Tamil news today live: ஓ.பி.எஸ் மேல் முறையீட்டு மனு; ஐகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணை

Tamil news today live: ஓ.பி.எஸ் மேல் முறையீட்டு மனு; ஐகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணை Source link

மதுரையில் பரபரப்பு – பிறந்த குழந்தையை விற்க சொல்லிய தாய் உள்பட 4 பேர் கைது.!

கடந்த 25 ஆம் தேதி மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிறந்து ஒரு சில நாட்கள் ஆன பெண் குழந்தையை பெண் ஒருவர் சிகிச்சைக்காக கொண்டு வந்தார்.  அவருக்கும் அந்த குழந்தைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்ததால் செய்விலியர்கள் குழந்தையின் தாய் யாரென்று கேள்வி கேட்டனர். அதற்கு அந்த பெண் பதில் சொல்லாமல் திணறியதால் சந்தேகமடைந்த செவிலியர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவர் … Read more

வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையம் உருவாகி வருகிறது. இதன் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த புதிய முனையத்தின் கீழ் தளத்தில் பயணிகளின் உடமைகளை கையாள விசாலமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தரை தளத்தில் சர்வதேச பயணிகள் வருகை பகுதியாகவும், பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகளும் கையாளப்படும். 2-வது தளத்தில் பயணிகளுக்கான புறப்பாடு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. … Read more

ஆசிரியர் பணிக்கான டெட் 2-ம் தாள் தேர்வு: வெறும் 6 சதவீதம் பட்டதாரிகளே தேர்ச்சி

சென்னை: ஆசிரியர் பணிக்கான டெட் 2-ம் தாள்தேர்வில் 2.54 லட்சம் பேர் பங்கேற்றதில் 6 சதவீத பட்டதாரிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு இரு தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் … Read more

ஓபிஎஸ் மேல்முறையீடு; ஒருநாள் தள்ளி போச்சு… இன்று நடக்கும் வழக்கு விசாரணை!

அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வந்ததும் எல்லா விஷயங்களும் அதிரடியாக நடக்கத் தொடங்கின. அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் அதிகாரப்பூர்வ சான்றிதழை எடப்பாடி கையில் கொடுக்க, அதன்பிறகு நடந்த விஷயங்கள் எல்லாம் மாறி மாறி தலைப்பு செய்திகளானது. அவ்வளவு தான் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என சில கொந்தளிக்க, அவரோ மீண்டும் சட்டப் போராட்டத்திற்கு தயாராகி விட்டார். சிவில் உரிமையியல் வழக்கு என்பதால் அடுத்தடுத்து … Read more

தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் தப்பி செல்லாத வகையில் நடவடிக்கை: வேலூரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

வேலூர்: ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் தப்பி செல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வேலூரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வயது முதல் 21 வயது வரை குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 42 பேர் தங்கியுள்ளனர். இதில் 6 பேர், கடந்த 27ம் தேதி இரவு பாதுகாவலரை தாக்கிவிட்டு தப்பினர். அவர்களை … Read more

கலாஷேத்ராவில் ஆசிரியர் மீது பாலியல் புகார்: தேசிய மகளிர் ஆணையத் தலைவி விசாரணை

கலாஷேத்ராவில் ஆசிரியர் மீது பாலியல் புகார்: தேசிய மகளிர் ஆணையத் தலைவி விசாரணை Source link

மகளின் பிரசவத்திற்காக வந்த தாய்.!  மருத்துவமனையில் தூக்கு போட்டு உயிரிழந்த சம்பவம்.!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அயன் தத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமசாமி-அசலாம்பாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் லலிதா கடந்த 25 ம் தேதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு உதவியாக தாய் அசலாம்பாள் இருந்து வந்தார். அப்போது அசலாம்பாள் தனக்கு தானே பேசிக்கொண்டும், சற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த அசலாம்பாள் மருமகன் சிலம்பரசன் தனது மாமனார் … Read more

இந்தாண்டு உதகை மலர் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுகிறது..!!

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். மலர் மற்றும் பழ கண்காட்சி குழுவில் தோட்டக் கலைத் துறை இயக்குநர் மற்றும் குழுத் தலைவர், நீலகிரி … Read more

தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களில் ‘டெலி மெடிசின்’ மூலம் உயர் மருத்துவ சேவை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

சென்னை: தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களில் டெலி மெடிசின் மூலம் உயர்மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள மொத்தம் 2,227 ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிராமப்புறங்களில் மட்டும் 1,800 உள்ளன. கிராமப்புற மக்கள்பெரும்பாலும் மருத்துவ தேவைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களையே நம்பியுள்ளனர். அருகில் மாவட்ட தலைமை மருத்துவமனையோ, மருத்துவக் கல்லூரிமருத்துவமனையோ இல்லாதபட்சத்தில், அவர்களுக்கு உயர் சிகிச்சைகள், முக்கிய மருத்துவ ஆலோசனைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. … Read more