தமிழகத்தில் இருந்து கடத்தல் கேரளாவில் 11 டன் ரசாயன மீன் அழிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களாக மீன் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டன. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கேரளாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ரசாயனம் கலந்த கெட்டுப்போன மீன்கள் கொண்டு வரப்படுவது தெரியவந்தது. இதனால் கேரள மாநில எல்லைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர். நேற்று அதிகாலை தென்காசி மாவட்ட எல்லையில் உள்ள ஆரியங்காவு சோதனைச் சாவடியில் கேரள உணவு … Read more

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் – ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: உடல்நிலை குணமடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார். தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தனது உடல்நிலை குறித்து விசாரித்து, குணமடைய வாழ்த்திய பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக் குறைவால் கடந்த சில ஆண்டுகளாக வெளியே செல்லாமல், வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறார். கடந்த வாரம் உடல்நிலை சற்று … Read more

அக்னிபத் திட்டம்: பாதுகாப்பு துறை அமைச்சர் முக்கிய தகவல்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் … Read more

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு மரணம்.. சோதனை நடத்த வந்த அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாக தந்தை புகார்..!

பஞ்சாப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனது மகனை கண்ணெதிரே சுட்டுக்கொன்று விட்டதாக ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் போப்பிலி குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரிகள் சோதனையிட வருவதை அறிந்து ஐஏஎஸ் அதிகாரியின் மகன் கார்த்திக் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக சோதனையிட சென்ற ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தம் மகன் சுட்டுக் கொல்லப்பட்டதை தாம் நேரில் கண்ட சாட்சி என்று சஞ்சய் போப்பிலி கூறியுள்ளார். இதனிடையே, சஞ்சாய் போப்பிலி வீட்டில் நடைபெற்ற சோதனையில் 12 கிலோ … Read more

அடுத்தாண்டு ஏப்ரல் 1 முதல் கார்களுக்கு ஸ்டார் ரேட்டிங்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் புதிய கார்களுக்க விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து நட்சத்திர மதிப்பீடு அளிக்கும் திட்டம் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து புதிய கார்களுக்கும், மற்ற நுகர்வோர் பொருட்களை போல் நடசத்திர மதிப்பீடு (ஸ்டார் ரேட்டிங்) வழங்கப்படும் என்று ஒன்றிய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் அறிவித்தார். ‘இந்த நட்சத்திர மதிப்பீடு அடிப்படையில், பாதுகாப்பான கார்களை மக்கள் தேர்வு … Read more

ஒடிசாவில் மின்சார வசதி கூட இல்லாத திரவுபதி முர்முவின் சொந்த கிராமம்

புவனேஸ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். ஆனால் அவரது சொந்த ஊரான ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் உபர்பேடா கிராமம், இதுவரையில் மின்சார வசதியைக் கூட பெறாத நிலையில் உள்ளது. குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். திரவுபதி முர்முவின் அண்ணன் பகத் சரண் துடுவின் மகன் பிராஞ்சி நாராயண் துடு அந்த கிராமத்தில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். … Read more

ஜி 7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டுச் சென்றார். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஜி7 நாடுகள் பங்கேற்கும் மூன்று நாள் உச்சி மாநாடு ஜெர்மனியின் பவாரியா பகுதியில் இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நள்ளிரவில் டெல்லியில் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,350,215 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.50 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,350,215 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 548,605,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 523,456,003 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,246 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவசேனா அரசு கவிழ்ந்தால் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியா? – அமைச்சர்களின் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: மகாராஷ்டிராவின் ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து சூழந்துள்ள நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகி குடியரசு தலைவர் ஆட்சி அமலாகும் வாய்ப்பிருப்பதாக சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனாவின் கூட்டணி ஆட்சி நிலவுகிறது. இதன் மேலவைக்கு கடந்த ஜூன் 20-ல் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கூட்டணி ஒரு உறுப்பினருக்கான வாய்ப்பை இழந்தது. இதற்கு முன் நடைபெற்ற மாநிலங்களவை … Read more

பஞ்சாப்பில் லஞ்ச வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரியின் மகன் மர்ம மரணம்: துப்பாக்கி குண்டு பாய்ந்தது

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மியின் முதல்வர் பகவந்த் மான், லஞ்சம், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். டெண்டர் ஒதுக்கீடுக்கு ஒரு சதவீதம் லஞ்சம் கேட்ட சுகாதார அமைச்சரை கைது செய்து சிறையில் அடைந்தார். இதைத் தொடர்ந்து, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் டெண்டரை வழங்க லஞ்சம் கேட்ட ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பாப்லி, கடந்த வாரம் கைது அதிரடியாக செய்யப்பட்டார். இந்நிலையில், பாப்லியின் மகனும் வழக்கறிஞருமான கார்த்திக் … Read more