போதைப் பொருள் வழக்கு | ஆர்யன் கான் விடுவிப்பு; கைது செய்த அதிகாரி கருத்து சொல்ல மறுப்பு

மும்பை: சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டார். இது குறித்து கேள்விகளுக்கு பதில் தர மறுத்து விலகிச் சென்றுள்ளார் ஆர்யனை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே. கடந்த 2021 அக்டோபர் 2-ம் தேதி, மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த … Read more

அரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த சவுதாலா, வருமானத்திற்கு அதிகமாக 6 கோடி ரூபாய் சொத்து சேர்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ (Rouse Avenue) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவர் குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து, … Read more

லடாக்கில் வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 7 ராணுவ வீரர்கள் பலி- பலர் காயம்

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்றபோது வாகனம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்கள்.. சொத்துக் குவிப்பு வழக்கு – அரியானா முன்னாள் முதல் மந்திரிக்கு 4 ஆண்டு சிறை

லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!

லடாக்: லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். துர்துக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. 26 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 16 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். லடாக்கின் துர்டுக் செக்டார் பகுதியில் நடந்த வாகன விபத்தில் இதுவரை 7 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 26 ராணுவ வீரர்கள் கொண்ட குழு, பர்தாபூரில் உள்ள போக்குவரத்து முகாமில் இருந்து ஹனிஃபில் உள்ள ஒரு துணை முகாமிற்கு வாகனத்தில் சென்றனர். தோயிஸிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் காலை 9 மணியளவில், வாகனம் சறுக்கி, சுமார் 60 அடி … Read more

நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழா மே 27 மற்றும் 28 தேதிகளில் (இன்றும் நாளையும்) டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் விவசாயிகளுக்கு உதவும் ட்ரோன் பைலட்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். … Read more

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையில் புகுந்த விஷப்பாம்புகள்.. பத்திரமாக பிடித்து பள்ளத்தாக்கில் விடப்பட்டது..!

திருப்பதி எழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கும் அறையிலும், தோட்டத்துறை நர்சரியிலும் புகுந்த விஷப்பாம்புகள் பிடிபட்டன. திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் வாடகைக்கு விடப்படும் பாண்டவா விருந்தினர் அறையில் நாகப்பாம்பு ஒன்றும், தேவஸ்தான தோட்டத்துறை நர்சரியில் சாரைப்பாம்பு ஒன்றும் இருந்தது. உடனடியாக பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு பாம்புகளையும் பத்திரமாக பிடித்தார். பின்னர், இரண்டு பாம்புகளையும் அவ்வாச்சாரி கோணாவில் உள்ள பள்ளத்தாக்கில் விட்டார். Source link

காளஹஸ்தியில் நிதி நிறுவனத்தில் பெண் கேஷீயரை கட்டிப்போட்டு ரூ.85 லட்சம் நகை கொள்ளை

திருப்பதி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பெரிய மாசி வீதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் திறக்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் காளஹஸ்தியை சேர்ந்த சவந்தி (வயது 36) என்பவர் கேஷியரியராக வேலை செய்து வருகிறார். நேற்று நிதி நிறுவனம் வழக்கம் போல் இயங்கியது. மாலை பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்த ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். சவந்தி மட்டும் இரவு 10 மணி அளவில் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். … Read more

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு..!!

லடாக்: லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரத் பெட்ரோலியத்தை விற்கும் முடிவை வாபஸ் பெற்றது மத்திய அரசு! என்ன காரணம்?

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று அலை மற்றும் ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழலால் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பாதிக்கப்பட்டுள்ளதாக முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மார்ச் 2020-ல் முதலீட்டாளர்கள் வாங்க முன்வரலாம் … Read more