இந்தியாவில் புதிதாக 2,628 பேருக்கு கொரோனா- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 2,628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதே போல நேற்று மகாராஷ்டிரத்தில் 470 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது அம்மாநிலத்தில் கடந்த 1½ மாதங்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும். … Read more

ஆந்திர மாநிலத்தில் கார் குளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் கார் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். ரெட்டிவாரி கிராமத்தை சேர்ந்த கங்கிரெட்டி தனது குடும்பத்துடன் திருமணத்துக்கு பலமனேருக்கு காரில் சென்றனர்.மதனப்பள்ளி அருகே புங்கனுரில் கார் வேகமாகச் சென்றபோது சாலையோர கல்வெட்டில் மோதி மொரவப்பள்ளி குளத்தில் கவிழ்ந்தது.காரில் பயணம் செய்த மதுலதா, குஷிதா, தேவன்ஷ் ரெட்டி, கங்கிரெட்டி உள்ளிட்ட 4 பெரும் உயிரிழந்தனர்.தகவல் அறிந்த வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் … Read more

பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணிப்பு – தெலங்கானா முதல்வர் முடிவு?

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநிலம் சென்ற போதும் அவரை சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஹைதராபாத் நகருக்கு வருகை தரும்போது, தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மரபுப்படி பிரதமரை வரவேற்க மாட்டார் என்கிற தகவல் பாஜக தலைவர்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் நகரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவருடைய மகன் குமாரசாமி ஆகியோரை சந்திக்க கர்நாடக தலைநகர் செல்வதாக சந்திரசேகர ராவ் … Read more

'ஓவைசியை நம்பாதீர்' – முஸ்லிம் மக்களுக்கு பாஜக தலைவர் வேண்டுகோள்

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி நாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை யாரும் நம்ப வேண்டாம் என்று பாஜக தலைவர் ஹர்நாத் சிங் கூறியுள்ளார். ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஹர்நாத் சிங், “சுதந்திரத்திற்கு முன் நாட்டைப் பிரிக்க ஜின்னா என்ன செய்தாரோ அதேபோல் திட்டமிட்டு இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஓவைசி செய்கிறார். அவர் முஸ்லிம் மக்களை தவறாக வழி நடத்துகிறார். அவரை முஸ்லிம் மக்கள் நம்ப வேண்டாம். ஓவைசி நாட்டைத் துண்டாடும் போக்கை நிறுத்தாவிட்டால் அவர் … Read more

விஜயேந்திராவுக்கு டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தியா?: எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: விஜயேந்திராவிற்கு தேர்தலில் டிக்கெட் வழங்காததால் எடியூரப்பா அதிருப்தியில் உள்ளாரா என்பது குறித்து பரபரப்பு பேட்டியளித்துள்ளார். கர்நாடக மேல்-சபை தேர்தலில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எடியூரப்பா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- எங்கள் கட்சி யாருக்கு டிக்கெட் கொடுத்துள்ளதோ அதை ஏற்கிறோம். எனது மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் … Read more

புதுச்சேரி காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டிக்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குளம் காவல் நிலையம் பின்புறம் ரவுடி பொடிமாஸ் என்ற சரத் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உறவினர் வீட்டில் கொலை செய்யப்பட்ட ரவுடி சரத் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. 

சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ( மே 26) காலை ஆஜராகினார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த … Read more

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் போட்டியிடுகிறார்.கடந்த 4 மாதங்களில் காங்கிரசில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். காங்கிரசில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஏதும் குறை கூற மாட்டேன் என்று கூறினார். தமக்கும் ராகுல் காந்திக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் எழவில்லை என்றும் கபில்சிபல் … Read more

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சரத்பவார்

மும்பை : மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி) வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. இந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க மராட்டிய அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இந்தநிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி. பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் பேசியதாவது:- நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு சேர வேண்டியதை சரியாக பெற வேண்டும். நாங்கள் எதையும் இலவசமாக கேட்கவில்லை. உரிமையை … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 2,628 பேருக்கு கொரோனா.. 18 பேர் உயிரிழப்பு.. 2,167 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,628 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,44,820 ஆக உயர்ந்தது.* புதிதாக 18 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more