ஐபிஎல் நடக்கும் நேரத்தில், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட மும்பை டீம் ஓனர் – பிசிசிஐ கடும் நடவடிக்கை..!!

Mumbai team owner Match Fixing : ஐபிஎல் 2025 தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மேட்ச் பிக்சிங் தொடர்பான முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மும்பையில் நடக்கும் டி20 லீக் போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக அந்த தொடரில் பங்கேற்கும் அணியின் உரிமையாளருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது. மும்பையில் லோக்கல் டி20 லீக் போட்டிகள் ஐபிஎல் தொடரைப் போல் நடத்தப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா காரணமாக நடக்காமல் … Read more

இன்று டிவால்ட் பிரேவிஸ் உண்டா… இல்லையா…? MI vs CSK பிளேயிங் லெவன் இதோ!

MI vs CSK Playing XI Prediction: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் (IPL 2025) தற்போது அதன் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது எனலாம். அதாவது அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் தலா ஏழு போட்டிகளை விளையாடிவிட்டன. லக்னோ மற்று்ம் ராஜஸ்தான் அணிகள் மட்டுமே தலா 8 போட்டிகளை விளையாடி இருக்கின்றன. IPL 2025: இன்று 2 லீக் போட்டிகள் அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப். 20) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. பஞ்சாப் நியூ சண்டிகர் … Read more

ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் சொதப்பல்.. கடைசி நேரத்தில் ஆட்டத்தையே மாற்றிய ஆவேஷ் கான்!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 36வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 19) ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. சஞ்சு சாம்சனுக்கு கடந்த போட்டியின் போது காயம் ஏற்பட்ட காரணத்தால் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாததால், ரியான் பராக் அணியை … Read more

ஐ.பி.எல்.: ஜெயசூர்யா, ரோகித் சர்மா வரிசையில் இணைந்த சாய் கிஷோர்

அகமதாபாத், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன்களும், அசுதோஷ் சர்மா 37 ரன்களும் அடித்தன்ர். … Read more

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஹோல்கர் ருனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பார்சிலோனா, பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீரரான ஹோல்கர் ருனே, ரஷியாவின் கரண் கச்சனோவ் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹோல்கர் ருனே 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் அல்லது ஆர்தர் … Read more

பட்லர், ரூதர்ஃபோர்ட் அதிரடி ஆட்டம்.. முதல் இடத்திற்கு முன்னேறிய குஜராத் அணி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 35வது போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்தது.  தொடக்க வீரர்களாக அபிஷேக் போரல் மற்றும் கருண் நாயர் களம் இறங்கினர். ஆனால் நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியாத இந்த கூட்டணி … Read more

டெல்லி அதிரடி பேட்டிங்.. குஜராத் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

அகமதாபாத், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் போரெல் – கருண் நாயர் களமிறங்கினர். இதில் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே அதிரடியாக தொடங்கிய அபிஷேக் போரெல் 9 … Read more

SRH-ன் மோசமான விளையாட்டிற்கு காரணம் இதுதான்.. போட்டுடைத்த மைக்கேல் கிளார்க்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் இந்த அணி நன்றாக விளையாடியதால், இந்த ஆண்டு அந்த அணி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அந்த அணி தொடர்ந்து சொதப்பி வருவதால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.  … Read more

விராட் கோலியை விட பாபர் அசாம் பெரிய வீரராக வருவார் – கராச்சி கிங்ஸ் அணி உரிமையாளர்

கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகிறார். அறிமுகம் ஆன புதிதில் ஏராளமான சாதனைகள் படைத்த அவர் தற்சமயம் படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவரை பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக பாபர் அசாம் சிறப்பாக விளையாடிய தருணத்தில் அவர் விராட் கோலியை விட சிறந்த வீரர் என்று பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அவர்களே தற்போது பாபர் … Read more