இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் சிக்கி இருந்த 11 பேரும் பத்திரமாக மீட்பு

ஹிமாச்சலல்: இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் சிக்கி இருந்த 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சோலன் மாவட்டத்தில் பர்வானூ என்ற இடத்தில் 11 பேருடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் பழுதானது.

வெள்ளத்தில் தவிக்கும் அசாம்: இதுவரை 73 பேர் உயிரிழப்பு; 43 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. திங்கள்கிழமை நிலவரப்படி சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். வெள்ள நீர் அதிகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரணத்தை ஆகாய மார்க்கமாக வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார். மாநில அமைச்சர்கள் மற்றும் … Read more

இன்ஸ்டா காதலனை தேடி பெங்களூரு வந்த பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. 50 அடி பள்ளத்தில் சடலமானார்.!

சேலம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து 50 அடி பள்ளத்திற்குள் விழுந்து உயிரிழந்த பிலிப்பைன்ஸ் பெண் கொலை செய்யப்பட்டாரா ? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பெங்களூரு வந்து இன்ஸ்டாகிராம் காதலனை கரம் பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரெயில் இருட்டை கிழித்துக் கொண்டு அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் ஓமலூரில் நின்ற போது … Read more

கடலில் மூழ்கி டாக்டர் பலி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ளது வர்க்கலா. சர்வதேச சுற்றுலாத்தலமான இங்குள்ள கடற்கரையின் அழகை ரசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சனி, ஞாயிறு உள்பட விடுமுறை தினங்களில் இந்த கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி விடுமுறை நாளான நேற்று மாலையும் வர்க்கலா கடற்கரையில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். கடற்கரைக்கு வருபவர்களில் பலர் கடலில் இறங்கி குளிப்பதும் உண்டு. கோவை பல்லடம் … Read more

நோ பார்க்கிங்கில் வாகனமா? – உடனே போட்டோ எடுத்து அனுப்புங்க.. புதிய அறிவிப்பு சொல்வதென்ன?

நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அதை படம் பிடித்து அனுப்புவோருக்கு வெகுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை படம் எடுத்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்புவோருக்கு 500 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். தவறான பார்க்கிங் என்பது கவனிக்கப்படாமல் போவது ஒரு பெரிய பிரச்னை … Read more

111 கட்சிகளின் பதிவு ரத்து… தேர்தல் ஆணையம் அதிரடி!

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்றால் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் அளிக்கிறது. அதேசமயம் இந்த நிபந்தனைகளை குறிப்பிட கால வரையறைக்குள் பூர்த்தி செய்ய தவறும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் … Read more

புதுச்சேரியில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு.!

புதுச்சேரியில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் காயமடைந்தனர். முத்தியால்பேட்டையைச் சேர்ந்த செல்வி என்பவரின் வீட்டின் முன் இன்று மாலை மின் கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையறியாத செல்வியின் மகன் கணேசன், அதனை மிதித்ததால் மின்சாரம் தாக்கியுள்ளது. இதைக்கண்ட அவரது சித்தி கணேசனை மீட்க முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், வீட்டில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். அவர்களது சத்தத்தைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் மின்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததை … Read more

பைக் ரேஸில் பங்கேற்ற 2 வாலிபர்கள் சாவு: விபத்து காட்சிகள் வைரல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் பைக் ரேசில் கலந்துகொண்டபோது 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி வாலிபர்கள் பைக் ரேஸ் நடத்துவது வழக்கம். அதன்படி வழக்கமான போக்குவரத்து நடந்து கொண்டிருக்கும்போதே வாகனங்களில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் நடத்திவந்தனர். பலமுறை பொதுமக்கள் புகார் … Read more

‘மண் காப்போம்’ வெற்றியால் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் நன்மை: கர்நாடகா முதல்வர் சிலாகிப்பு

கோவை: “மண் வளத்தை பாதுகாக்க சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டுள்ள பயணம் தாய் பூமியைக் காப்பாற்றிய வரலாற்றில் எழுதப்படும்” என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்தியாவின் 8-வது மாநிலமாக கர்நாடகா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்காக பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், “சத்குருவின் பயணத்தைப் பொறுத்தவரை, இது தாய் பூமியைக் காப்பாற்றிய வரலாற்றில் … Read more

Agneepath: அக்னிபாத் திட்டம்… குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்!

நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் வீரர்களை சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்து தெலங்கானா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகினற்ன. இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது, அமலாக்கத் துறைக்கு எதிரான … Read more