இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியில் கூடுதலாக வீரர் சேர்ப்பு

லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்று (பிப்ரவரி 9) நடைபெற்று வருகிறது. 3-வது மற்றும் கடைசி போட்டி வரும் 12-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த 3-வது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கூடுதல் பேட்ஸ்மேனாக … Read more

Rohit Sharma : ரோகித் சர்மா கம்பேக்… ராகுல் டிராவிட் சாதனை முறியடிப்பு

Rohit Sharma record ODI | இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்து, புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த ராகுல் டிராவிட் சாதனையை ரோகித் சர்மா முறியடித்து, இப்போது அவர் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேநேரத்தில் கடந்த சில மாதங்களாக பார்ம் இல்லாமல் இருந்து வந்த ரோகித் இப்போட்டியில் பார்முக்கும் திரும்பியிருக்கிறார். இதனால் … Read more

"கேப்டனின் பங்களிப்பு சரி இல்லை என்றால் டீமும் சரியாக விளையாடாது" – கபில் தேவ்

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து அணி வீரர்களும் இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், இந்திய அணி இத்தொடரில் எப்படி செயல்படும் என்ற சந்தேகமும் எதிர்பார்ப்பும் உள்ளன. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலியும் பேடிங்கில் சொதப்பி வருகின்றனர்.  இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கூட … Read more

ரச்சின் ரவீந்திரா காயம்! மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லை? சாம்பியன்ஸ் டிராபியில் சிக்கல்?

பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு இந்த தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 330 ரன்கள் அடித்தது. க்ளென் பிலிப்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பின்னர் … Read more

Ind vs Eng: பும்ராவுக்கு என்ன ஆச்சு? பயிற்சியாளர் சொன்ன பதில்!

India vs England 2nd ODI: இந்தயா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணி அளவில் தொடங்குகிறது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மைத்தானத்தில் நடைபெறுகிறது இப்போட்டி. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ரசிகர்கள் கண்டு களிக்க இலவச அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதனை கண்டு களித்தனர்.  இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சோ கோட்டாக் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி வெற்றி பெற்ற சென்னையின் எப்.சி

ஐதராபாத், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி மாலை 5 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் முகமதின் அணியை வீழ்த்தி ஐதராபாத் எப்.சி வெற்றி பெற்றது. தொடர்ந்து கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. – சென்னையின் எப்.சி அணிகள் மோதின. தொடக்கம் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? சுரேஷ் ரெய்னா கணிப்பு

மும்பை, 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. … Read more

IND vs ENG: விராட் கோலிக்காக நீக்கப்படும் வீரர்! நன்றாக விளையாடியும் சோகம்!

India vs England: இன்று பிப்ரவரி 9 ஆம் தேதி கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மான் கில் சிறப்பாக விளையாடி இருந்தனர். இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் … Read more

மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி..? வெளியான தகவல்

மும்பை, ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். பேட்ஸ்மேனாக … Read more

எஸ்.ஏ.20 ஓவர் லீக் இறுதிப்போட்டி; டாஸ் வென்ற எம்.ஐ.கேப்டவுன் பேட்டிங் தேர்வு

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்க உள்ளூர் தொடரான எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. இதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் எம்.ஐ.கேப்டவுன் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இந்நிலையில், எம்.ஐ.கேப்டவுன் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று … Read more