பொதுத் தேர்வு | கோயில் திருவிழாவில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க ஐகோர்ட் அறிவுரை

சென்னை: பொதுத் தேர்வு நேரத்தில், கோயில் திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரியும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த … Read more

மோடியை சந்தித்த தம்பிதுரை: எடப்பாடி அனுப்பிய தூது? என்ன காரணம்?

அதிமுகவில் டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றால் தம்பிதுரையை அனுப்புவார். தம்பி துரையும் மோடி முதல் எந்த தலைவரையும் சந்தித்து கடத்த வேண்டிய தகவலை கடத்தி உரிய பதிலைப் பெற்று எடப்பாடி பழனிசாமியிடம் சேர்த்துவிடுவார். சமீபத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை இரு அணிகளில் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதுமட்டுமல்லாமல் பாஜகவும் தாங்கள் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி … Read more

தமிழகத்தில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? அமைச்சர் மா.சு. விளக்கம்!

Minister Ma Subramanian About H3N2 Flu: சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை மற்றும் சாலை விபத்துகளுக்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையை  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஐஐடி நிர்வாக இயக்குநர் காமகோடி ஆகியோர் வெளியிட்டனர். இந்திய அளவில் சாலை விபத்தில் ஒரு ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழ்நாட்டில் 17 ஆயிரம் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த அந்த ஆய்வறிக்கையானது இன்று வெளியிடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அமைச்சர் … Read more

காதலன் இறந்த சோகத்தில் காதலி தற்கொலை

பெரம்பூர்: நாடு முழுவதும் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால், தங்களின் கையில் உள்ள செல்போன்களில் வரும் சமூக வலைதளப் பக்கங்களை மேய்ந்து வரும் பள்ளி மாணவ-மாணவிகள், குறிப்பிட்ட வயது வருவதற்கு முன்பே காதல்வயப்பட்டு பல்வேறு தவறான முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் சிறுவர்கள் பலரை போலீசார் போக்சோ பிரிவின்கீழ் கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.இதில் பள்ளி மாணவிகள் முன்பின் … Read more

"அமைச்சர் உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் காமெடியாக உள்ளது" – டிடிவி தினகரன்

“திமுகவுக்கு 60 மாதங்களில் வரவேண்டிய கெட்ட பெயர் 20 மாதங்களில் வந்துள்ளது. அமைச்சர் உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் காமெடியாக உள்ளது” என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்துக்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் … Read more

புதுச்சேரியில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த எதிர்ப்பு; தி.மு.க– காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரியில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த எதிர்ப்பு; தி.மு.க– காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு Source link

#BREAKING: கோயில் திருவிழாக்களில் ஒலிபெருக்கியை தவிர்க்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் ..!!

சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கோயில் திருவிழாக்கள் நடைபெற உள்ளது. அதில், கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிற வேளையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியால் மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் ஏற்படும். இதனால் மாணவ, மாணவிகளின் கவனம் திசை திரும்பும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சேலம் ஜாரிகொண்டலாம்பட்டியில் உள்ள கோயிலில் பங்குனி விழாவை பள்ளி தேர்வு முடியும் வரை தள்ளி வைக்க … Read more

தேர்வு மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நேற்று தமிழ் மொழி தேர்வு நடைபெற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுத சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறையில் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் மட்டும் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மாணவி தனக்கு தேர்வு எழுதி கொடுக்க நியமிக்கப்பட்ட … Read more

புதுச்சேரியில் ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு: பேரவையில் வாக்குவாதம்; திமுக, காங். வெளிநடப்பு

புதுச்சேரி: ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.50 கோடியில் டிஜிட்டல் ஸ்மார்ட் மீட்டர் வாங்கியதில் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த திமுக, பாஜக, சுயேட்சை எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: பிஆர்.சிவா (சுயேட்சை): “டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்திய சில பகுதியில் மின் கட்டணம் 10 மடங்கு அதிகமாக வருகிறது. … Read more

தமிழ்நாட்டின் முதல்வர் பிரசாந்த் கிஷோரா? பகீர் கிளப்பும் நாம் தமிழர் சீமான்

சென்னையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பல்லவன் இல்லம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வட இந்திய தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக பேசினார். வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பான போலி வீடியோ வெளியாகி சர்ச்சை கிளம்பிய நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், “தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் … Read more