இந்து தமிழ் திசை செய்தி எதிரொலி | மலை கிராமங்களில் அம்மை நோய் பரவலை தடுக்க மருத்துவ முகாம் @ ஓசூர்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அதன் சுற்றி உள்ள மலைகிராமங்களில் அம்மை நோய் பரவலை தடுக்க மருத்துவ முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அதன் சுற்றி உள்ள பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. தற்போது நிலவும் சீதோசன நிலை மாற்றத்தால் தேன்கனிக்கோட்டை அடுத்த பேவநத்தம், காடுலக்கசந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள் அம்மை தாக்கி உள்ள குழந்தைகளுக்கு மருத்துவமனைக்கு செல்லாமல், இயற்கை வைத்தியம் மூலம் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பழைய கொடிமரங்கள் மாயம்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கும்பாபிஷேக பணியின் போது அகற்றப்பட்ட இரு பழைய கொடிமரங்கள் மாயமானது குறித்து பிரசாத கடை ஒப்பந்தம் எடுத்த ராமர் என்பவர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா புகார் அளித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளரிடம் கடந்த 29-ம் தேதி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘ ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் … Read more

“அமலாக்கத் துறை கதவை தட்ட தேவையில்லை; நாங்கள் திறந்தே வைத்துள்ளோம்” – அமைச்சர் துரைமுருகன்

காட்பாடி: எங்கள் வீட்டு கதவை அமலாக்கத் துறை தட்ட தேவையில்லை. அதை நாங்கள் திறந்தே வைத்திருக்கிறோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து பாலாறு வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் ரூ.6 கோடியே 32 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்து கால்வாய் சீரமைப்புப்பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். … Read more

'சின்னவர்', 'வாழும் பெரியார்' பட்டப்பெயர்களே வேண்டாம் – அமைச்சர் உதயநிதி அன்பு கட்டளை

Udhayanidhi Stalin: சின்னவர், வாழும் பெரியார் போன்ற பட்ட பெயர் வேண்டாம் என்றும் அவற்றை தவிர்த்துவிடுமாறும் திமுக பாகநிலை முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

“வாக்காளர்கள் தங்களின் சிந்தனைக்கேற்ப வாக்களிக்க  இயலவில்லை” – முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் வருத்தம்

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில், அண்ணா நினைவு நாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிகக்கு கல்லூரி முதல்வர் புவனேசுவரன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் சாந்தி வரவேற்றார். பேராசிரியர் கபிலன் அறிமுகவுரையாற்றினார். ‘அண்ணாவின் தமிழ்க் கனவு ’ எனும் தலைமையில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பங்கேற்று பேசியது: அண்ணா ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்தவர். தம் அறிவால் உயர்ந்தவர். பெரியாரோடு இணைந்தவர். நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக உருவாக்கியவர். பாராளுமன்றத்தில் தனது கன்னிப் … Read more

பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் தற்கொலை!

மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் பல சமப்வங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இளைஞர்கள் சிலர் இதில் மூழ்கியதால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், அது தொடர்பான சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.

90 டிஎம்சி நிலுவை நீரை காவிரியிலிருந்து பெற அழுத்தம் தர வேண்டும்: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “திமுக அரசு தங்களது சுய லாபத்தையும், காங்கிரஸ் உடனான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியையும், கர்நாடகாவில் முதலீடு செய்து நடத்தும் தங்களது தொழில் நிறுவனங்களின் நன்மைகளையும் விடுத்து, எதிர்வரும் கோடையில் ஏற்படும் கடும் குடிநீர் தேவையை சமாளிக்க தமிழகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, கர்நாடக காங்கிரஸிடம் திரைமறைவு வேலைகள் செய்யாமல், கர்நாடகம் நமக்குத் தர வேண்டிய சுமார் 90 டி.எம்.சி. நிலுவை நீரை முழுமையாகப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அழுத்தத்தை தர வேண்டும்” என்று அதிமுக … Read more

ராஜ் சத்யன் vs சரவணன் | செலவு செய்ய தயங்கும் முக்கிய நிர்வாகிகள் – மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் யார்?

மதுரை: எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை, மதுரை மாவட்டம் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள மாவட்டமாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி கே.பழனிசாமி காலத்தில் நடந்த கடந்த சட்டசபை தேர்தலில் கூட அதிமுக ஆட்சியை இழந்தாலும், மதுரையில் மொத்தமுள்ள 10 சட்டசபை தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. மற்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு சவாலான வாக்குகளை அதிமுக பெற்றிருந்தது. அதனால், திமுக ஆளும் கட்சியாகவே இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் அக்கட்சிக்கு இணையாக அதிமுக வலுவாகவே உள்ளது. … Read more

“அமைச்சர் துரைமுருகனை விட எனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும்” அண்ணாமலை பேட்டி!

அமைச்சர் துரைமுருகனை விட, தனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். 

“கண்டா வரச் சொல்லுங்க!” – போஸ்டர் ஒட்டி மாறி மாறி கலாய்க்கும் திமுக – அதிமுக @ மதுரை

மதுரை: மக்களவைத் தேர்தல் நெருங்கும்நிலையில், தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்காத நிலையில் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்று திமுகவும், அதிமுகவும் போஸ்டர் ஒட்டி கலாய்த்து கொண்டு, தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மக்கவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றது. அக்கட்சிகளின் 39 எம்பிக்களின் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடுகளையும், அவர்கள் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என சுட்டிக்காட்டியும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் ‘கண்டா வரச் … Read more