கோயில் திருவிழாவுக்கு அழைத்து வந்தபோது லாரியில் இருந்து தவறி விழுந்த யானை சிகிச்சை பலனின்றி சாவு

விருதுநகர்: விருதுநகரில் கோயில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானை, லாரியில் இருந்து கீழே இறக்கியபோது தவறி விழுந்து காயமடைந்தது. இதற்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை இறந்தது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஷேக்முகமது. இவர் லலிதா என்னும் யானையை பராமரித்து வந்தார். கடந்த ஜனவரி 1ம் தேதி விருதுநகர் ராமர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, யானை லாரியில் கொண்டு வரப்பட்டது. விருதுநகரில் மதுரை ரோட்டில் உள்ள காலியிடத்தில் … Read more

”போலி ஆவணம் மூலம் சொத்தை அபகரித்துவிட்டார்கள்” – கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் சகோதரர்கள் மனு

போலி ஆவணம் மூலம், ஆள்மாறாட்டம் செய்து தங்களுடைய சுமார் 1 கோடி மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரிப்பு செய்துவிட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் சகோதரர்கள் நான்கு பேர் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெலத்தூர் கிராமத்தை சார்ந்த ரமேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுடைய இரண்டு ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவினைக் கொடுத்தனர். அந்த மனுவில், “கிருஷ்ணகிரி … Read more

சனாதன இந்து தர்ம எழுத்து மாநாட்டுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி!

சனாதன இந்து தர்ம எழுத்து மாநாட்டுக்கு அனுமதி அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற வேலையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரின் அந்த மனுவில், “தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் ‘சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஆதீனங்கள், சன்னியாசிகள், … Read more

தலைமறைவாக இருந்த ஆபாச வீடியோ பாதிரியார் கைது!!

பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த கன்னியாகுமரி பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்தனர். விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த மத போதகர் பெனடிக்ட் ஆன்டோ (29) கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் பணியாற்றினார். இந்நிலையில் கடந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பாதிரியார் ஆன்டோ ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோ, புகைப்படம், … Read more

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்… முக்கிய அறிவிப்புகள் என்னென்ன…? – முழு விளக்கம்

2023-24ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது, நிலப்பதிவு கட்டணம் குறைப்பு, புதிய மினி டைடல் பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி … Read more

வார்டுகளில் கவுன்சிலர்களின் குடும்பத்தினர் தலையீடு: மதுரையில் காற்றில் பறக்கும் பெண் பிரதிநிதிகள் அதிகாரம்

மதுரை: மதுரை மாநகராட்சியில் கட்சி பாராபட்சமில்லாமல் பெண் கவுன்சிலர்களின் வார்டுகளில் அவர்கள் கணவர், குடும்ப உறுப்பினர்கள் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். பெண்களும் அதிகார அமைப்புகளில் பங்கேற்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் 2016-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்துகளில் பெண்கள் உள்ளாட்சி அமைப்பு தலைவர்ராகவும், கவுன்சிலர்களாகவும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் … Read more

'எல்லார்க்கும் எல்லாம்'.. நமது பயணம் வெல்லும்.. முக ஸ்டாலின் உறுதி.!

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: திராவிட மாடல் அரசின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘திராவிட மாடல்’ என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டு வெளியாகி உள்ளது. ‘திராவிட மாடல் என்றால் என்ன?’ என்று கேட்டவர்களுக்கு, “அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்று நான் பதில் அளித்தேன். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து … Read more

Exclusive: சென்னையில் மாவா விற்பனை படு ஜோர்! காவல்துறைக்கு ரூ.10,000 கட்டிங்! லீக்கான வீடியோ!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் “ராயல் பான் ஷாப்” என்ற கடையில் வெளிப்படையாக கஞ்சா, குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தீய போதை பழக்கங்களுக்கு அடிமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கடையில் போதை வஸ்துகள் சகஜமாய் விற்பனை செய்யப்படுவதை அறிந்து, பலரும் இக்கடையை நோக்கி படையெடுக்கும் சூழல் அதிகரித்துள்ளதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.  போலீஸாருக்கு லஞ்சம் இது தொடர்பாக நேயர் ஒருவர் நமது ஜீ … Read more

ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்து இருக்க வாய்ப்பில்லை: சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!

கோவை: பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க வாய்ப்பில்லை. எங்களை படிக்க வைத்த சத்குருவிற்கு நன்றி” என ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் பழங்குடி மாணவிகள் தெரிவித்தனர். ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஈஷாவில் உள்ள சிவாங்கா குடிலில் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் … Read more