முதல்வர் வாக்குறுதியின்படி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக வணிகர் சங்க தலைவர் கோரிக்கை

கும்பகோணம்: முதல்வர் வாக்குறுதி அளித்தது போல் கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்க மாநாடு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”ஈரோட்டில் வரும் மே 5-ம் தேதி நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டில், மத்திய, மாநில அரசுகள், சாமானிய மக்களை பாதுகாப்பது … Read more

அரியலூரில் அனிதா நினைவு அரங்கம் திறப்பு நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம் தொடரும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அரியலூர்: ‘நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம் தொடரும்’ என்று அரியலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 700 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த மருத்துவமனையை திறந்து வைத்ததுடன் ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் 2,539 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தேர்தல் பிரசாரத்தில் நான் நீட் தேர்வு ரகசியம் … Read more

"எனக்கு பசிக்கும்ல." போலீசுக்கு போன் போட்டு இளைஞர் செய்த செயல்.. விசாரணையில் பங்கமான வாக்குமூலம்.!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  சென்னையிலிருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் ஈரோடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர்  அவசர நிலையில் இதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஈரோடு காவல்துறை சூப்பர் ரயில்வே போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்ட காவலர்கள் பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் தீவிரமான சோதனையை நடத்தினர். அப்பகுதிகளில் ஒன்று விடாமல் எல்லா … Read more

Migrant care | புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய செயலி: அறிமுகம் செய்த சேலம் மாநகர காவல் ஆணையர்

சேலம்: சேலம் மாநகர பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, புதிய செயலியை காவல் ஆணையர் விஜயகுமாரி அறிமுகம் செய்து வைத்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக சேலம் மாநகர காவல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலி பயன்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி அறிமுகப்படுத்தினார். சேலம் மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களின் நலனை பேணி காக்கவும், தனியார் கல்லூரியுடன் இணைந்து, … Read more

தமிழகத்தில் முதன்முறையாக நன்னீர் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் இணைந்து ரூ.1.46 கோடியில் நாகன்தாங்கல் எரி புனரமைக்கப்பட்டு கற்றல் மையம்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

ஆவடி: தமிழகத்தில் முதன்முறையாக நன்னீர் திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் இணைந்து ரூ.1.46 கோடியில் கற்றல் மையம் அடங்கிய புனரமைக்கப்பட்ட நாகன்தாங்கல் ஏரியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். ஆவடி அடுத்த பொத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நாகன்தாங்கல் ஏரி உள்ளது. 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பயனற்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், டாடா கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனம் மற்றும் பிச்சாண்டிக்குளம் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ரூ.1.46 கோடி  செலவில், … Read more

முதல்வர் குறித்து அநாகரிகமான பேச்சு… அவரின் தரம் அவ்வளவுதான் : இ.பி.எஸ் குறித்து கே.என்.நேரு விமர்சனம்

முதல்வர் குறித்து அநாகரிகமான பேச்சு… அவரின் தரம் அவ்வளவுதான் : இ.பி.எஸ் குறித்து கே.என்.நேரு விமர்சனம் Source link

ஈரோட்டில் மாட்டிறைச்சி கடைகள் அகற்றம்! கொந்தளிக்கும் திமுகவின் கூட்டணி கட்சி! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்!

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தையில் சுமார் 50 ஆண்டு காலமாக 13 அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் நடத்தி வந்த மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்டுள்ளதை மீண்டும் அதே இடத்தில் நடத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் அந்த கடிதத்தில், “ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட … Read more

புதுச்சேரி | சரியான நேரத்துக்கு பணிக்கு வராத அரசு ஊழியர்கள் 13 பேருக்கு விடுப்பு – ஆய்வில் கலெக்டர் அதிரடி

புதுச்சேரி: கால்நடைத்துறையில் ஆட்சியர் மணிகண்டன் ஆய்வுக்கு சென்றபோது சரியான நேரத்துக்கு பணிக்கு வராமல் இருந்த துணை இயக்குநர்கள் உட்பட 13 பேருக்கு விடுப்பு தந்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்ற புகார் பரவலாக இருந்து வந்தது. மேலும் சில சமூக ஆர்வலர்கள் காலையிலே அரசு அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள நிலைமைகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டும் நிலைமை சீராகவில்லை. … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த புதிய கட்டிடத்தில் நாளை முதல் மாநகராட்சி அலுவலகம் இயங்கும்: ஆவணங்கள் அனைத்தும் இடமாற்றம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் நாளை முதல் புதிய கட்டிடத்தில் செயல்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர். நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.10.50 கோடியில், நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் அண்ணா ஸ்ேடடியம் அருகில் கலைவாணர் கலையரங்கம் செயல்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு கலைவாணர் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை, கடந்த 7ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கீழ்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் மொத்தம் 56,809 சதுர … Read more