வீடியோ காலில் ‘பாவம்’.. நேரில் வந்தால் ‘மன்னிப்பு’.. இளம் பாதிரியார் ‘ஓட்டம்’..! ஆதாரங்களுடன் பெண் பரபரப்பு புகார்..!

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு பாவமன்னிப்பு கொடுப்பதாக அத்துமீறிய இளம் பாதிரியாரை தட்டிக்கேட்ட சட்டகல்லூரி மாணவர் மீது பொய்யான புகார் அளித்து போலீசில் சிக்க வைத்திருப்பதாக மாணவனின் தாய் ஆதாரங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகரை சேர்ந்த இளம் பாதிரியார் பெனடிக் ஆன்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த ஆண்டோ, சட்டக் கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜியோ தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக … Read more

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தியை ரிலே நீச்சலில் 7 பேர் நீந்தி கடந்து சாதனை

ராமேசுவரம்: இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங் களில் பெங்களூருவைச் சேர்ந்த 7 பேர் ரிலே நீச்சல் முறையில் கடந்து சாதனை படைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பிரஷாந்த் ராஜண்ணா(44), ராஜசேகர் துபரஹள்ளி(52), ஜெய்பிரகாஷ் முனியல் பாய் (55), அஜத் அஞ்சனப்பா(40), சுமா ராவ் (53), சிவரஞ்சினி கிருஷ்ணமூர்த்தி (40), மஞ்சரி சாவ்ச்சாரியா(45) ஆகியோர், அங்குள்ள நீச்சல் அறக்கட்டளை ஒன்றில் பயிற்சி பெற்றனர். நீச்சலில் சாதனை … Read more

திண்டிவனத்தில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் எச்.ராஜா, வேலூர் இப்ராஹிம் கைது: பாஜ-விசிக போட்டி போராட்டம் பஸ் கண்ணாடி உடைப்பு

திண்டிவனம்: திண்டிவனத்தில் அனுமதியின்றி ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த எச்.ராஜா, வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாஜ அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பாஜ மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர். இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று விசிக மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் கட்சியினர் … Read more

அதிர்ச்சி தகவல்..!! நேற்று நடைபெற்ற +1 தமிழ் தேர்வில் 12,660 பேர் எழுதவில்லை..!!

2022-2023 கல்வி ஆண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடும் முழுவதும் நடத்தப்படும் இந்தப் பொதுத் தேர்வில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்களும், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகளும் 1 முன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் தேர்வு எழுதவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. தனித் தேர்வர்களை பொறுத்த வரை 2 ஆயிரத்து 356 … Read more

மின்வாரிய வலைதளங்களை கையாளும் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்க முடிவு

சென்னை: முகநூல், ட்விட்டர், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் தமிழ்நாடு மின்வாரியம் ‘TANGEDCO Official’ என்ற பெயரில் அதிகாரப்பூர்வ கணக்குகளை வைத்துள்ளது. இந்த வலைதளங்கள் மூலமாக, கூடுதல் மின்கட்டண வசூல், சேதமடைந்த மின்சாதனங்களை மாற்றுதல் உள்ளிட்டவை குறித்து மின்நுகர்வோர் புகார் அளித்து வருகின்றனர். இந்த புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்த்து வைக்கின்றனர். இந்த சமூக வலைதள கணக்குகளை மின்வாரிய பொறியாளர்களே தற்போது கையாள்கின்றனர். அதுவும், அலுவலக நேரத்தில் மட்டுமே இந்த கணக்குகள் … Read more

திருப்போரூர் பூ, மாலை கடைகளில் பிளாஸ்டிக் பை தடை குறித்து விழிப்புணர்வு

திருப்போரூர்  மறைமலைநகர் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார் மற்றும் திருப்போரூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் இணைந்து திருப்போரூர் கந்தசுவாமி கோயிலை சுற்றி உள்ள பூ, மாலை, பொரி விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பூ, மாலை போன்றவற்றை பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும், தாமரை இலை, மந்தாரை இலை போன்றவற்றை பயன்படுத்தி பூக்கள், மாலைகளை வழங்கலாம் அல்லது குறைந்த விலையில் தயார் செய்யப்படும் மஞ்சள் … Read more

இனிமேல் திருப்பதியில் இலவச லட்டு பெற இயலாது..!!

திருமலை அன்னமையா பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செயல் அதிகாரி தர்மா, “ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் 5 முதல் 10 நிமிடங்களில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் இந்த தொழில்நுட்பத்தால் அறைகளை வேறு சிலர் இடைதரகர் மூலம் சுழற்சி முறையில் பயன்படுத்துவது குறைந்துள்ளது. இடைத்தரகர் முறையை ஒழிக்க இந்த தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். அறைகளுக்கு பெயர் பதிவு செய்யும் போது, ​​முகம் செய்யும் சாதாரண … Read more

வங்கியில் நகை அடமானம் வைக்க வந்தவரிடம் 15 சவரன் கொள்ளையடித்த 3 பேர் கைது..!

வேலூர் மாவட்டத்தில் வங்கியில் நகையை அடமானம் வைக்க வந்த நபரை பின்தொடர்ந்து வந்து, 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றவர்களை சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 7ஆம் தேதி வேலப்பாடி ஆரணிசாலையில் உள்ள வங்கியில் நகையை அடமானம் வைக்க வந்த லோகோஷ்குமார் என்பவர், தேவையான அளவு பணம் கிடைக்காததால் அதனை திருப்பி எடுத்துச்சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வங்கி வாசலிலேயே வைத்து நகை பையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இரண்டு பைக்குகளில் நான்கு பேர் … Read more

மண் வளம் காத்து, விவசாயிகள் வருவாயை பெருக்க அங்கக வேளாண்மை கொள்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

சென்னை: வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-ஐ (TamilNadu Organic Farming Policy) முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது அங்கக வேளாண்மை கொள்கையின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021-2022-ம் ஆண்டுக்கான வேளாண்மை – உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், ‘அதிக அளவு பயன்படுத்தப்பட்ட … Read more

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி அரசு பணியாளர்கள் ஆர்வம் குறித்து சிறப்பு பட்டிமன்றம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில், அரசு பணியாளர்கள் ஆர்வம் குறித்து சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.  தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றபெற்ற டிசம்பர்27, 1956ம் ஆண்டை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 9ம்தேதி முதல் 16ம்தேதி வரை தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா நடைபெறும். இதில், கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், … Read more