பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்: நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி

கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை நாளை பிரதமர் மோடி வழங்குகிறார். குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை நாளை (மே 30-ஆம் தேதி) காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய … Read more

ஆதார் அட்டையின் நகலை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் – மத்திய அரசு.!

ஆதார் அட்டையின் நகலை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக, முக்கிய விவரங்கள் மறைக்கப்பட்ட ‘மாஸ்க்ட்’ ஆதார் அட்டையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி 4 எண்களை மட்டும் காண்பிக்கும் வகையிலான அந்த ‘மாஸ்க்ட்’ ஆதார் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாத விடுதிகள், திரையரங்குகள் போன்றவை … Read more

வழக்கம்போல் பயன்படுத்தலாம்… ஆதார் அறிவுறுத்தலை திரும்ப பெற்றது மத்திய அரசு

புதுடெல்லி: ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால், ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் ஆதார் நகலை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.  “ஓட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து ஆதார் கார்டுகளின் நகல்களை சேகரிக்கவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. எனவே, தனியார் நிறுவனம் உங்களின் ஆதார் கார்டை பார்க்க வேண்டும் என்று கூறினாலோ, அல்லது உங்கள் ஆதார் … Read more

நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு

மஸ்டாங்: காலையில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் வழி தவறி சென்றுவிட்ட விமான விழுந்த இடம் தெரிய வந்துள்ளது. மஸ்டாங் என்ற வட்டாரத்தில் உள்ள கோவாங் என்ற இடத்தில் விமானம் விழுந்து கிடப்பது ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் சென்றவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை என்று விமான நிலைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை வழங்கிய மகளிர் குழுவுக்கு நன்றி – பிரதமர் மோடி

பிரதமருக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை வழங்கிய மகளிர் சுய உதவி குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து, தஞ்சாவூர் பொம்மை மிகவும் அழகானது எனத் தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடியின் 89-வது ’மனதின் குரல்’ நிகழ்ச்சி இன்று காலை ஒலிபரப்பானது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் யாராவது சதம் அடித்தால் சந்தோஷப்படுவீர்கள். ஆனால் பாரதம் வேறு ஒரு மைதானத்தில் சதம் அடித்து இருக்கிறது. அதிலும் அது … Read more

ஆதார் நகல் அளிப்பதில் பாதுகாப்பு இல்லை – ஆதார் அமைப்பு

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆதார் நகலைப் பல தேவைகளின் பொருட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதில் பாதுகாப்பு இல்லை என எச்சரித்துள்ளது. நீங்கள் அளிக்கும் ஆதார் நகலைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் ஆதார் நகல் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி அளிக்கும் பட்சத்தில் இறுதி நான்கு இலக்கங்கள் தவிர மற்ற ஆதார் எண் இலக்கங்களை மறைத்துக் கொடுக்க வேண்டும். மறைக்கப்பட்ட ஆதார் அட்டை, ஆதார் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள … Read more

குடும்ப வன்முறையால் இரு கர்ப்பிணிகள், 4 வயது குழந்தை உள்பட 3 சகோதரிகள் தற்கொலை.. தற்கொலைக்கு தூண்டியதாக பெண்களின் கணவர்கள் கைது..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அருகே குடும்ப வன்முறை காணமாக 3 சகோதரிகள், பிறந்து 27 நாட்களே ஆன குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூன்று பெண்களும் படிப்பை தொடர ஆர்வம் காட்டிய நிலையில், அவர்களது கணவர்கள் மூவரையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், பிறந்து 27 நாட்களே ஆன குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் சேர்ந்து மூவரும் உயிரை மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில் இரு பெண்கள் கர்ப்பிணியாக இருந்துள்ளனர். … Read more

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் பறந்த டிரோன் – சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவர்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகிறார்கள். இதனால் பல்வேறு சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள். இதுவரை இல்லாத புது முயற்சியாக டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவதை தொடங்கி உள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் டிரோன்களை ஊடுருவச் செய்து வருகிறார்கள். குறிப்பாக, ஜம்மு பகுதியிலும், ஸ்ரீநகரிலும் அதிகளவில் டிரோன்கள் … Read more

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் தஞ்சை மகளிர் குழுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் தஞ்சை மகளிர் சுயஉதவி குழுவினரை பிரதமர் மோடி பாராட்டினர். பிரதமர் மோடி இன்று ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மூலம் புதிய இந்தியா உருவாகி வருகிறது. நாடு முழுவதும் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேதார்நாத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் சில யாத்ரீகர்கள் பரப்பும் அசுத்தத்தால் கவலையடைகிறேன். புனிதப் பயணம் மேற்கொள்ளும் போது, அங்கு குப்பைகளை கொட்டுவதை … Read more

இரவு 7 மணிக்கு மேல் பெண்களை வேலைசெய்ய கட்டாயப்படுத்தக் கூடாது: உத்தரப்பிரதேச அரசு

எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தப் பெண்ணையும் தொழிற்சாலைகளில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மே 27 அன்று உத்தரபிரதேச அரசு வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒரு பெண் இரவில் வேலை செய்ய ஒப்புக்கொண்டார் என்றால், அவர்களுக்கு இலவச போக்குவரத்து மற்றும் உணவு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழிற்சாலைகளுக்கு உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்… 1. எழுத்துப்பூர்வ அனுமதியின்றி … Read more