பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய நியமிக்கப்பட்ட 25 குழுவில் 17 குழுக்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்? வழிகாட்டுதல் குழு தலைவர் கருத்து கூற மறுப்பு

புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ், பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், முதன்முறையாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஐந்தாவது முறையாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட இஸ்ரோ முன்னாள் தலைவர்  கஸ்தூரிரங்கன் தலைமையிலான 12 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் தலைமையில் தேசியக் கல்விக் கொள்கைக்கான பாடத்திட்ட திருத்தம் நடைபெறுகிறது. … Read more

மாயமான சட்டமன்ற உறுப்பினர்கள்.. தடுமாறும் தாக்கரே அரசு.. சிவசேனா கட்சியில் வீசிய புயல்!

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது இல்லத்தில் செவ்வாய்கிழமை சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியபோது அதில் 20க்கும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்களே கலந்து கொண்டார்கள் என்கிற அதிர்ச்சி தகவலால் மும்பை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சிக்கு 55 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், கட்சி தலைமைக்கு பாதி உறுப்பினர்களின் ஆதரவுகூட இல்லாத நிலையில், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நிலைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.  சிவசேனா கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிருப்தி … Read more

கியான்வாபியில் கள ஆய்விற்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல்: வாரணாசியிலிருந்து பரேலிக்கு மாற்றல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாரணாசியின் கியான்வாபி மசூதியில் கள ஆய்விற்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி ரவிகுமார் திவாகருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால், அவர் வாரணாசி சிவில் நீதிமன்றத்திலிருந்து பரேலிக்கு மாற்றல் செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து உபியின் பல்வேறு நீதிமன்றங்களின் 610 நீதிபதிகளுக்கும் மாற்றல் உத்தரவு வெளியாகி உள்ளது. இவர்களில், மாவட்டக் கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிபதிகள் 285, மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் 121 மற்றும் இளநிலை நீதிபதிகள் 213 பேரும் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் … Read more

international yoga day:யோகாசனம் செய்து அசத்திய முதல்வர்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி டெல்லி அரசு சார்பில் இன்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தியாராஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பொது மக்கள் பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது: யோகா பயிற்சி செய்யும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தினால், அதனை அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கப்பார்கள். குழந்தைக்கு யோகா கற்பிப்பது … Read more

வரி உயர்த்தப்பட்டதால் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி 40 சதவீதம் வரை குறையும் என கணிப்பு

வரி உயர்த்தப்பட்டதால் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி நடப்பாண்டு 40 சதவீதம் வரை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நிறைவுசெய்யப்பட்ட இரும்பு பொருட்களுக்கான ஏற்றுமதி வரி 15 சதவீதம் விதிக்கப்பட்டதால் கடந்த நிதியாண்டில் 18.3 மில்லியன் டன்னாக இருந்த இரும்பு ஏற்றுமதி தற்போது 10 முதல் 12 மில்லியன் டன்னாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரும்பு தாது மீதான வரி 50 சதவீதமாகவும், துகள்கள் மீதான வரி 45 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டதால் கடந்த ஆண்டு 26 மெட்ரிக் டன்னாக … Read more

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் திரிணாமுல் கட்சியில் இருந்து இன்று காலை யஷ்வந்த் சின்ஹா விலகினார். ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இன்று இரு தரப்பிலும் குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்க தாமதம் ஏற்பட்டது. இதற்காக ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக … Read more

நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? – கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி

இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள ஒரே வெளிநாடாக, நேபாளம் உள்ளது. இந்திய ராணுவத்தில் கூர்க்கா ரெஜிமென்ட்ஸ் என்ற படைப் பிரிவுகள் உள்ளன. அதில் 35 பட்டாலியன்கள் உள்ளன. இவற்றில் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் பணியமர்த்தப்படுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இந்தியா, பிரிட்டன் மற்றும் நேபாளம் இடையே ஒரு ராணுவ ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நேபாள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கூர்க்கா ரெஜிமென்ட்ஸ் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்திய ராணுவத்தில், 7 கூர்க்கா ரெஜிமென்ட்ஸ்கள் உள்ளன. இந்திய ராணுவத்தில் … Read more

நாட்டிலேயே முதன்முறை: வாரணாசி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் அறிவிப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாரணாசியின் விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் அறிவிப்புகள் வெளியாகின்றன. பயணிகளுக்காக இதை நாட்டிலேயே முதன்முறையாக அமலாக்கப்பட்டுள்ளது. தெய்வீக நகரமான வாரணாசியின் பாபத்பூரில் இருப்பது லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். இதனுள் சமீப நாட்களாக கோவிட் வைரஸ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியாகத் துவங்கியுள்ளன. தொடர்ந்து சமஸ்கிருத மொழியில் பயணிகளுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளன. இதற்கு முன் அங்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் அறிவிப்புகள் வெளியாகி வந்தன. இது குறித்து வாரணாசி … Read more

Kerala Gold Smuggling Case: சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம்!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அமைப்பின் விசாரணைக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஸ்வப்னா சுரேஷ் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்துக்கு 2020 ஆம் ஆண்டில் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட 30 கிலோ எடை கொண்ட, அன்றைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5-7-2020 அன்று சுங்கத் துறையினர், அமலாக்கத் துறையினர் விசாரணை … Read more

குஜராத்தில் ஒற்றுமையின் சிலை அருகே மிதமான நிலநடுக்கம்

குஜராத்தில் ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கெவாடியாவின் தென்கிழக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில், ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.1ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சூறாவளிகளை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒற்றுமை சிலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று நினைவுச்சின்னத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ராகுல் படேல்தெரிவித்தார். Source link