாவில் குடியிரிமைச் சட்டம், ஹிஜாப் தடை, வீடுகள் இடிப்பு என மன ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ரஷாத் உசேன் தெரிவித்துள்ளார். வங்கதேச இஸ்லாமியர்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை சுட்டிக் … Read more

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வானங்கள் மீது கற்கள் வீச்சு.!

மத்தியபிரதேச மாநிலம் கார்வால் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் வானங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. அங்கு மூன்று கட்ட தேர்தல் பணிகள் முடிவடைந்து போலீசார் திரும்பிக்கொண்டிருந்த போது, ஒருதரப்பினர் பட்டாசு வெடித்ததாகவும், மற்றொரு தரப்பினர் தோல்வி பயத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். Source link

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கம் : உத்தவ் தாக்கரே அதிரடி

மும்பை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 39 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் பெரும்பான்மை பலத்தை இழந்ததால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்து, மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிசும் நேற்று … Read more