சட்டசபைக்குள் ஷிண்டேவை அனுமதிக்காதீங்க..! – உச்சநீதிமன்றத்தில் தாக்கரே மனு!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருக்கு ஆதரவு அளிக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை, மாநில சட்டப்பேரவைக்குள் நுழைய தடை விதிக்கக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அண்மையில் ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கியதால், உத்தவ் … Read more

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்த சஞ்சய் ராவத்

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகவுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக்கோரி அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். இந்நிலையில், மதியம் 12 மணிக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் ஆஜராகவுள்ளதாக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட அவர், விசாரணை அலுவலகம் முன் தொண்டர்கள் குவிய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். Source link

'நுபுர் சர்மாவும் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது': உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது; அது ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

காவிரி விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்!

ஜூலை 6ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. மேகதாது அணை விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை அமைக்க கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் … Read more

உதய்பூர் படுகொலை | ஐஜி, எஸ்.பி., உள்பட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

உதய்பூர் தையல்காரர் கன்னையா லாலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற புகாரின் பேரில் உதய்பூர் ஐஜி, காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் இறைத் தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பாஜக.வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக ஊடகத்தில் கருத்து … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2004, 2009, 2014 மற்றும் 2020ம் ஆண்டு தேர்தலின்போது சமர்பித்த பிரமாண பத்திரத்தில், சரத் பவாரின் சொத்து மதிப்பு ஆறு ஆண்டுகளில் 60 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்து, 32 கோடியே 73 லட்சம் ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கமளிக்க கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அது குறித்து சரத் பவார் கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. … Read more

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு: ஒன்றிய அரசு

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி ஒன்றிய அரசு விதித்துள்ளது. ஒன்றிய அரசின் நடவடிக்கையால் பெட்ரோலுக்கு ரூ.6, டிசல்க்கு கூடுதலாக ரூ.13 வரி செலுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு 294 டாலர் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

`ஆட்டோ ஓட்டுநர் டூ முதல்வர்'- பிளான் போட்டு மகாராஷ்ட்ரா முதல்வரான ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் 20-வது முதல்வராக பதவியேற்றுள்ளார் ஏக்நாத் ஷிண்டே. ஆட்டோ ட்ரைவராக இருந்து தன் பொதுவாழ்வை தொடங்கிய இவர், முதல்வராக கடந்து வந்த பாதையை இங்கே பார்க்கலாம்! பிப்ரவரி 9, 1964-ல் மகாராஷ்டிராவிலுள்ள சத்தாரா பகுதியில் பிறந்த ஏக்நாத் ஷிண்டேவின் சிறுவயதில், மும்பையின் தானேவில் அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வந்துள்ளனர். வறுமையினால் பதினோராம் வகுப்பு வரை மட்டுமே படித்த … Read more

அடுத்தது என்ன?- ஆட்சியை இழந்த சிவசேனா முன் இருக்கும் சவால்கள்: ஒரு பார்வை

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சிக்கவிழ்ப்பு சுமுகமாக நடந்தேறியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இனி சிவசேனாவின் எதிர்காலம் என்ன? சிவசேனா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம். சிவசேனாவின் எதிர்காலம் என்ன? சிவசேனாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஏக்நாத் ஷிண்டே முதல்வராகிவிட்டார். அவர் வெற்றிகரமாக முதல்வர் பதவியைப் பெற்றார் என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டுமா இல்லை பாஜக ஷிண்டே குழுவுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு அதை தன் கைப்பாவையாக … Read more

பி.பி.எப். வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – மத்திய அரசு

பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Puplic Provdient Fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7 புள்ளி ஒரு சதவிகிதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான வட்டி ஆறு புள்ளி எட்டு சதவிகிதமாகும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link