முப்படை தலைமை தளபதி பணி நியமன விதியில் திருத்தம்: 62-க்கு குறைவாக இருக்கவேண்டும் என அறிவிப்பு

டெல்லி: முப்படை தலைமை தளபதி நியமன விதிகளில் ஒன்றிய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், வளங்களை முறையாக பயன்படுத்தும் வழிமுறைகளை வகுக்கவும் முப்படை தலைமை தளபதி பதவியை ஒன்றிய அரசு உருவாக்கியது. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில்  உயிரிழந்தார். அதன்பிறகு, முப்படை தலைமை தளபதி காலியாக இருந்தது. இந்நிலையில் … Read more

"ராசிமணல் பகுதியில் எந்தத் திட்டத்தையும் முன்னெடுக்கும் யோசனை இல்லை”- தமிழக அரசு

ராசிமணல் பகுதியில் எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுக்கும் யோசனை இல்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் புதிய அணை அமைக்க கோரி யானை ராஜேந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசு, கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இதில் மனுதாரரான யானை ராஜேந்திரனுக்கு தமிழக அரசு தரப்பிலிருந்து தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் … Read more

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிக்க கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிக்கக்கூடாது என‌ உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வரும் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மேகேதாட்டு அணையின் திட்ட வரைவு அறிக்கை … Read more

பைக்கில் 3 பேர் பயணம் : தடுத்து நிறுத்திய போலீசாரை நண்பருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய பெண்கள்

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததால் தடுத்து நிறுத்திய போலீசாரை இரு இளம் பெண்களும் அவர்களது நண்பரும் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் அவர்கள் பயணம் செய்ததுடன், தவறான பாதையில் சென்றுள்ளனர். இதனால் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை சரமாரியாக தாக்கினர்.  Source link

நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு: ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லி: நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பேட்டியளித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

உ.பி: நொய்டா `ட்வின் டவர்’ கட்டடத்தை முழுமையாக இடிக்கும் பணி முடிவடையும் தேதி அறிவிப்பு!

நொய்டாவில் உரிய அங்கீகாரமின்றி கட்டப்பட்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பு வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர் டெக் லிமிடெட் நிறுவனம் சார்பில் தலா 40 மாடிகளைக் கொண்ட 2 குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தது. இது கடுமையான விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது எனக்கூறி மனுவொன்று தொடரப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், `கட்டடங்களை முழுமையாக இடிக்கவும்’ என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கில் முழு … Read more

காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.126 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: காவல் துறையை நவீனப்படுத்தவும், போலீஸ் நிலையங்கள் அமைத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.126.7 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள போலீஸ் படைகளை நவீனப்படுத்துவதற்காகவும், புதிதாக போலீஸ் நிலையங்கள் அமைத்தல், போலீஸ் நிலையங்களை மேம்படுத்துதல், காவல் துறையினர் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துதல் போன்றவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு ரூ.22.59 கோடியும், ஜார்க்கண்டுக்கு ரூ.2.63 கோடியும், ஒடிசாவுக்கு … Read more

நெல் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 100 ரூபாய் உயர்வு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் குவிண்டாலுக்கு நூறு ரூபாய் உயர்த்தி 2060 ரூபாயாக நிர்ணயித்ததற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார். அப்போது உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு இருக்கும் வகையில் 14  வகை விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 2022 – 2023 காரிப் பருவத்தில் முதல்தர நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் குவிண்டாலுக்கு 1960 … Read more

உ.பி.யில் பப்ஜி விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம்.. பெற்ற தாயை சுட்டுக்கொன்ற 16 வயது சிறுவன்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ப‌ப்ஜி விளையாடுவதை கண்டித்த‌தால், பெற்ற தாயை 16 வயது சிறுவன் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் எல்சிடோ குடியிருப்பை சேர்ந்தவர் சாதனா. இவரது 16 வயது மகன் ப‌ப்ஜி விளையாட்டுக்கு அடிமையானதால், கடந்த ஞாயிறு அன்று கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையின் துப்பாக்கியால் சாதனாவை சுட்டு கொன்றுவிட்டு, உடலை ஏசி அறையில் வைத்துள்ளார். துர்நாற்றம் வீசாமல் இருக்க ரூம் பிரஷ்னரையும் அடித்துள்ளார். இதையறிந்த 10 வயது தங்கையை … Read more

பீகார்: ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி!அதிர வைக்கும் பின்னணி!

பீகாரில் ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சம்பரன் மாவட்டத்தின் பெட்டியாவில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் கூக்குரல் கேட்டு மக்கள் அளித்த தகவலில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பேருந்தில் ஆய்வு செய்தனர். அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி அரை மயக்கத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக பேருந்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், பேருந்து ஓட்டுநர், உதவியாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் … Read more