நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

தமிழ் மாதங்களில் 12வது மாதம் பங்குனி, 27 நட்சத்திரங்களில் 12வது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும். எனவேதான் பன்னிரு கை வேலவனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 5) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் … Read more

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் கொடுத்தது மாநில உரிமை மீறல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது, மாநில உரிமையை மீறிய செயல்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எடுப்பதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு மத்திய அரசு அதை கைவிட்டது. நாட்டின் … Read more

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்: மாநில அரசை கைகாட்டும் வானதி சீனிவாசன்

பாஜக சட்டமன்ற உறுப்பினர் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது விசாகா கமிட்டி, ராகுல் காந்தியின் வழக்கு, கலாசேத்ரா விவகாரம், காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசினார். கோவை ராம்நகர் பகுதியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான கலந்து கொண்டு துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை! அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், … Read more

#திடீர்திருப்பம் | ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு! அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பம்! 

ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, அதிமுக தலைமை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பதில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று, நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செயற்குழுவும் ரத்து என அறிவிப்பு வெளியாகி இருப்பது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி … Read more

தமிழகத்தில் மற்றுமொரு கொரோனா பலி..!!

தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகாரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த … Read more

பாம்பனில் தடைசெய்யப்பட்ட சேட்டிலைட் போன் வைத்திருந்த நபர் கைது..!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் சிக்னல் வந்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட உளவுத்துறை அதிகாரிகள், பாம்பனை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.  ஜான்பவுல் என்ற அந்த நபர், குந்துகால் கடற்கரை அருகே கீழே கிடந்த சேட்டிலைட் போன், இலங்கை ரூபாய் நோட்டுகள் மற்றும் இலங்கை தேசிய அடையாள அட்டையை எடுத்து வைத்திருந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாள அட்டையை சோதனை செய்தபோது, அது … Read more

நிலக்கரி சுரங்க விவகாரம் | சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் அளிப்பார்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுக்க மத்திய அரசு ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக முதல்வர் தமிழக சட்டப்பேரவையில் விளக்கம் அளிப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இளைஞர் நலன் மட்டும் … Read more

காவிரி டெல்டாவில் நிலக்கரி திட்டத்துக்கு அனுமதி இல்லை: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதாகவும் ஓரத்தநாடு தாலுகாவில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த … Read more