புதுச்சேரி காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டிக்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குளம் காவல் நிலையம் பின்புறம் ரவுடி பொடிமாஸ் என்ற சரத் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். உறவினர் வீட்டில் கொலை செய்யப்பட்ட ரவுடி சரத் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. 

சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ( மே 26) காலை ஆஜராகினார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த … Read more

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் போட்டியிடுகிறார்.கடந்த 4 மாதங்களில் காங்கிரசில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். காங்கிரசில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஏதும் குறை கூற மாட்டேன் என்று கூறினார். தமக்கும் ராகுல் காந்திக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் எழவில்லை என்றும் கபில்சிபல் … Read more

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சரத்பவார்

மும்பை : மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி) வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. இந்த இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க மராட்டிய அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இந்தநிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி. பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் பேசியதாவது:- நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு சேர வேண்டியதை சரியாக பெற வேண்டும். நாங்கள் எதையும் இலவசமாக கேட்கவில்லை. உரிமையை … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 2,628 பேருக்கு கொரோனா.. 18 பேர் உயிரிழப்பு.. 2,167 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,628 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,44,820 ஆக உயர்ந்தது.* புதிதாக 18 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

ஒற்றை காலில் ஒரு கி.மீ குதித்து பள்ளிக்கு செல்லும் சிறுமிக்கு நான் உதவுகிறேன் – சோனு சூட்!

ஒற்றை காலில் ஒரு கி.மீ குதித்தவாறு தினமும் பள்ளிக்கு செல்லும் சிறுமிக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்கு உதவுகிறேன் என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். பீகாரின் ஜமுய் நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி சீமா குமாரி. 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமமான ஃபதேபூரில் டிராக்டரின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி விபத்துக்கு உள்ளானார் சீமா. சிகிச்சையின்போது காயமடைந்த இடது கால் துண்டிக்கப்படாவிட்டால், அவள் உயிரிழக்க நேரிடும் என மருத்துவர்கள் சீமாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் … Read more

தங்கைக்காக நீதி கேட்டு ஆந்திராவில் இருந்து மாட்டு வண்டியில் டெல்லிக்கு புறப்பட்ட அண்ணன் – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

விஜயவாடா: தங்கைக்கு புகுந்த வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதாலும், மாப்பிள்ளை வீட்டாருக்கு ஆந்திராவில் ஆளும் கட்சியினரின் ஆதரவு இருப்பதாலும், தக்க நீதி கிடைக்காது என முடிவு செய்து, தாய் மற்றும் தங்கையுடன் அவரது அண்ணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மாட்டு வண்டியில் புறப்பட்டு சென்றுள்ளார். தேசிய சகோதரர் தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் பல சகோதர, சகோதரிகள் தங்களது அன்பை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பரிமாறிக் கொண்டனர். ஆனால், உடன்பிறந்த ஒரு அண்ணன், … Read more

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி- மத்திய அமைச்சர் விளக்கம்

பிரிட்டனைப் போலவே இந்தியா தனது சொந்த நாட்டின் நலன்களையே முதன்மைப்படுத்துகிறது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.  ரஷ்யாவில் இருந்து இந்தியா எரிபொருள் இறக்குமதி குறித்து மாநாட்டில்  சில நாடுகள் கேள்வி நிலையில், அதற்கு பதிலளித்த பியூஷ் கோயல், ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேவைகளையே முதன்மைப்படுத்துவதாகக் கூறினார். இந்தியாவின் இறக்குமதி குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். Source link

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக்

புது டெல்லி: இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அபிலாஷா  பாரக்கும் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர்  லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார்.  அபிலாஷா பராக், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ … Read more

சீன நாட்டவருக்கு சட்டவிரோத விசா : சிபிஐ முன்பு இன்று விசாரணைக்கு ஆஜராகினார் கார்த்தி சிதம்பரம்

டெல்லி ; டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் ஆஜராகியுள்ளார். சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த புகாரில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க உள்ளது.