இதனால்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகினேன்.. உண்மை போட்டுடைத்த கோலி!

நவீன கிரிக்கெட்டின் ஜாம்பாவான் என அழைக்கப்படுபவர் விராட் கோலி. இவர் தனது கிரிக்கெட் கரியரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இன்னும் பல சாதனைகளை படைத்தும் வருகிறார். இந்திய அணியை கேப்டனாக தோனிக்குப் பிறகு, விராட் கோலி வழிநடத்தி வந்தார். இருப்பினும், கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். அதன் பின், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் … Read more

CSK பிளேயிங் லெவனில் புதிய பௌலர்… KKR போட்டியில் கலீல் அகமதிற்கு ஓய்வா…?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (மே 7) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது. நடப்பு 18வது ஐபிஎல் தொடரில் இது 57வது லீக் போட்டி ஆகும். KKR vs CSK: பிளே ஆப் போகுமா கேகேஆர்? ஐபிஎல் புள்ளிப்பட்டியலின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) 10வது இடத்தில் இருக்கிறது. ஏற்கெனவே பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது. … Read more

CSK ஓபனிங்கில் பெரிய மாற்றம்…? கேகேஆர் நாக்அவுட் செய்ய சூப்பர் வாய்ப்பு!

Chennai Super Kings, IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு 18வது சீசன் மிகவும் அதிர்ஷ்டமில்லாத சீசனாகிவிட்டது. சேப்பாக்கம் முதல்கொண்டு எங்கு சென்றாலும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது சிஎஸ்கே.  11 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 2 வெற்றிகளையே பெற்றிருக்கிறது. கடைசி இடத்தில் தவித்துக்கொண்டிருக்கும் சிஎஸ்கேவுக்கு இன்னும் 3 லீக் போட்டிகளே உள்ளன. கேகேஆர், ராஜஸ்தான், குஜராத் என மூன்று அணிகளுடன் மோத இருக்கின்றன. இதுவரை சிஎஸ்கே (CSK) ஒரு சீசனில் புள்ளிப்பட்டியலின் … Read more

இறுதி கட்டத்தில் ஐபிஎல் 2025.. பிளே ஆஃப் செல்லப்போகும் அந்த 4 அணி எது?

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 15 லீக் ஆட்டங்களுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய மூன்று அணிகளை தவிர்த்து மீதமுள்ள 7 அணிகளும் தற்போது வரை பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.  தற்போதைய நிலவரபடி புள்ளிப்பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்திலும் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் மும்பை மற்றும் குஜராத் … Read more

மீண்டும் இந்திய அணியின் கேப்டன் ஆகும் விராட் கோலி? பிசிசிஐ திட்டவட்டம்!

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2 ஆண்டுகளில் 2 உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது. டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால் டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து செளதப்பி வருகிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடுத்தடுத்து மோசமான தோல்விகளை இந்திய அணி சந்தித்திருந்தது. இத்தொடர்களில் மூத்த வீரர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்காததே தோல்விகளுக்கு காரணமாக இருந்தது. அதனால் ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோரை அணியில் இருந்து நீக்க … Read more

மீண்டும் கேப்டன்சி பொறுப்பை கேட்கும் சீனியர் வீரர்? மறுப்பு தெரிவித்த பிசிசிஐ!

தற்போது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதத்துடன் இந்த தொடர் முடிவடையுள்ள நிலையில், அடுத்ததாக ஜூன் 20ஆம் தேதி இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளது தேசிய தேர்வுக்குழு. இதுவரை நடைபெற்ற இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்தியா விளையாடியது. ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் உலக … Read more

குஜராத் அணிக்கு நல்ல செய்தி… மீண்டும் களம் திரும்பும் ககிசோ ரபாடா

கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. இவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், சொந்த காரணத்திற்காக உடனடியாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். இவர் மீண்டும் எப்போது அணியில் இணைவார் என எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருளை (recreational drug) ரபாடா பயன்படுத்தியதாக தெரியவந்ததால் அவருக்கு இடைக்கால தடை … Read more

ஐபிஎல் 2025 உடன் தோனி ஓய்வு உறுதி! இந்த சீசன் விளையாடுவதற்கே இதுதான் காரணம்!

இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார், அதேபோல ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து இதுவரை 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு தனது கேப்டன்சி பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து ஒரு வீரராக மட்டுமே சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ருதுராஜ்க்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர் முழுவதும் இருந்து விலகியதால் தோனி … Read more

மும்பையின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுமா குஜராத்..? – இன்று மோதல்

மும்பை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 … Read more

ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது; பரிந்துரை பட்டியல் வெளியீடு

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஜிம்பாப்வேயின் பிளெசிங் முசரபானி, வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ், நியூசிலாந்தின் பென் சியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிறந்த … Read more