பாம்பனில் தடைசெய்யப்பட்ட சேட்டிலைட் போன் வைத்திருந்த நபர் கைது..!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் சிக்னல் வந்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட உளவுத்துறை அதிகாரிகள், பாம்பனை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.  ஜான்பவுல் என்ற அந்த நபர், குந்துகால் கடற்கரை அருகே கீழே கிடந்த சேட்டிலைட் போன், இலங்கை ரூபாய் நோட்டுகள் மற்றும் இலங்கை தேசிய அடையாள அட்டையை எடுத்து வைத்திருந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாள அட்டையை சோதனை செய்தபோது, அது … Read more

நிலக்கரி சுரங்க விவகாரம் | சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் அளிப்பார்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுக்க மத்திய அரசு ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக முதல்வர் தமிழக சட்டப்பேரவையில் விளக்கம் அளிப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இளைஞர் நலன் மட்டும் … Read more

காவிரி டெல்டாவில் நிலக்கரி திட்டத்துக்கு அனுமதி இல்லை: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதாகவும் ஓரத்தநாடு தாலுகாவில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த … Read more

முதல்ல தமிழ்நாட்டுல சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்க! நீட் தேர்வுக்கு காரணமான திமுக! விளாசிய அன்புமணி இராமதாஸ்!

நேற்று நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, முதல்வர் பேசி இருந்தார். இதுகுறித்து இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு அன்புமணி இராமதாஸ், “முதலில் அவர் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். பீகார் முதல்வர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். அதனை இப்போது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.  ஆளக்கூடிய பாஜக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. அந்த எண்ணமே அவர்களுக்கு … Read more

இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!!

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதன்படி, கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.44, 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 44,280 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை சரிவு இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று அதிரடியாக ஏற்றம் கண்டிருக்கிறது. … Read more

காவேரிப்பாக்கம் அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் இருசக்கர வாகன ஓட்டி பலி

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அதிவேகமாக வந்த லாரி பின்னால் மோதியதில் இருசக்கர வாகனம் லாரிக்கு அடியில் சிக்கி தீப்பிடித்து எரிந்து ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். சுமைதாங்கி அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியுள்ளது. இருசக்கர வாகனம் எரிந்ததில் வாகன ஓட்டி கருகிய நிலையில், மளமளவென பரவிய தீயினால் டிப்பர் லாரியும் எரியத் தொடங்கியதையடுத்து, தகவல் … Read more

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள்: தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் பணிகளை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் இன்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக … Read more

காவிரி டெல்டாவில் நிலக்கரி திட்டமா? தமிழக அரசு அனுமதிக்காது – அமைச்சர் உதயநிதி உறுதி!

தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதியளிக்காது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதாகவும் ஓரத்தநாடு தாலுகாவில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடையே பேசியுள்ளார். … Read more