அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி.!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதன் முறையாக 78 ரூபாய் என்கிற வரம்புக்கும் கீழ் சரிந்துள்ளது. முந்தைய நாள் வணிகநேர முடிவில் ஒரு டாலர் 77 ரூபாய் 84 காசுகளாக இருந்தது.  கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீடு திரும்பப் பெறல் ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக வணிக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.  Source link

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பு; ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை: திருத்தப்பட்ட சட்ட அறிவிப்பை வெளியிட அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும் உள்ளிட்ட புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பான சட்ட திருத்த அறிவிப்பை வெளியிடுமாறு ஒன்றிய அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டு வருவதற்குத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல, வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. … Read more

உ.பி: அபராதம் விதித்த இன்ஸ்பெக்டரை பழிவாங்க மின்ஊழியர் செய்த வேற லெவல் சம்பவம்

உத்தரப் பிரதேசத்தில் அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரை பழி வாங்கும் வகையில், காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்ட திருட்டு மின் இணைப்பை லைன் மேன் ஒருவர் துண்டித்துள்ளார். பரேலி அருகே தலைக்கவசம் அணியாமல் சென்ற பகவான் ஸ்வரூப் என்ற மின்வாரிய ஊழியருக்கு காவல் உதவி ஆய்வாளர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காவல் ஆய்வாளர் பணியாற்றும் ஹர்தாஸ்புர் காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை ஸ்வரூப் துண்டித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஸ்வரூப், “காவல் நிலையம் மின்சார … Read more

'விசாரணை அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி' – காங்., பேரணிக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜராவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேரணி, விசாரணை அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விசாரணை அமைப்புக்கு அழுத்தம் தரும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று பேரணி நடத்தியுள்ளனர். காந்தி குடும்ப ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதனால், காந்தி குடும்பத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியாகவே … Read more

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா கொலை வழக்கில் மேலும் இருவர் கைது..!

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ் ஜாதவ், நவ்நாத் சூர்யவன்ஷி ஆகியோரை ஜூன் 20ம் தேதி வரை காவலில் எடுத்துள்ளதாகவும், சித்து மூசாவாலா கொலைக்கும், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மகாராஷ்டிராவின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி குல்வந்த் சாரங்கல் தெரிவித்துள்ளார்.  Source link

ராஜஸ்தான் காங். அமைச்சரின் மகனால் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண் மீது ‘மை’ வீச்சு; தாயுடன் நடந்து சென்ற போது தாக்குதல்

புதுடெல்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரின் மகன் ரோஹித் ஜோஷியால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், தனது தாயுடன் நடந்து சென்ற போது மர்ம நபர்கள் மை வீசிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்கிழக்கு டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் 23 வயது இளம்பெண் கடந்த மே 8ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் டெல்லி போலீசில் புகார் அளித்தார். அதில், ‘ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அமைச்சர் மகேஷ் … Read more

கண் அசந்த பஸ் டிரைவர்… 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஒடிசாவில் இருந்து விஜயவாடாவுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றது. அதிகாலையில் ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே அல்லூரி பகுதியில் சென்றபோது, நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இது குறித்து தகவலறிந்து சென்ற காவல் துறையினர், விபத்தால் படுகாயமடைந்தவர்களை மீட்டு பத்ராச்சலம் அரசு மருத்துவமனையில் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | மம்தா கூட்டத்தில் உத்தவ் பங்கேற்க மாட்டார்: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவ தற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார் என அவரது கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடியரசுத் … Read more

ராகுலிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி பேரணி செல்ல முயன்ற ஏராளமானோர் கைது!

டெல்லியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை சத்தியாகிரக பேரணி நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி காங்கிரஸ் அலுவலகம் நோக்கி வந்த ஏராளமானோரை சாலையிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் வேனில் ஏற்றினர். இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலாக்கத்துறை … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை உதவி இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரி ராகுல்காந்தியிடம் கேள்விகளை கேட்டு வருகிறார். ராகுல் காந்தி அளிக்கும் பதில்களை மற்றொரு அதிகாரி பதிவு செய்து வருகிறார். ராகுல்காந்தியிடம் 5 அல்லது 6 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தது.