கிருஷ்ணகிரி ஆணவக் கொலையின் பின்னணி; சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப் பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை நடந்துள்ளது. இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஸ்டாலின் விளக்கம் உடனே முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். பின்னர் பேசிய , கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய … Read more

Online Rummy Ban Bill: காகிதத்தால் அல்ல… இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம்… மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பேரவையில் ஆளுநர் அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்துக்காட்டினார். கனத்த இதயத்துடன்! இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் அவையில் தாக்கல் செய்து பேசியதாவது,”மிகுந்த கனந்த இதயத்துடன் நின்றுகொண்டு உள்ளேன். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த வினோத் ரூ.17 லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அரசிற்கு … Read more

கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீசியதால் பரபரப்பு..!!

கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில்  கவிதா என்ற பெண் மீது சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசியுள்ளார். இதை தடுக்க முயன்ற வழக்கறிஞர்  ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.  மேலும், ஆசிட் வீசிய அந்த நபரை வழக்கறிஞர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், ஆசிட் வீச்சில் காயமடைந்த கவிதா தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, சிவக்குமாரிடம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் கணவரே மனைவி மீது ஆசிட் வீசியது தெரியவந்துள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற … Read more

ஆசிரியரை காலணியால் தாக்கிய சம்பவம் – பாதுகாப்பில்லையென குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு

எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில் ஆசிரியரும், பெண் தலைமை ஆசிரியரும் தாக்கப்பட்ட சம்பவத்தால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர் பெற்றோர்கள். குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், தலைமை ஆசிரியரையும், ஆசிரியரையும் தாக்கியவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள அரசு … Read more

இ-செல்லான்  முலம் உடனடி அபராதம் செலுத்தும் வசதி:  ஆவடி காவல்துறையினர் அறிமுகம்

இ-செல்லான்  முலம் உடனடி அபராதம் செலுத்தும் வசதி:  ஆவடி காவல்துறையினர் அறிமுகம் Source link

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தடையா? திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையிலும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்து உள்ளார். அவரின் உரையில், “ஆன்லைன் சூதட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, முதலில் இயற்றப்பட்ட சட்ட மசோதா, ஆளுநர் எழுப்பிய கேள்விகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக தெரிவித்துள்ளார். மேலும், “மாநில எல்லைக்குள் … Read more

இந்திய கிரிகெட் ரசிகர்களுக்கு இது செம உற்சாகமான நியூஸ்..!!

உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு தான் ரசிகர்கள் அதிகம் இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் அதிக செலவும், விளம்பரமும் செய்யப்படுகிறது. இளைஞர்களிடையே கிரிக்கெட் விளையாட்டு ஒரு எழுச்சியை உருவாக்கி உள்ளது. கபில்தேவ், அசாருதின், கங்குலி, சச்சின், சேவாக், தோனி, கோஹ்லி என அடுத்தடுத்து தங்களது ஆதர்ஷ வீரர்கள் மாறினாலும், இளைஞர்களை விளையாட்டை நோக்கி உற்சாகப்படுத்தியதில் இவர்களின் பங்கு அளப்பரியது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன. இந்தியாவில் கடந்த 1987, … Read more

தமிழக வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்: அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: இந்த பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது.வேளாண் மானிய கோரிக்கையில் உள்ளதே இதில் இடம் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாகத் தெரியவில்லை. சட்டப்பேரவை தேர்தலின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகஆட்சிக்கு வந்தவுடன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலை வழங்கப்படும் என்றார். தற்போது டன்னுக்கு ரூ.195 தரப்படும் கூறப்பட்டுள்ளது. … Read more

அண்ணாமலை: ஒரு ரூபா லஞ்சம் வாங்கியதை நிரூபிச்சு காட்டுங்க பார்க்கலாம்!

தமிழக பாஜகவில் அண்ணாமலை முன்வைத்த அதிமுக கூட்டணி தொடர்பான கருத்து உட்கட்சி பூசலுக்கு வித்திட்டது. கட்சியின் சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன்பிறகு டெல்லியில் இருந்து வந்த எச்சரிக்கையால் சலசலப்பு அடங்கியது. கூட்டணி குறித்து கட்சி மேலிடம் உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று கூறிவிட்டார். அண்ணாமலைக்கு எதிர்ப்பு இருப்பினும் அண்ணாமலைக்கு எதிராக ஒரு கூட்டம் வேலை செய்து வருகிறது என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க மும்முரம் காட்டி வருவதாக … Read more

கிருஷ்ணகிரி கொலை: குற்றவாளி அதிமுகவை சேர்ந்தவர் – ஸ்டாலின் அளித்த பதிலால் அவையில் அமளி!

CM Stalin About Krishnagiri Youth Muder Case: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தங்கவேலு, உபயதுல்லா, சீனிவாசன் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் காதலியும், … Read more