ஹரித்துவார் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றொடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரல்.!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றொடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய மாவட்ட வன அதிகாரி தீபக் சிங், யானைகளின் இந்த சண்டையை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு யானையின் தந்தம் இந்த சண்டையில் உடைந்து போனது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். யானைகளின் இந்த மோதல் வழக்கமானது என்று கூறிய அவர், தங்களுக்குள் யார் பெரியவர் என்பதற்காகத் தான் இந்த … Read more

தேவகவுடாவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி?

பெங்களூரு முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அங்கு சந்திரசேகர ராவுக்கு மதிய உணவு பரிமாற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்து சந்திரசேகர ராவ் விமானம் மூலம் ஐதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன்பு நிருபர்களுக்கு அளித்த … Read more

எம்பி, எம்எல்ஏ.க்கள் தேசிய மாநாடு பெண்கள் அதிகளவில் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் பேச்சு

திருவனந்தபுரம்: சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘‘ஆசாதி கா அமிர்த் உத்ஸவ்’வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை திருவனந்தபுரம் சட்டசபையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ேநற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாது: பெண்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள். அதனால்தான் அவர்களை சக்தியின் மறு உருவம் என்று நாம் கூறி வருகிறோம். … Read more

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? – அமைச்சர் மனோ தங்கராஜ்

பிரதமர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காதது ஏன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். விழாவில் வணக்கம் என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கிய அவர், தமிழ் மொழிநிலையானது என்றும், தமிழ்நாடும் தமிழ்நாட்டின் கலாச்சாரமும் உலகளாவியது என்றும், தமிழ்நாட்டு மக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் … Read more

'அதிகாரத்தை தக்கவைக்க ஒரு குடும்பம் படாத பாடுபடுகிறது' – ஹைதராபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விமர்சனம்

ஹைதராபாத்: குடும்ப வாரிசு அரசியல் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் ஒரு மணியளவில் ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பேகம்பேட்டில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் … Read more

உரிய நேரத்துக்கு முன்னதாக ரயில் வந்ததால் பிளாட்பாரத்தில் கார்பா நடனம் ஆடிய பயணிகள்..!

பாந்த்ரா-ஹரிதுவார் எக்ஸ்பிரஸ் ரயில் உரிய நேரத்திற்கு முன்னதாக வந்ததையடுத்து மத்தியப் பிரதேசம் ரட்லம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் உற்சாகமாக பிளாட்பாரத்தில் கைதட்டி தட்டி சுற்றி வளைத்து கார்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர். ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன. Source link

ஆந்திர சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த ஜெகன்மோகன் ரெட்டி திட்டம்: சந்திரபாபு நாயுடு

விஜயவாடா : ஆந்திர மாநிலம் ஓங்கோலில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்க அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் இருந்து ஓங்கோலுக்கு மோட்டார் சைக்கிள் பேரணியாக புறப்பட்டார். வழியில், சிலகலுரிபேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது, ‘ஜெகனே வெளியேறு’, ‘ஆந்திராவை காப்போம்’ என்று கோஷங்கள் எழுப்பினார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது:- தெலுங்கு தேசம் கட்சி மீது பழிபோடுவதற்காக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள், தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீவைத்துக்கொள்கிறார்கள். நெருப்பில் இருந்து … Read more

நில முறைகேடு வழக்கில் ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு : நில முறைகேடு வழக்கில் ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வாசுதேவரெட்டி என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார்.

3வது ஆண்டாக கல்வி தரத்திலும், வசதியிலும் சாதனை படைத்த சூரத் அரசு பள்ளி – குழந்தைகளை சேர்க்க பெற்றோர் தவம்

சூரத்: கல்வியின் தரத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளைவிட சிறந்து விளங்குவதால், தொடர்ந்து 3-வது ஆண்டாக, அங்கு மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுகிறது. பொதுவாக அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்குவது வழக்கம். ஆனால், அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த குஜராத் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சூரத் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் கல்வியின் தரத்தையும், … Read more

நடிகை அம்ரீன் பட்டை கொலை செய்த 2 தீவிரவாதிகளை 24 மணி நேரத்தில் சுட்டுக்கொன்ற காவல்துறை..!

ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை அமரீன் பட்டை கொலை செய்த தீவிரவாதிகள் இரண்டு பேர் 24 மணி நேரத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் நடைபெற்ற பல்வேறு துப்பாக்கிச் சண்டைகளில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார். நடிகையைக் கொலை செய்த தீவிரவாதிகள் அகமது வாஜா மற்றும் அப்ரீன் அப்தாப் மாலிக் ஆகியோரை அவந்திபோராவில் நேற்றிரவு பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் இந்த இரண்டு தீவிரவாதிகளும் … Read more