இந்தியா-வில் அதிகரிக்கும் கொரோனா தொற்று… ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது.. 10 பேர் பலி…..ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 8329 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,213,435 ஆக உயர்ந்தது.* புதிதாக 10 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

மாநிலங்களவைத் தேர்தல் – கர்நாடகாவில் பாஜக; ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி

மாநிலங்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவும், ராஜஸ்தானில் காங்கிரஸும் வெற்றி வாகை சூடியுள்ளன. மொத்தம் 57 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 15 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தமிழகம், உத்தரபிரதேசம், பிகார், ஓடிசா, ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் மீதமுள்ள மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காலியாகவுள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகாவில் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி வாய்ப்பு குறைவு என்ற சூழலிலும் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிரம்

புதுடெல்லி: ஜுலை 18-ல் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல், பாஜக தலைமையிலான ஆளும் கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. இதில் வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 16-வது புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 18-ல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற இரு அவைகள் மற்றும் இந்திய மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 4,809 … Read more

போராட்டங்களில் வன்முறை – தீ வைப்பு சம்பவங்கள்.. அனைத்து மாநில காவல்துறையினருக்கும் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!

சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து மாநிலப் போலீசாரும் தயார் நிலையில் இருக்கும்படி உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் , ராஜஸ்தான், பஞ்சாப் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் போராட்டத்தின்போது வன்முறை மூண்டு வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதில் பலர் காயம் அடைந்தனர். மாநில அரசுகள், காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைக் காக்க தயார் நிலையில் இருக்கும்படி உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. … Read more

நுபுர் சர்மாவை கண்டித்து உ.பி.யில் போராட்டம் நடத்திய 136 பேர் கைது

உ.பி: பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கண்டித்து உ.பி.யில் போராட்டம் நடத்திய 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரக்யராஜில் 20 பேரும், அம்பேத்கர் நகரில் 23 பேரும், ஹத்ராஸில் இருந்து 20 பேர் உற்பட 136 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக மே மாதம் ரூ.130 கோடி வருவாய்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடியை தாண்டியுள்ளது. பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் உண்டியல் வருமானமும் கனிசமாக உயர்ந்துள்ளது. கோயிலுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடி வரை உண்டியல் வருவாய் கிடைத்துவரும் நிலையில் … Read more

மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..!

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துடன், ஆபாச படத்தையும் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசாக வைத்த ஆசிரியரை, மாணவியின் உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். எக்குந்தி கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுடன், ஆபாசமாக படங்களும் எடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. அந்த மாணவிக்கு, வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் மாணவியின் ஆபாச படத்தை … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 23-ம் தேதி ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 23-ம் தேதி ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் தலைவரை  சோனியா காந்தி அவகாசம் கோரியிருந்தார். மேலும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 13-ம் தேதி எம்.பி.ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் ஆஜராகவுள்ளார்.

'உங்கள் தகவலுக்கு, இது எம்எல்ஏவின் கார்' – காவலர், பத்திரிகையாளரை தாக்கிய பாஜக எம்எல்ஏவின் மகள்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளியின் மகள் ரேணுகா (26). இவர் பிஎம்டபுள்யூ காரில் பெங்களூருவில் உள்ள குயின்ஸ் சாலையில் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் போலீஸ் அதிகாரியின் வாகனத்தை முந்திக்கொண்டு சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, ”இந்த காரின் மீது 13 வழக்குகள் உள்ளன. இப்போது 14-வது முறையாக போக்குவரத்து விதிமுறை மீறப்பட்டிருக்கிறது’’ எனக்கூறி அபராதம் கேட்டனர். ஆனால், ரேணுகா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு … Read more

உரம் இறக்குமதி செய்ய இலங்கைக்கு 55 மில்லியன் டாலர் கடன் வழங்குகிறது இந்தியா

உரம் இறக்குமதி செய்ய இலங்கைக்கு 55 மில்லியன் டாலர் கடனாக இந்தியா வழங்குகிறது. நடப்பாண்டின் யாலா அறுவடை பருவத்திற்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் வாங்க கடன் வழங்குமாறு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டது. இந்தியாவில் இருந்து யூரியா உரம் இறக்குமதி செய்ய 55 மில்லியன் டாலர் கடனுதவி அள்ளி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை நிதித்துறை செய்லாளர் ஸ்ரீவர்தனே, எக்ஸிம் வங்கியுடன் டாலர் கடன் உதவி ஒப்பந்தத்தில் … Read more